NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் இனி ரேஷன் கடைகளில் பொருள் வாங்க பணம் தேவையில்லை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் இனி ரேஷன் கடைகளில் பொருள் வாங்க பணம் தேவையில்லை 
    தமிழகத்தில் இனி ரேஷன் கடைகளில் பொருள் வாங்க பணம் தேவையில்லை

    தமிழகத்தில் இனி ரேஷன் கடைகளில் பொருள் வாங்க பணம் தேவையில்லை 

    எழுதியவர் Nivetha P
    May 05, 2023
    06:54 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா முழுவதுமே தற்போதைய காலகட்டத்தில் அனைவருமே தங்கள் கைகளில் உள்ள கைபேசி மூலமே கூகுள் பே, போன் பே போன்ற வசதிகள் மூலம் பண பரிவர்த்தனைகளை செய்து வருகிறது.

    குக்கிராமங்களில் கூட தற்போது QR கோடு மூலம் பணம் செலுத்துகிறார்கள்.

    எனினும் தமிழ்நாடு மாநிலத்தில் தற்போது வரை ரேஷன் கடைகளில் சில்லறைகளை கொடுத்தே சர்க்கரை, கோதுமை, போன்ற பொருட்கள் அனைத்தையும் வாடிக்கையாளர்கள் வாங்கி செல்கிறார்கள்.

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடையில் புது வசதி ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    அதன்படி, டெம்பிள் சிட்டியிலுள்ள காஞ்சிபுர மாநகராட்சிக்குட்பட்ட MVMP ரேஷன் கடையில் QR கோடு மூலம் பணம் செலுத்தும் நடைமுறையினை கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் அறிமுகம் செய்தார்.

    ரேஷன் கடைகள் 

    தமிழகத்தில் உள்ள 22,000க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களில் தேர்தல்

    இத்திட்டத்தினை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் கூறுகையில், தமிழகத்தில் உள்ள 22,000க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களில் தேர்தல் நடத்தும் பணியானது நடக்கவுள்ளது.

    இதன் முதற்கட்டமாக 6,500 கூட்டுறவு சங்கங்களில் ஏப்ரல் 30ம் தேதியுடன் பதவிக்காலம் முடிந்த பணியாளர்களின் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது என்று தெரிவித்தார்.

    இன்று(மே.,5) அரங்கேறிய இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஜெய ஸ்ரீ, கூடுதல் பதிவாளர் முருகன் உள்ளிட்ட கூட்டுறவு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    தமிழ்நாடு

    சமீபத்திய

    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்

    இந்தியா

    5 மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  வானிலை அறிக்கை
    கார் பைக்குகள் விற்கும் நிலைமை ஏற்பட்டது! மஞ்சிமா மோகன் தான் உதவினார் கோலிவுட்
    FASTag மூலம் ஒரே நாளில் ரூ.200 கோடி வசூலைப் பதிவு செய்தது NHAI இந்தியா
    பணமோசடி குற்றச்சாட்டு: கேரளாவில் உள்ள மணப்புரம் பைனான்ஸில் ரெய்டு ரிசர்வ் வங்கி

    தமிழ்நாடு

    தமிழகத்தின் சில மாவட்டங்களில் குறையும் கொரோனா பாதிப்பு  உலகம்
    12 மணி நேர வேலை மசோதாவை திரும்ப பெற்றதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!  ஸ்டாலின்
    அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை எச்சரிக்கை!  கேரளா
    தனியார் பள்ளிகளில் இலவச கல்வி திட்டத்தில் 80,000 பேர் விண்ணப்பம் - தமிழக அரசு  தமிழக அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025