NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை பல்கலைக்கழக 165வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற இந்திய ஜனாதிபதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை பல்கலைக்கழக 165வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற இந்திய ஜனாதிபதி
    சென்னை பல்கலைக்கழக 165வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற இந்திய ஜனாதிபதி உரை

    சென்னை பல்கலைக்கழக 165வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற இந்திய ஜனாதிபதி

    எழுதியவர் Nivetha P
    Aug 07, 2023
    02:35 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை பல்கலைக்கழக 165வது பட்டமளிப்பு விழாவானது நேற்று(ஆகஸ்ட்.,6) அண்ணா பல்கலைக்கழக அரங்கில் நடந்தது.

    இந்த விழாவில் இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மாணவ-மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கிய திரெளபதி முர்மு நிகழ்ச்சியில் பேசுகையில், "கலாச்சாரம், நாகரீகம் உள்ளிட்டவைகளின் தொட்டிலாக தமிழகம் உள்ளது.திருக்குறளில் பொதிக்கப்பட்ட மகத்தான கருத்துக்கள் பல நூற்றாண்டு காலமாக நம் அனைவரையும் வழிநடத்தி வருகிறது" என்று கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், "இந்த விழாவில் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பில் உள்ள கல்லூரிகளில் கிட்டத்தட்ட 1.85லட்சம் பேர் படிக்கிறாரக்ள். அதில் 50% மாணவிகள் என்னும் பட்சத்தில் தங்கப்பதக்கம் பெற்ற 105 பேரில் 70%மாணவிகள்" என்றும் கூறியுள்ளார்.

    உரை 

    தமிழக முதல்வர் மற்றும் ஆளுநர் உரையாற்றினர் 

    மேலும் அவர், "1857ல் துவங்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்தின் 165 ஆண்டுப்பயணத்தில் பல அறிஞர்கள், தலைவர்கள், தொலைநோக்குப்பார்வையாளர்கள் உள்ளிட்டோரை உருவாக்கிய இது தற்போது கற்றலின் புகலிடமாக திகழ்கிறது"என்றும் குறிப்பிட்டுப்பேசினார்.

    இதனிடையே, இந்த பல்கலைக்கழகம் சர்வதேச ஒத்துழைப்பினை ஊக்குவித்தல், அதிநவீன ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல், துறையிடையேயான ஆய்வுகள் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இவரையடுத்து பேசிய முதல்வர், தலைசிறந்த பெண்ஆளுமைகளை வழங்கிய பல்கலைக்கழகம் என்னும் பெருமையினை பெற்றுள்ளது என்றும், பேரறிஞர்.,அண்ணா இந்த பல்கலைக்கழகத்தில் தான் படித்தார் என்றும், தானும் இந்த பல்கலைக்கழகத்தினை சார்ந்தவன் தான் என்றும் தெரிவித்தார்.

    தொடர்ந்து ஆளுநர்,"பெரிய இலக்குகளை நிர்ணயித்து அதனை அடைய கடுமையாக உழைக்கவேண்டும். அப்பொழுதுத்தான், உங்களுடன் இணைந்து உங்கள் குடும்பம், மாநிலம், நாடு என அனைத்தும் உயரும்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    ஆர்.என்.ரவி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மு.க ஸ்டாலின்

    தமிழ் மொழி அனைவரையும் வாழவைத்து கொண்டிருக்கிறது - மு.க.ஸ்டாலின் உரை  தொல்லியல் துறை
    பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை - பயனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு முகாம்கள் திமுக
    42வது பிறந்தநாள் கொண்டாடும் தல தோனி - வாழ்த்து கூறிய தமிழக முதல்வர்  கிரிக்கெட்
    முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில், செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை: தமிழக முதல்வர் தமிழ்நாடு

    ஆர்.என்.ரவி

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம் சிதம்பரம் கோவில்
    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சு - கனிமொழி ஆவேசம் தமிழ்நாடு
    திமுக கூட்டணி கட்சிகள் ஏப்ரல் 12ம் தேதி ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஆளுநர் மாளிகை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025