NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தடை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தடை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தடை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    எழுதியவர் Nivetha P
    Jan 10, 2023
    09:09 am

    செய்தி முன்னோட்டம்

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் இன்று (10ம் தேதி) வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

    இதனை எதிர்த்து சென்னையை சேர்ந்த சரவணன், ஏழுமலை ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவானது நேற்று விசாரணைக்கு வந்தது.

    மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "தொழில் தகராறு சட்டத்தின்படி, சமரச பேச்சுவார்த்தை தொடங்கிய பிறகு, வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்க முடியாது.

    அதே போல், சட்டப்படி வேலை நிறுத்த போராட்டத்திற்கு 6 வாரங்களுக்கு முன்னரே அறிவிக்கையானது வெளியிட வேண்டும், ஆனால் இவர் வெளியிடவில்லை. எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும்" என்று வாதம் செய்தனர்.

    சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

    பேச்சுவார்த்தை துவங்கிய நிலையில் வேலைநிறுத்த போராட்டம்

    தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், "மின்வாரிய ஊழியர்கள் சங்கங்களின் கோரிக்கை குறித்து இன்று காலை பேச்சுவார்த்தை துவங்கிய நிலையில், வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது சட்டவிரோதமானது.

    மேலும் இவர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டால் ஆவின் பால் விநியோகம், மருத்துவமனை செயல்பாடுகள், பள்ளி கல்லூரி செயல்பாடுகள் முதலியன பாதிக்கும். எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும்" என்று வாதம் செய்தார்.

    இருதரப்பு வாதங்களையும் ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், "பேச்சுவார்த்தை துவங்கிய நிலையில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது சட்டவிரோதமானது.

    மேலும் இவர்கள் வேலைநிறுத்ததால் பொதுமக்கள் பாதிக்கக்கூடும்" என்று கூறி வேலை நிறுத்தத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025