NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அணிந்திருந்த வித்தியாசமான நீல சட்டை
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அணிந்திருந்த வித்தியாசமான நீல சட்டை
    பிரதமர் நரேந்திர மோடி பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் ஆன சட்டையை அணிந்துள்ளார்

    நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அணிந்திருந்த வித்தியாசமான நீல சட்டை

    எழுதியவர் Sindhuja SM
    Feb 08, 2023
    04:37 pm

    செய்தி முன்னோட்டம்

    மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்காக நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பதில் அளிக்க போகும் பிரதமர் நரேந்திர மோடி, இன்று(பிப் 8) நாடாளுமன்றத்திற்கு ஒரு வித்தியாசமான நீல நிற பந்தகலா சட்டையை அணிந்து வந்திருக்கிறார்.

    அந்த சட்டை திங்களன்று(பிப் 6) பெங்களூரில் நடந்த இந்திய எரிசக்தி வாரத்தின் போது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அவருக்கு வழங்கியதாகும்.

    அது ஒரு மறுசுழற்சி செய்யப்பட்ட PET பாட்டில்களால் ஆன சட்டை என்று கூறப்பட்டிருந்தது.

    தற்போது நடைபெற்று வரும் இந்திய எரிசக்தி வாரம்(6-8 பிப்ரவரி), ஆற்றல்-மாற்று சக்தியாக இந்தியாவின் வளரும் திறனை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    இந்தியன் ஆயிலின் 'அன்பாட்டில்டு' முயற்சியின் கீழ், மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆன சீருடைகளை இந்திய எரிசக்தி வாரத்தில் பிரதமர் அறிமுகப்படுத்தினார்.

    இந்தியா

    மறுசுழற்சியை ஆதரிக்க வலியுறுத்தும் பிரதமர்

    பிளாஸ்டிக் பாட்டில்களை சீருடைகளாக மறுசுழற்சி செய்யும் முயற்சிகள் மிஷன் லைஃப் திட்டத்தை வலுப்படுத்தும் என்று பிரதமர் கூறி இருந்தார்.

    மறுசுழற்சி செய்யப்பட்ட பாலியஸ்டர்(rPET) மற்றும் பருத்தியால் ஆன சீருடைகளை இந்தியன் ஆயில் ஏற்றுக்கொண்டது. இந்த சீருடைகள் சில்லறை வாடிக்கையாளர் உதவியாளர்கள் மற்றும் LPG விநியோக பணியாளர்களுக்காக உருவாக்கப்பட்டதாகும்.

    இந்தியன் ஆயிலின் ஒவ்வொரு சீருடைகளும் சுமார் 28 பயன்படுத்திய PET பாட்டில்களை மறுசுழற்சி செய்ய உதவும்.

    சமீபத்தில் அரசாங்கம் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தை Rs. 19,700 கோடி செலவில் தொடங்கியது. இது கார்பன் பயன்பாட்டை குறைத்து பொருளாதாரத்தை வளர செய்வதற்கும், எரிபொருள் இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் முன்மொழியப்பட்டது.

    காலநிலை மாற்றத்தை சமாளிக்கவும் மறுசுழற்சியை ஆதரிக்க வலியுறுத்தியும் பிரதமர் இந்த சட்டையை அணிந்திருப்பதாக கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பிரதமர் மோடி
    மோடி
    நரேந்திர மோடி

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    இந்தியா

    Samsung Galaxy S23 விட S22 சிறந்த போனா? அதிரடியாக விலை குறைப்பு; சாம்சங்
    இசைக்கான மூன்றாம் கிராமி விருது வென்ற பெங்களூரை சேர்ந்த பாப் இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் இசையமைப்பாளர்கள்
    230க்கும் மேற்பட்ட சீன ஆப்ஸ்களை தடை செய்கிறதா மத்திய அரசு சீனா
    ஆசியாவின் மிக பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி நரேந்திர மோடி

    பிரதமர் மோடி

    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! மோடி
    8வது 'வந்தே பாரத்' ரயில் சேவை: வரும் ஜனவரி 19 துவக்கம் வந்தே பாரத்
    கோல்டன் குளோப் வெற்றி: RRR பட குழுவினருக்கு பிரதமர், ரஜினி, கமல் உள்ளிட்டோர் பாராட்டு இந்தியா
    தை 2: திருவள்ளுவர் தினமும், அதன் வரலாறும் பொங்கல் திருநாள்

    மோடி

    PM கேர்ஸ் நலத்திட்டம் ஆரம்பித்து 2 ஆண்டுகளில் 13,000 கோடி வசூல்! இந்தியா
    நரிக்குறவர், குருவிக்காரர் சாதிகள் பழங்குடியினர் பட்டியலில் சேரப்போகிறதா? ஸ்டாலின்
    பிரதமர் மோடி பிறந்த ஊருக்கு உலகப் பாரம்பரிய நகரம் என்ற தகுதி! இந்தியா
    நேபாளத்தின் புதிய பிரதமருக்கு இந்திய பிரதமர் வாழ்த்து! இந்தியா

    நரேந்திர மோடி

    சமஸ்கிருதம்-தமிழ்: பழமையான மொழிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்ன செய்திருக்கிறது? இந்தியா
    தேசிய ஸ்டார்ட்அப் தினம்: ஸ்டார்ட்அப் துறையில் புதிய முயற்சிகள் ஊக்குவிப்பு இந்தியா
    பிரதமர் மோடியின் பிபிசி ஆவணப்படத்தால் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் 4 பேர் கைது மோடி
    பிரதமர் மோடி மற்றும் எகிப்திய ஜனாதிபதியின் டெல்லி சந்திப்பு: முக்கிய முடிவுகளை எடுத்த இரு நாடுகள் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025