NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நினைவு சின்னமாகிறதா ராமர் பாலம்: மத்திய அரசு பரிசீலனை
    இந்தியா

    நினைவு சின்னமாகிறதா ராமர் பாலம்: மத்திய அரசு பரிசீலனை

    நினைவு சின்னமாகிறதா ராமர் பாலம்: மத்திய அரசு பரிசீலனை
    எழுதியவர் Sindhuja SM
    Jan 20, 2023, 11:07 am 0 நிமிட வாசிப்பு
    நினைவு சின்னமாகிறதா ராமர் பாலம்: மத்திய அரசு பரிசீலனை
    சுப்ரமணியன் சுவாமியின் ராமர் சேது மனுவை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்

    ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் மத்திய கலாச்சார அமைச்சகத்தில் நடைபெற்று வருவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று(ஜன:20) தெரிவித்தது. இதனையடுத்து, அமைச்சகத்திடம் மனு தாக்கல் செய்ய சுப்ரமணியன் சுவாமிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. இது குறித்து பிப்ரவரி முதல் வாரத்திற்குள் பதிலளிக்குமாறு கடந்த வாரம் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் ராஜ்யசபா எம்.பி.யும் பாஜக தலைவருமான சுப்ரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்திருந்தார். சேது சமுத்திர கப்பல் கால்வாய் திட்டத்திற்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனுவில்(2007) முதன்முதலில் இதைக் கோரினார்.

    வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்

    ராமர் மற்றும் அவரது இராணுவம் சீதையை மீட்க சென்ற புராண பாலமான ராமர் சேது இருந்ததற்கான உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை என்று கடந்த மாதம் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. மத்திய அரசின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா, ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று சுவாமியின் மனுவை விசாரித்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சுப்ரமணியன் சுவாமி விரும்பினால், கலாச்சார அமைச்சகத்திற்கு மனு அளிக்கலாம் என்றார். அதனபின், இந்த மனுவை தள்ளுபடி செய்த அமர்வு, அமைச்சகத்தின் முடிவில் சுவாமிக்கு திருப்தி இல்லையென்றால், அவர் உச்ச நீதிமன்றத்தை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம் என்று கூறியது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    ரோஹிணி தியேட்டர் விவகாரம்: இன்றும் தொடர்கிறதா தீண்டாமை கொடுமை?தியேட்டர் உரிமையாளர்கள் அளித்த விளக்கம் திரைப்பட வெளியீடு
    ITR தாக்கல்: நீங்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள் என்னென்ன? தொழில்நுட்பம்
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    அரியலூர் மாவட்டத்தில் சிறுவர்கள் ஓட்டிய 25 வாகனங்கள் பறிமுதல் மாவட்ட செய்திகள்

    இந்தியா

    ராகுல் காந்தியை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கும் லலித் மோடி காங்கிரஸ்
    மளமளவென உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி உலக செய்திகள்
    பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம் பாகிஸ்தான்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023