NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / WFI தலைவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மல்யுத்த வீரர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    WFI தலைவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மல்யுத்த வீரர்கள்
    WFI தலைவருக்கு எதிராக மொத்தம் ஏழு புகார்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன

    WFI தலைவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மல்யுத்த வீரர்கள்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 24, 2023
    03:17 pm

    செய்தி முன்னோட்டம்

    வினேஷ் போகட், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட முன்னணி மல்யுத்த வீரர்கள், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக FIR கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரிஜ் பூஷன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    கடந்த ஜனவரி மாதம், இதே பிரச்சனைக்காக இந்த மல்யுத்த வீரர்கள் போராடினர்.

    மூன்று மாதங்களுக்குப் பிறகு, WFIஐ சேர்ந்த வீரர்கள் தங்கள் போராட்டத்தை மீண்டும் டெல்லியின் ஜந்தர் மந்தரில் ஆரம்பித்துள்ளனர்.

    இதற்கிடையில், குற்றச்சாட்டுகளை விசாரிக்க மத்திய விளையாட்டு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட விசாரணைக் குழுவிடம் டெல்லி காவல்துறை அறிக்கையைக் கேட்டுள்ளது.

    WFI தலைவருக்கு எதிராக மொத்தம் ஏழு புகார்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.

    DETAILS

    விடியவிடிய போராடிய விளையாட்டு வீரர்கள்

    "விசாரணையின் ஒரு பகுதியாக, WFI தலைவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க விசாரணைக் குழுவிடம் நாங்கள் அறிக்கையை கோரியுள்ளோம்." என்று டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

    பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட மேற்பார்வைக் குழு மத்திய அமைச்சகத்தால் ஜனவரி மாதம் அமைக்கப்பட்டது.

    மல்யுத்த வீரர்களுடன் கலந்துரையாடிய பிறகு, மத்திய அமைச்சகம் இந்த முடிவை எடுத்தது.

    இந்த குழு, WFIஇன் அன்றாட நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டது. மேலும், பாஜக தலைவர் பிர்ஜ் பூஷண் மீதான குற்றச்சாட்டுகளையும் இந்த குழு ஆராய்ந்தது.

    தேசிய விருது பெற்ற பல விளையாட்டு வீரர்கள், இந்த குழுவின் கண்டுபிடிப்புகளை வெளியிட வேண்டும் என்று கோரி ஜந்தர் மந்தரில் நேற்று விடியவிடிய போராடினர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    டெல்லி
    பாஜக

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    இந்தியா

    காணாமல் போன இந்திய மலையேற்று வீரர் உயிருடன் மீட்பு! நேபாளம்
    புதிய மைல்கல்லை எட்டிய ITC நிறுவனம்! பங்குச் சந்தை
    இந்தியா வருகிறார் பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ  பாகிஸ்தான்
    வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தந்தை - மகனால் சிக்கிய தந்தை தமிழ்நாடு

    டெல்லி

    மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா: பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் உண்ணாவிரதப் போராட்டம் இந்தியா
    ஹோலி பண்டிகை: ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்ட டெல்லி இளைஞர்கள் இந்தியா
    OYO நிறுவனரின் தந்தை 20வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார் இந்தியா
    ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட விவகாரம்: 4 பேர் கைது இந்தியா

    பாஜக

    அதிமுக பாஜக இடையேயான கூட்டணி தொடரும் - அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக
    இந்தியா முழுவதும் பத்திரிகை சுதந்திரம் பறிபோகலாம்: அனுராதா பாசின் இந்தியா
    மின்வெட்டால் தான் மக்கள் தொகை அதிகரித்தது: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு இந்தியா
    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: 7 நாள் ED காவலில் சிசோடியா இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025