Page Loader
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 2 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தில் நாளை (டிசம்பர் 2) மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 2 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 01, 2024
11:36 am

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (டிசம்பர் 2) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- பெரம்பலூர்: ஆதனக்குறிச்சி, மாத்தூர், தூளர் சுரங்கம், சிலுப்பனூர். உடுமலைப்பேட்டை: தேவனூர்புதூர், செல்லம்பாளையம், கரட்டூர், ரவணாபுரம், ஆண்டியூர், பாண்டியங்கரடு, எரிசனம்பட்டி, வல்லகுண்டபுரான், எஸ்.நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்தூர், வலையபாளையம்.

திருநெல்வேலி

திருநெல்வேலியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருநெல்வேலி: மானூர், தலையூத்து, சேதுராயன் புதூர், ராஜா வள்ளிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்களம் புதூர், நாஞ்சங்குளம், தென்களம், மாதவ குருச்சி, தச்சநல்லூர், நல்மெய்ப்பர் நகர், செல்வ விக்னேஷ் நகர், பாலாஜி அவெனியூ, வடக்கு பாலபாக்கிய நகர், தெற்கு பாலபாக்கிய நகர், மதுரை சாலை, திலக் நகர், பாபுஜி நகர், சிவந்தி நகர், கோமதி நகர். இதற்கிடையே, ஃபெஞ்சல் புயல் காரணமாக அதிக மழை பாதிப்பை எதிர்கொண்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் மின்கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு டிசம்பர் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.