NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் கோடைகாலங்களில் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் கோடைகாலங்களில் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை
    தமிழகத்தில் கோடைகாலங்களில் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை

    தமிழகத்தில் கோடைகாலங்களில் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை

    எழுதியவர் Nivetha P
    Mar 15, 2023
    07:08 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் வனக்கோட்டம் 1,501 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டதாகும்.

    இங்கு காவேரி வடக்கு மற்றும் தெற்கு சரணாலயங்கள் அமைந்துள்ளன.

    அதில் யானைகள், காட்டு எருமைகள், கரடிகள், சிறுத்தைகள், மயில்கள் போன்ற பல வனவிலங்குகள் உள்ளன.

    அதன்படி கோடைகாலங்களில் தண்ணீர் தேடி கர்நாடகா பன்னர் கட்டாவிலிருந்து 200க்கும் மேற்பட்ட யானைகள் ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள வனப்பகுதிக்கு இடம்பெயர்வது வழக்கம்.

    கடந்தாண்டு இவ்வாறு வந்த 100க்கும் மேற்பட்ட யானைகள் கர்நாடக வனப்பகுதிக்கு திரும்பி செல்லாமல் குழுவாக பிரிந்து தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகில் உள்ள விளை நிலங்களுக்குள் சென்று சேதப்படுத்தின.

    தண்ணீர் தொட்டி நிரப்புதல்

    வனவிலங்குகளை தடுக்கும் பணியில் ஈடுபாடு

    அவை அனைத்தையும் வனத்துறையினர் ஒன்று சேர்த்து கடந்த மாதம் மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்கு இடம்பெயர செய்தனர்.

    இந்நிலையில் தற்போது கோடை காலம் துவங்கும் முன்னரே, வனத்தில் உள்ள மரங்கள், செடிகள் காய்ந்துள்ளதாக தெரிகிறது.

    இதனால் யானைகள் போன்ற காட்டு விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் வர அதிக வாய்ப்பு உள்ளது.

    இதனை தடுக்கும் பொருட்டு, தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் கசிவு நீர் குட்டை, ஆழ்துளை கிணறுகள், தீவனப்புல் தோட்டம் உள்ளிட்டவற்றை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    வனப்பகுதிகளில் உள்ள ஆறுகள் மற்றும் குட்டைகளில் இப்போதே நீர் குறைய துவங்கியுள்ளது என கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிக்கை சென்னை
    இந்திய பிரதமர் மோடி தமிழ்நாடு வருவதாக தகவல் பிரதமர் மோடி
    கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 5 பேரிடம் NIA விசாரணை கோவை
    தமிழகத்திற்கு ஜிஎஸ்டி பகிர்வாக ரூ.5,769 கோடி ரூபாயை வழங்கிய மத்திய அரசு மத்திய அரசு

    மாவட்ட செய்திகள்

    தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக வழங்கும் இளம் விவசாயி தமிழ்நாடு
    வேலூரில் சிறப்பு தேவை குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச முடித்திருத்தம் தமிழ்நாடு
    தமிழகத்தில் உரிய உரிமம் இல்லாமல் இறைச்சி கடை நடத்தக்கூடாது-உயர்நீதிமன்ற மதுரை கிளை கன்னியாகுமரி
    சிவபெருமானின் ஏழு மலையாக கருதப்படும் வெள்ளியங்கிரி மலையின் சிறப்புகள் கோவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025