NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் குறித்து காவல்துறை விளக்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் குறித்து காவல்துறை விளக்கம் 
    விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் குறித்து காவல்துறை விளக்கம்

    விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் குறித்து காவல்துறை விளக்கம் 

    எழுதியவர் Nivetha P
    Nov 17, 2023
    07:25 pm

    செய்தி முன்னோட்டம்

    திருவண்ணாமலை செய்யாறு அருகேயுள்ள மேல்மா சிப்காட் விரிவாக்கப்பணிகளை மேற்கொள்ள 3,174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு கடந்த ஆட்சியில் அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

    இதற்கான பணிகள் துவங்கிய நிலையில் விவசாயிகள் தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

    அதனை மீறி பணிகள் தொடர்ந்து நடந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிப்காட் விரிவாக்கப்பணியினை கைவிடக்கோரி கடந்த ஜூலையில் துவங்கிய காத்திருப்புப்போராட்டம் 126 நாட்களாக தொடர்ந்து நடந்தது.

    போராட்டத்தை முன்நின்று நடத்திய 20 விவசாயிகளை காவல்துறை கைது செய்தது.

    அதன்படி அவர்களுள் பச்சையப்பன், அருள் ஆறுமுகம், தேவன், பாக்யராஜ், மாசிலாமணி, விஜயன், சோழன் உள்ளிட்ட 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

    இதற்கு பாமக, நாம் தமிழர், அதிமுக, பா.ஜ.க.,உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

    குண்டர் 

    திருவண்ணாமலையில் நாளை பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் 

    மேலும், இந்த விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தினை ரத்து செய்யக்கோரி நாளை(நவ.,18)பா.ஜ.க.,சார்பில் திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது.

    இந்நிலையில் இந்த குண்டர் சட்டத்தை போட்டதற்கான காரணம் குறித்து காவல்துறை தனது விளக்கத்தினை அளித்துள்ளது.

    அவர்கள் கூறியதாவது, குறிப்பிட்ட அந்த 7 பேரும் அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    மேலும் அவர்கள் 7 பேரும் எட்டுவழி சாலை போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள்"என்று கூறியுள்ளனர்.

    தொடர்ந்து, "சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரான அருள் ஆறுமுகம் கிட்டத்தட்ட 8 மாதங்களாக செய்யாறு பகுதியில் தங்கி அங்குள்ள மக்களை தூண்டிவிட்டுள்ளார்" என்றும்,

    "இவர்கள் 7 பேரும் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றும் விளக்கமளித்துள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    காவல்துறை விளக்கம் 

    விவசாயிகள் மீது குண்டர் சட்டம் ஏன்? காவல்துறை விளக்கம் | Thanthi Tv https://t.co/kIMu2znIFO

    — Thanthi TV (@ThanthiTV) November 17, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விவசாயிகள்
    திருவண்ணாமலை
    காவல்துறை

    சமீபத்திய

    ஆன்லைன் பேட்டிங் செயலிகளை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனு; மத்திய அரசுக்கு நோட்டீஸ் ஆன்லைன் கேமிங்
    தாமதமாகிறது 'Avengers: Doomsday' வெளியீடு; எப்போது தெரியுமா? ஹாலிவுட்
    டர்புலன்ஸின் போது வான்வெளியைப் பயன்படுத்த இண்டிகோ விமானியின் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்தது இண்டிகோ
    ஹார்வர்டின் இந்திய, வெளிநாட்டு மாணவர்கள் 3 நாட்களில் 6 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் அங்கேயே தொடரலாம்! ஹார்வர்ட் பல்கலைக்கழகம்

    விவசாயிகள்

    குருக்ஷேத்ரா-டெல்லி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம் இந்தியா
    அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையினை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் நடைபயணம்-காவல்துறை தடுத்ததால் பரபரப்பு  காவல்துறை
    பயிர்களை அழித்த என்.எல்.சி., சரமாரி கேள்விகளை எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்  நெய்வேலி
    கோடீஸ்வரர் ஆன தக்காளி விவசாயி: 45 நாளில் ரூ.4 கோடி சம்பாத்தியம் ஆந்திரா

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாட்டம் பர்வதமலை
    பர்வதமலையில் சாலை மற்றும் ரோப் கார் வசதி அமைக்க திட்டம் - ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு பர்வதமலை
    பூட்டை உடைத்து ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு
    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் காவல்துறை

    காவல்துறை

    யூடியூபா் டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் யூடியூபர்
    'அதி புத்திசாலி': கேரள குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்த டொமினிக் மார்ட்டினின் பின்னணி  கேரளா
    காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் டிஜிபி ரவி டெல்லி
    நடிகை கௌதமி அளித்த புகார் - அழகப்பன் உட்பட 6 பேரை பிடிக்க 3 தனிப்படைகள்  தமிழ் சினிமா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025