NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புனே விபத்து: ரத்த மாதிரிகளை மாற்ற டாக்டருக்கு ரூ.3 லட்சம் லஞ்சம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    புனே விபத்து: ரத்த மாதிரிகளை மாற்ற டாக்டருக்கு ரூ.3 லட்சம் லஞ்சம்
    தடயங்களை அழிக்க மருத்துவர்களில் ஒருவர், ரூ.3 லட்சம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது

    புனே விபத்து: ரத்த மாதிரிகளை மாற்ற டாக்டருக்கு ரூ.3 லட்சம் லஞ்சம்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 28, 2024
    11:41 am

    செய்தி முன்னோட்டம்

    ஆதாரங்களை சேதப்படுத்தியதற்காகவும், போர்ஷே காரை மோதி இரண்டு ஐடி நிபுணர்களைக் கொன்ற புனே இளைஞனின் இரத்த மாதிரிகளை மாற்றியதற்காகவும், கைது செய்யப்பட்ட இரு மருத்துவர்களில் ஒருவர், சாசூன் பொது மருத்துவமனையின் ஊழியரிடம் ரூ.3 லட்சம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

    தடயங்களை அழிக்க முயற்சித்த வழக்கில் அரசு மருத்துவமனையின் தடயவியல் மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் அஜய் தாவேர் மற்றும் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஸ்ரீஹரி ஹல்னோர் ஆகியோரும் காவலில் வைக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, அதுல் காட்காம்ப்ளே என அடையாளம் காணப்பட்ட சாசூன் மருத்துவமனை ஊழியரும் திங்களன்று கைது செய்யப்பட்டார்.

    முன்னதாக விபத்துக்குப் பிறகு, மதுபோதையில் இருந்த இளைஞன் மருத்துவ பரிசோதனைக்காக சாசூன் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    காவல்துறை நடவடிக்கை

    இளைஞனின் தந்தை பணத்தை தான் ஆதாரத்தை அழிக்க முயற்சித்தாரா என விசாரணை 

    ஆதாரத்தை அழிக்க முயற்சித்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரும் மே 30 வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    லஞ்சமாக கொடுக்கப்பட்ட மொத்தத் தொகையில், புனே குற்றப்பிரிவு போலீஸார் ரூ. 2.5 லட்சத்தை ஹல்னோரிடமிருந்தும், மீதமுள்ள ரூ. 50,000-ஐ தாவேரின் கீழ் பணிபுரிந்த காட்காம்ப்ளே என்பவரிடமிருந்தும் மீட்டனர்.

    இருப்பினும், காட்காம்ப்ளே எப்படி அல்லது எங்கிருந்து பணத்தை வாங்கினார் என்பது பற்றிய உடனடி தகவல் இல்லை.

    மது போதையில் இருந்த இளைஞனின் ரத்த மாதிரிகள், மது அருந்தாத மற்றொரு நபரின் ரத்த மாதிரிகளுடன் மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த இரண்டு மருத்துவர்களும் கைது செய்யப்பட்டனர்.

    அதே நேரத்தில் இளைஞனின் அசல் ரத்த மாதிரி குப்பைத் தொட்டியில் வீசப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விபத்து
    காவல்துறை
    காவல்துறை
    கொலை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    விபத்து

    சுற்றுலாவிற்கு ஆஸ்திரேலியா சென்ற 4 இந்தியர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு ஆஸ்திரேலியா
    சோகத்தில் முடிந்த சுற்றுலா; தென்காசியில் கார்-லாரி மோதி 6 பேர் பலி தென்காசி
    காண்க: நைரோபி எரிவாயு நிறுவனத்தில் தீ விபத்து; இருவர் பலி, 165 பேர் காயம் தீ விபத்து
    காஞ்சிபுரத்தில் ஒரு ஸ்கூட்டர் மீது மோதி அதை 50 மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்ற BMW கார் காஞ்சிபுரம்

    காவல்துறை

    புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இடையே வெடிகுண்டு மிரட்டல்: உஷார் நிலையில் மும்பை மும்பை
    'பெண்களை கருவுற செய்தால் ரூ.13 லட்சம் வெல்லலாம்': க்ரியேட்டிவ்வாக மோசடி செய்த 8 பேர் கைது  பீகார்
    தானேயில் ரேவ் பார்ட்டி: இருவர் கைது, 95 பேர் தடுத்துவைப்பு, போதைப்பொருட்கள் பறிமுதல் மகாராஷ்டிரா
    சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் தலை, கை கால்கள் இல்லாத சடலம் கண்டெடுப்பு சென்னை

    காவல்துறை

    பட்டியலின பெண்ணை பீகார் காவலர் சரமாரியாக தாக்கும் வீடியோ வைரல்  பீகார்
    செங்கல்பட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது நேர்ந்த விபரீதம் - சிறுவன் படுகாயம்  செங்கல்பட்டு
    சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு வழக்கில் 5 பேராசிரியர்களிடம் விசாரணை  சேலம்
    கோவாவில் வைத்து தனது 4 வயது மகனைக் கொன்றுவிட்டு சடலத்தை பெங்களூரு வரை எடுத்து வந்த சிஇஓ கைது  பெங்களூர்

    கொலை

    உக்ரைன் உளவுத்துறை தலைவரின் மனைவிக்கு விஷம் வைத்து கொல்ல திட்டம்? உக்ரைன்
    காலிஸ்தான் பிரிவினைவாதி விவகாரத்தில் இந்திய அரசு அதிகாரி மீது அமெரிக்கா வழக்குப்பதிவு: தகுந்த நடவடிக்கை எடுப்பதாக இந்தியா உறுதி காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    காதலியை கொன்று, அதை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்த நபரால் சென்னையில் பரபரப்பு  சென்னை
    பாரீஸ் ஈபிள் கோபுரம் அருகே தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு, இருவர் காயம்  பிரான்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025