NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 3வது முறையாக பிரதமர் ஆன நரேந்திர மோடியின் முதல் உத்தரவு என்ன தெரியுமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    3வது முறையாக பிரதமர் ஆன நரேந்திர மோடியின் முதல் உத்தரவு என்ன தெரியுமா?

    3வது முறையாக பிரதமர் ஆன நரேந்திர மோடியின் முதல் உத்தரவு என்ன தெரியுமா?

    எழுதியவர் Sindhuja SM
    Jun 10, 2024
    12:04 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் கிசான் நிதியின் 17 வது தவணையை வெளியிட உத்தரவு பிறப்பித்தார் பிரதமர் மோடி. தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்று, நேற்று மீண்டும் பிரதமராக பதவியேற்ற பிரதமர் மோடியின் முதல் உத்தரவு இதுவாகும்.

    பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் பிரதமராக அரியணை ஏறினார்.

    அதன் பிறகு அவர் பிரதமர் கிசான் நிதியின் 17வது தவணையை வெளியிடுவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.

    இதன் மூலம் 9.3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள். சுமார் 20,000 கோடி ரூபாய் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த கோப்பில் கையெழுத்திட்ட பிறகு பேசிய பிரதமர் மோடி, விவசாயிகளின் நலனுக்காக தனது அரசு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    மூன்றாவது முறையாக அரியணை ஏறினார் பிரதமர் மோடி 

    #WATCH | PM Narendra Modi today took charge as the Prime Minister, in New Delhi.

    After being sworn in as Prime Minister for the 3rd time, PM Narendra Modi signed his first file authorising the release of 17th instalment of PM Kisan Nidhi. This will benefit 9.3 crore farmers and… pic.twitter.com/G4ownB0NFh

    — ANI (@ANI) June 10, 2024

    இந்தியா 

    முதல் உத்தரவை விவசாயிகளுக்காக பிறப்பித்த பாஜக அரசு 

    "எங்களுடையது கிசான் கல்யாணுக்கு(விவசாயி நலன்) முழு அர்ப்பணிப்புள்ள அரசாகும். எனவே பொறுப்பேற்றவுடன் கையெழுத்திடப்பட்ட முதல் கோப்பு விவசாயிகள் நலன் தொடர்பானது என்பது பொருத்தமானது. விவசாயிகள் மற்றும் விவசாயத் துறைக்காக நாங்கள் இன்னும் அதிகமாக பணியாற்ற விரும்புகிறோம்." என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    பிரதமர் மோடியின் கடந்த பதவிக்காலத்தின் போது மூன்று விவசாயச் சட்டங்களை வலியுறுத்தி விவசாயிகள் பெரும் கிளர்ச்சியை செய்தனர்.

    குறைந்தபட்ச ஆதரவு விலை(எம்எஸ்பி) குறித்த மத்திய அரசின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளால் சில விவசாய சங்கங்கள் இன்னும் அதிருப்தியில் உள்ளன.

    அதனால், முதல் உத்தரவை விவசாயிகளுக்காக பிறப்பித்து அவர்களை பாஜக அரசு சமாதானம் செய்ய முயல்கிறது என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்
    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா
    வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது நடிகர் சூர்யா
    2024-25 நிதியாண்டிற்கான ஐடிஆர் தாக்கல்: முக்கிய காலக்கெடு மற்றும் விபரங்கள்; வரி செலுத்துபவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை வருமான வரி அறிவிப்பு

    இந்தியா

    இன்று இரவு கரையை கடக்க இருக்கும் ரெமல் புயல்: கொல்கத்தாவில் விமான சேவைகள் இடை நிறுத்தம்  கொல்கத்தா
    பாலியல் குற்றச்சாட்டுகளால் ஜெர்மனிக்கு தப்பி ஓடிய கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா மன்னிப்பு கோரினார்  கர்நாடகா
    இந்த ஆண்டு சராசரிக்கும் அதிகமாக பருவமழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் வானிலை எச்சரிக்கை
    வட இந்தியாவில் பாதரசம் 50 டிகிரி செல்சியஸைத் தாண்டியது: வடகிழக்கு இந்தியாவில் பெய்த கனமழையால் 35 பேர் பலி வானிலை அறிக்கை

    பிரதமர் மோடி

     அத்துமீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டு: பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்  காங்கிரஸ்
    'தவறாக வழிநடத்தப்படுகிறீர்கள்': பிரதமருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம் இந்தியா
    'என் தந்தையின் உடலை துண்டுகளாக நான் வீட்டிற்கு கொண்டு வந்தேன்': பிரியங்கா காந்தி  குஜராத்
    'இந்து மதத்தை சேர்ந்த அரசகர்களை மட்டுமே காங்கிரஸ் விமர்சிக்கிறது': பிரதமர் மோடி காட்டம்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025