NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முதுமலை புலிகள் காப்பகத்திற்கு நாளை வருகை தருகிறார் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு
    அடுத்த செய்திக் கட்டுரை
    முதுமலை புலிகள் காப்பகத்திற்கு நாளை வருகை தருகிறார் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு
    முதுமலை புலிகள் காப்பகத்திற்கு நாளை வருகை தருகிறார் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு

    முதுமலை புலிகள் காப்பகத்திற்கு நாளை வருகை தருகிறார் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு

    எழுதியவர் Nivetha P
    Aug 04, 2023
    01:03 pm

    செய்தி முன்னோட்டம்

    நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள புலிகள் காப்பகத்திற்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் நாளை(ஆகஸ்ட்.,5)வருகைத்தருகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

    அதன்படி அவர் நாளை மாலை 3.30மணிக்கு தமிழகம் வந்தடைவார் என்றும் கூறப்படுகிறது.

    நாளை காலை 11.30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் திரௌபதி முர்மு தனிவிமானம் மூலம் கர்நாடகா மாநிலம் மைசூருக்கு வருகிறார்.

    அதன்பின்னர் அவர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் மசினகுடியில் உள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார்.

    அங்கிருந்து காரில் பயணம் மேற்கொள்ளும் திரவுபதி முர்மு முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு செல்கிறார்.

    அங்கு வசிக்கும் பழங்குடியின-ஆதிவாசி மக்கள் மற்றும் பாகன்களை சந்தித்து பேசும் இவர், அத்துடன் அங்குள்ள யானைகளையும் பார்வையிடவுள்ளார் என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.

    தமிழகம் 

    900க்கும் மேற்பட்ட காவல்துறையினர் முதுமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபாடு

    இதனை தொடர்ந்து, சமீபத்தில் எடுக்கப்பட்டு ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படமான 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' படத்தில் இடம்பிடித்த பாகன் தம்பதியான பொம்மன்-பெள்ளி உள்ளிட்டோரை சந்திக்கும் ஜனாதிபதி அங்கிருந்து மாலை 5 மணிக்கு புறப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜனாதிபதியின் வருகையினையொட்டி மசினகுடி ஹெலிபேட், வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளிட்ட இடங்களில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும், நாளை வரை சுற்றுவட்டாரத்திலுள்ள அனைத்து விடுதிகளிலும் சுற்றுலா பயணிகளை தங்க அனுமதிக்க கூடாது என்று காவல்துறை விடுதிகளின் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    ஜனாதிபதி வருகை காரணமாக கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட காவல்துறையினர் முதுமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நீலகிரி
    பயணம்
    சுற்றுலா
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    நீலகிரி

    நீலகிரி: நீட் தேர்வை வென்ற முதல் பழங்குடியின மாணவி  நீட் தேர்வு
    'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்திற்கு விருது வழங்கினார் பிரிட்டன் மன்னர்  ஆஸ்கார் விருது
    கனமழை காரணமாக நீலகிரி, வால்பாறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கல்லூரி
    தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் - பொம்மன்,பெள்ளி தம்பதியை பாராட்டிய குடியரசுத்தலைவர்  இந்தியா

    பயணம்

    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! உலக செய்திகள்
    சுமூகமான ரயில் பயணத்திற்கு இந்த விதிகளை பின்பற்றவும்: IRCTC அறிவிப்பு இந்தியா
    எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட 86 வயது தம்பதி - நீண்ட நாள் கனவு நிறைவேறியது உலகம்
    விமான நிறுவனங்களால், டிக்கெட்டுகள் தரம் குறைக்கப்பட்ட பயணிகளுக்கு, கட்டணம் திரும்ப தர நடவடிக்கை: DGCA விமான சேவைகள்

    சுற்றுலா

    புனித வாடிகன் நகரத்திற்கு சுற்றுலா செல்லும் போது, நீங்கள் செய்யக்கூடாதவை! பயண குறிப்புகள்
    கோடைகால பிரயாணத்தின் போது நீங்கள் பாதுகாப்பாக செல்ல, சில டிப்ஸ் பயண குறிப்புகள்
    இந்தியாவில் உள்ள புனிதமான, யுனெஸ்கோ பாரம்பரிய தளங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா! இந்தியா
    கொளுத்தும் வெயில்; கொட்டும் வியர்வை; சமாளிக்க குட்டி டிப்ஸ்   ஆரோக்கியம்

    காவல்துறை

    மெக்சிகோவில் 27 உயிர்களை காவு வாங்கிய பேருந்து விபத்து மெக்சிகோ
    கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை  கோவை
    செல்போன் பறிப்பு விவகாரம் - ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி  கைது
    முந்தைய நாளே தற்கொலைக்கு தயாரான கோவை டிஐஜி - பரபரப்பு தகவல்  கோவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025