NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் தனியார் பராமரிக்கும் கழிவறை குறித்து புகாரளிக்க க்யூ.ஆர். குறியீடு 
    சென்னையில் தனியார் பராமரிக்கும் கழிவறை குறித்து புகாரளிக்க க்யூ.ஆர். குறியீடு 
    இந்தியா

    சென்னையில் தனியார் பராமரிக்கும் கழிவறை குறித்து புகாரளிக்க க்யூ.ஆர். குறியீடு 

    எழுதியவர் Nivetha P
    April 17, 2023 | 12:08 pm 1 நிமிட வாசிப்பு
    சென்னையில் தனியார் பராமரிக்கும் கழிவறை குறித்து புகாரளிக்க க்யூ.ஆர். குறியீடு 
    சென்னையில் தனியார் பராமரிக்கும் கழிவறை குறித்து புகாரளிக்க க்யூ.ஆர். குறியீடு

    சென்னை மாநகராட்சியில் மொத்தம் 954 பொதுக்கழிப்பறைகள் உள்ளது. இதற்கு எவ்விதக்கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை, எனினும் இதில் பல கழிப்பறைகள் சுத்தமில்லாமல் உள்ளதாக புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தது. இதனைதொடர்ந்து, 'தூய்மை இந்தியா' என்னும் திட்டத்தின்கீழ் 640 கழிப்பறைகளை தனியார் நிறுவனம் கொண்டு பராமரிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கையினை மேற்கொண்டது. இவ்வாறு தனியார்நிறுவனத்திடம் ஒப்படைத்த கழிப்பறைகளில் குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில் 1913 என்னும் எண்ணுக்கு புகாரளிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. தற்பொழுது அதனுடன் சேர்த்து இங்கு எழும் புகார்கள்மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில், தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கழிப்பறைகளிலும் க்யூ.ஆர்.குறியீடு ஒட்டப்பட்டுள்ளது. அந்த குறியீட்டினை நாம் மொபைலில் ஸ்கேன் செய்யும் பட்சத்தில் அதில் ஏழு விதமான புகார்கள் குறித்து விபரங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    வார்டு தூய்மை மேற்பார்வையாளர் மூலம் கழிப்பறைகள் ஆய்வு 

    மேற்கூறியவாறு புகார்கள் குறித்த விபரங்கள் இருக்கும் நிலையில், நாம் கூற வேண்டிய குறையினை தேர்வு செய்து, அதில் உள்ள ஆம், இல்லை என்பதை தேர்வு செய்து அனுப்பினால் உடனடியாக அந்த புகார் சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறைக்கு வழங்கப்பட்ட செயலி மூலம் சென்றடையும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு பதிவாகும் புகார்களை கண்காணிக்கும் அதிகாரிகள் அந்தந்த வார்டு தூய்மை மேற்பார்வையாளர் மூலம் குறிப்பிட்ட கழிப்பறையினை ஆய்வு செய்து உடனே சரி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இதன்மூலம் கழிப்பறைகளின் சுகாதாரம் மேம்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். பணம் வசூலிப்பதை தடுக்கவும், சுகாதாரமாக வைத்திருக்கவும் தமிழக அரசு பல கோடிகளை செலவு செய்து தனியார் நிறுவனங்களிடம் கழிப்பறையினை பராமரிக்க ஒப்படைத்துள்ளது என்றும் அதிகாரிகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சென்னை
    தமிழ்நாடு
    தமிழக அரசு

    சென்னை

    தமிழ் புத்தாண்டு மற்றும் வார இறுதி விடுமுறை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வு  தமிழ்நாடு
     சென்னையில் போக்குவரத்துக்கு ஒரே பயண டிக்கெட்! சட்டப்பேரவையில் அறிவிப்பு தமிழ்நாடு
    புதிய உச்சத்திற்கு மீண்டும் சென்ற தங்கம் விலை - இன்றைய நிலவரம்!  தங்கம் வெள்ளி விலை
    "நாங்க பாத்துகிறோம்..நீங்க ஒடம்ப பாத்துக்கோங்க ஆன்ட்டி": குட்டி பத்மினிக்கு நக்கலாக பதிலளித்த அபிராமி கோலிவுட்

    தமிழ்நாடு

    தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி - நிபந்தனைகள் விதிப்பு  தமிழக காவல்துறை
    தமிழகத்தில் இன்று(ஏப்ரல்.,14) நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் துவக்கம்  கடற்கரை
    தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்: வானிலை அறிக்கை  புதுச்சேரி
    'தமிழ் நமது பெருமை' - ஈஷா நிறுவனர் சத்குரு புத்தாண்டு வாழ்த்து  புத்தாண்டு

    தமிழக அரசு

    'ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை' திட்டம் - தமிழக அரசு எச்சரிக்கை  மத்திய அரசு
    தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி - போலீஸ் அனுமதி  தமிழ்நாடு
    தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் பண்டிகைகளை முன்னிட்டு 500 சிறப்பு பேருந்துகள் இயங்கும்  புத்தாண்டு
    ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தமிழக அரசின் அரசிதழலில் வெளியீடு - தண்டனைகள் குறித்த விவரம் தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023