NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் கோடைகாலங்களில் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை
    தமிழகத்தில் கோடைகாலங்களில் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    தமிழகத்தில் கோடைகாலங்களில் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை

    எழுதியவர் Nivetha P
    Mar 15, 2023
    07:08 pm
    தமிழகத்தில் கோடைகாலங்களில் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை
    தமிழகத்தில் கோடைகாலங்களில் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை

    தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் வனக்கோட்டம் 1,501 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டதாகும். இங்கு காவேரி வடக்கு மற்றும் தெற்கு சரணாலயங்கள் அமைந்துள்ளன. அதில் யானைகள், காட்டு எருமைகள், கரடிகள், சிறுத்தைகள், மயில்கள் போன்ற பல வனவிலங்குகள் உள்ளன. அதன்படி கோடைகாலங்களில் தண்ணீர் தேடி கர்நாடகா பன்னர் கட்டாவிலிருந்து 200க்கும் மேற்பட்ட யானைகள் ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள வனப்பகுதிக்கு இடம்பெயர்வது வழக்கம். கடந்தாண்டு இவ்வாறு வந்த 100க்கும் மேற்பட்ட யானைகள் கர்நாடக வனப்பகுதிக்கு திரும்பி செல்லாமல் குழுவாக பிரிந்து தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகில் உள்ள விளை நிலங்களுக்குள் சென்று சேதப்படுத்தின.

    2/2

    வனவிலங்குகளை தடுக்கும் பணியில் ஈடுபாடு

    அவை அனைத்தையும் வனத்துறையினர் ஒன்று சேர்த்து கடந்த மாதம் மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்கு இடம்பெயர செய்தனர். இந்நிலையில் தற்போது கோடை காலம் துவங்கும் முன்னரே, வனத்தில் உள்ள மரங்கள், செடிகள் காய்ந்துள்ளதாக தெரிகிறது. இதனால் யானைகள் போன்ற காட்டு விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் வர அதிக வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு, தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் கசிவு நீர் குட்டை, ஆழ்துளை கிணறுகள், தீவனப்புல் தோட்டம் உள்ளிட்டவற்றை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். வனப்பகுதிகளில் உள்ள ஆறுகள் மற்றும் குட்டைகளில் இப்போதே நீர் குறைய துவங்கியுள்ளது என கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    தமிழ்நாடு

    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - பணம் பறிமுதல் காவல்துறை
    தமிழகத்தினை அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சல் - பள்ளி விடுமுறை குறித்து மா.சுப்ரமணியம் விளக்கம் சுகாதாரத் துறை
    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியலில் ரூ.2.81 கோடி காணிக்கை திருவண்ணாமலை
    தமிழகத்தில் பிளஸ் 1 பொது தேர்வறையில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் போக்சோவில் கைது காவல்துறை

    மாவட்ட செய்திகள்

    திருவள்ளூர் மாவட்ட காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்க கப்பல் பழுது பார்ப்பு தமிழ்நாடு
    தமிழகத்தில் பால் கொள்முதல் விலையினை உயர்த்தாவிடில் மார்ச் 17ம் தேதி சாலை மறியல் போராட்டம் தமிழ்நாடு
    தஞ்சாவூரில் பழங்கள் வாங்கினால் புத்தகத்தினை பரிசாக அளிக்கும் பழ வியாபாரி - தோழர் பழக்கடை தமிழ்நாடு
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023