NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மின்வெட்டால் தான் மக்கள் தொகை அதிகரித்தது: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு
    இந்தியா

    மின்வெட்டால் தான் மக்கள் தொகை அதிகரித்தது: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு

    மின்வெட்டால் தான் மக்கள் தொகை அதிகரித்தது: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு
    எழுதியவர் Sindhuja SM
    Mar 10, 2023, 05:41 pm 0 நிமிட வாசிப்பு
    மின்வெட்டால் தான் மக்கள் தொகை அதிகரித்தது: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு
    கர்நாடக மக்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது.

    காங்கிரஸ் ஆட்சியில் அதிக மின்வெட்டு இருந்ததால் தான் மக்கள் தொகை அதிகரித்தது என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று(மார் 9) பேசியுள்ளார். இது தற்போது சர்ச்சையாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. இதனால் அங்கு போட்டியிடும் பாஜக மற்றும் காங்கிரஸ் போன்ற காட்சிகள் நிறைய வாக்குறுதிகளை வாரி வழங்கி கொண்டிருக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் காங்கிரஸ் நடத்திய மாநிலம் தழுவிய பேருந்து பயணமான பிரஜா த்வனி யாத்திரையின் போது கர்நாடக மக்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது.

    " குறைந்த மின்சாரம் = அதிக குழந்தைகள்": முட்டாள்த்தனமானது என்கிறது காங்கிரஸ்

    இது குறித்து கர்நாடக மாநிலம் ஹஸ்சன் மாவட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சர்ச்சை குரிய கருத்தை தெரிவித்துள்ளார். "கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு இலவச மின்சாரம் வழங்குவோம் என்று காங்கிரஸ் கூறி இருக்கிறது. அவர்கள் இலவச மின்சாரம் வழங்குவார்கள் என்பதை நம்புகிறீர்களா? பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் 24 மணிநேரமும் மின்சாரம் வழங்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போதிய அளவிலான மின்சாரம் வழங்கபடவே இல்லை. அதனால் தான் மக்கள் தொகை அதிகரித்தது." என்று அவர் கூறியுள்ளார். இந்த உரையை முட்டாளத்தானது என்றும் வினோதமானது என்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா
    பாஜக
    காங்கிரஸ்

    இந்தியா

    CampaCola-வை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ்! ரிலையன்ஸ்
    இந்து கோவில்கள் பிரச்சனை: ஆஸ்திரேலிய பிரதமருடன் பிரதமர் மோடி பேச்சு ஆஸ்திரேலியா
    H3N2 இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் இந்தியாவில் ஏற்பட்ட முதல் இறப்புகள் H1N1 வைரஸ்
    இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் மென்லெஸ் டேக் அவே உணவு இயந்திரம் சென்னை

    பாஜக

    இந்தியா முழுவதும் பத்திரிகை சுதந்திரம் பறிபோகலாம்: அனுராதா பாசின் இந்தியா
    அதிமுக பாஜக இடையேயான கூட்டணி தொடரும் - அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக
    'பொட்டு ஏன் வைக்கவில்லை': மகளிர் தினத்தன்று பெண்ணிடம் கத்திய பாஜக எம்பி இந்தியா
    பாஜக ஐ.டி. பிரிவினர் கட்சியில் இருந்து மேலும் 13 நிர்வாகிகள் விலகல் - அதிமுகவில் இணைந்தனர் அதிமுக

    காங்கிரஸ்

    ஈரோட்டில் வெற்றி பெற்றதையடுத்து தமிழக முதல்வரை சந்தித்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழ்நாடு
    சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி இந்தியா
    அரசியல் இருந்து ஓய்வு பெறுகிறாரா சோனியா காந்தி இந்தியா
    டெல்லி விமான நிலைய சர்ச்சை: கைது செய்யப்பட்டார் பவன் கேரா டெல்லி

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023