NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் தனியார் பராமரிக்கும் கழிவறை குறித்து புகாரளிக்க க்யூ.ஆர். குறியீடு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் தனியார் பராமரிக்கும் கழிவறை குறித்து புகாரளிக்க க்யூ.ஆர். குறியீடு 
    சென்னையில் தனியார் பராமரிக்கும் கழிவறை குறித்து புகாரளிக்க க்யூ.ஆர். குறியீடு

    சென்னையில் தனியார் பராமரிக்கும் கழிவறை குறித்து புகாரளிக்க க்யூ.ஆர். குறியீடு 

    எழுதியவர் Nivetha P
    Apr 17, 2023
    12:08 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மாநகராட்சியில் மொத்தம் 954 பொதுக்கழிப்பறைகள் உள்ளது.

    இதற்கு எவ்விதக்கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை,

    எனினும் இதில் பல கழிப்பறைகள் சுத்தமில்லாமல் உள்ளதாக புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தது.

    இதனைதொடர்ந்து, 'தூய்மை இந்தியா' என்னும் திட்டத்தின்கீழ் 640 கழிப்பறைகளை தனியார் நிறுவனம் கொண்டு பராமரிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கையினை மேற்கொண்டது.

    இவ்வாறு தனியார்நிறுவனத்திடம் ஒப்படைத்த கழிப்பறைகளில் குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில் 1913 என்னும் எண்ணுக்கு புகாரளிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.

    தற்பொழுது அதனுடன் சேர்த்து இங்கு எழும் புகார்கள்மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில், தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கழிப்பறைகளிலும் க்யூ.ஆர்.குறியீடு ஒட்டப்பட்டுள்ளது.

    அந்த குறியீட்டினை நாம் மொபைலில் ஸ்கேன் செய்யும் பட்சத்தில் அதில் ஏழு விதமான புகார்கள் குறித்து விபரங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    குறியீடு 

    வார்டு தூய்மை மேற்பார்வையாளர் மூலம் கழிப்பறைகள் ஆய்வு 

    மேற்கூறியவாறு புகார்கள் குறித்த விபரங்கள் இருக்கும் நிலையில், நாம் கூற வேண்டிய குறையினை தேர்வு செய்து, அதில் உள்ள ஆம், இல்லை என்பதை தேர்வு செய்து அனுப்பினால் உடனடியாக அந்த புகார் சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறைக்கு வழங்கப்பட்ட செயலி மூலம் சென்றடையும் என்று கூறப்படுகிறது.

    இவ்வாறு பதிவாகும் புகார்களை கண்காணிக்கும் அதிகாரிகள் அந்தந்த வார்டு தூய்மை மேற்பார்வையாளர் மூலம் குறிப்பிட்ட கழிப்பறையினை ஆய்வு செய்து உடனே சரி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும் இதன்மூலம் கழிப்பறைகளின் சுகாதாரம் மேம்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

    பணம் வசூலிப்பதை தடுக்கவும், சுகாதாரமாக வைத்திருக்கவும் தமிழக அரசு பல கோடிகளை செலவு செய்து தனியார் நிறுவனங்களிடம் கழிப்பறையினை பராமரிக்க ஒப்படைத்துள்ளது என்றும் அதிகாரிகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு
    தமிழக அரசு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சென்னை

    சென்னை விமான நிலைய ஊழியரை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் மறைத்து வைத்த பெண் கைது விழுப்புரம்
    பாலியல் புகாரால் சர்ச்சைக்குள்ளான சென்னை கலாஷேத்ரா கல்லூரி இன்று மீண்டும் திறப்பு கல்லூரி மாணவர்கள்
    சென்னை ஆருத்ரா விவகாரம் - 30 பேர் கொண்ட தனிப்படை அமைப்பு தமிழ்நாடு
    சென்னை நங்கநல்லூரில் 5 அர்ச்சகர்கள் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு கோவில்கள்

    தமிழ்நாடு

    சென்னையில் நடக்கவிருந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டம் தற்காலிக வாபஸ் சென்னை
    சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் 2 புகார்கள் பதிவு சமூக வலைத்தளம்
    தமிழக ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றம் - 144 உறுப்பினர்கள் ஆதரவு ஆர்.என்.ரவி
    புதிய கொரோனா வைரஸின் வீரியம் குறைவாகவே உள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் கொரோனா

    தமிழக அரசு

    மகாத்மா காந்தி சிலைக்கு பதிலாக உழைப்பாளர் சிலை அருகே நடத்த திட்டம் - ஏற்பாடுகள் தீவிரம் இந்தியா
    பி.எம். கிசான் திட்டத்தின் 13வது தவணைத் தொகைக்கு ஆதார் இணைப்பு அவசியம் ஆதார் புதுப்பிப்பு
    போகி பண்டிகையையொட்டி பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் - தமிழக அரசு வேண்டுகோள் காற்று மாசுபாடு
    தமிழில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு பணியில் சேர முடியும் - தீர்மானம் நிறைவேற்றம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025