NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / போர்ஷே விபத்தில் 2 பேரை கொன்ற புனே சிறுவனின் தந்தை கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    போர்ஷே விபத்தில் 2 பேரை கொன்ற புனே சிறுவனின் தந்தை கைது 

    போர்ஷே விபத்தில் 2 பேரை கொன்ற புனே சிறுவனின் தந்தை கைது 

    எழுதியவர் Sindhuja SM
    May 21, 2024
    09:30 am

    செய்தி முன்னோட்டம்

    புனேவில் காரை ஓட்டி இரண்டு பேரைக் கொன்ற 17 வயது சிறுவனின் தந்தை புனே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அந்த சிறுவன் மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்தவன் ஆவான்.

    புனேவின் கல்யாணி நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த விபத்து நடந்துள்ளது.

    போலீஸ் அறிக்கைகளின்படி, அந்த 17 வயது இளைஞன் ஓட்டிச் சென்ற சொகுசு போர்ஷே கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியதால், அனிஸ் அவதியா மற்றும் அஷ்வினி கோஸ்டா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    இந்த விபத்து சிசிடிவியில் பதிவாகியுள்ள நிலையில், ஒரு குறுகிய பாதையில் அந்த சிறுவன் மணிக்கு 200 கிமீ வேகத்தில் காரை ஓட்டி சென்றது தெரியவந்துள்ளது.

    புனே 

    சிறுவனுக்கு மது வழங்கிய பார் உரிமையாளர்கள் மீது வழக்கு

    அந்த மைனர் சிறுவன் தனது 12 ஆம் வகுப்பு முடிவுகளை உள்ளூர் பப்பில் கொண்டாடிவிட்டு திரும்பும் போது இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விபத்துக்கு முன் அந்த சிறுவன் மது அருந்துவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

    மகாராஷ்டிராவில் மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயது 25 ஆகும்.

    எனவே, அந்த சிறுவனுக்கு மது வழங்கிய பார் உரிமையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் நடந்து 15 மணிநேரத்திற்குள் சிறார் நீதி வாரியம் காவலில் வைக்கப்பட்ட அந்த சிறுவனுக்கு ஜாமீன் வழங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கட்டாய கவுன்சிலிங், போதை ஒழிப்புத் திட்டம் மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்த 300-சொல் கட்டுரை எழுதுவது உள்ளிட்ட மறுவாழ்வு நிபந்தனைகள் அந்த சிறுவனுக்கு தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாராஷ்டிரா
    காவல்துறை
    காவல்துறை
    விபத்து

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மகாராஷ்டிரா

    ஜெய்ப்பூர்- மும்பை ஓடும் ரயிலில் நால்வரை சுட்டுக்கொன்ற ரயில்வே காவலாளி பணி நீக்கம் மும்பை
    இனி, ஓலா, உபர் டிரைவர்கள் ரைடை கேன்சல் செய்தாலும் அபராதம் இந்தியா
    மகாராஷ்டிராவில் 'பாஸ்ட் அண்ட் பியூரியஸ்' பட பாணியில் கொள்ளை சம்பவம் கொள்ளை
    ஒரே மருத்துவமனையில் 3 மாதங்களுக்குள் 179 பச்சிளம் குழந்தைகள் பலி: காரணம் என்ன? இந்தியா

    காவல்துறை

    புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்த காவல்துறை - கடும் எச்சரிக்கை தமிழக காவல்துறை
    தகாத உறவு வைத்திருந்த மனைவி - எரித்து கொன்ற கணவன் கைது  கைது
    இஸ்ரேல் தூதரகத்தில் குண்டுவெடிப்பு: அடையாளம் தெரியாத நபர்கள் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு  டெல்லி
    ஃபோன் பேசும்போது அழுததால் தனது 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொன்ற பெண் கைது ஜார்கண்ட்

    காவல்துறை

    புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இடையே வெடிகுண்டு மிரட்டல்: உஷார் நிலையில் மும்பை மும்பை
    'பெண்களை கருவுற செய்தால் ரூ.13 லட்சம் வெல்லலாம்': க்ரியேட்டிவ்வாக மோசடி செய்த 8 பேர் கைது  பீகார்
    தானேயில் ரேவ் பார்ட்டி: இருவர் கைது, 95 பேர் தடுத்துவைப்பு, போதைப்பொருட்கள் பறிமுதல் மகாராஷ்டிரா
    சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் தலை, கை கால்கள் இல்லாத சடலம் கண்டெடுப்பு சென்னை

    விபத்து

    சென்னை தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்த விபத்து-ஒருவர் பலி  சென்னை
    இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு சென்னை
    மகாராஷ்டிராவில் கையுறை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி மகாராஷ்டிரா
    ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் கார் டிவைடரில் மோதியதால் 6 பேர் பலி ஜார்கண்ட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025