NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அணிந்திருந்த வித்தியாசமான நீல சட்டை
    இந்தியா

    நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அணிந்திருந்த வித்தியாசமான நீல சட்டை

    நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அணிந்திருந்த வித்தியாசமான நீல சட்டை
    எழுதியவர் Sindhuja SM
    Feb 08, 2023, 04:37 pm 1 நிமிட வாசிப்பு
    நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அணிந்திருந்த வித்தியாசமான நீல சட்டை
    பிரதமர் நரேந்திர மோடி பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் ஆன சட்டையை அணிந்துள்ளார்

    மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்காக நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பதில் அளிக்க போகும் பிரதமர் நரேந்திர மோடி, இன்று(பிப் 8) நாடாளுமன்றத்திற்கு ஒரு வித்தியாசமான நீல நிற பந்தகலா சட்டையை அணிந்து வந்திருக்கிறார். அந்த சட்டை திங்களன்று(பிப் 6) பெங்களூரில் நடந்த இந்திய எரிசக்தி வாரத்தின் போது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அவருக்கு வழங்கியதாகும். அது ஒரு மறுசுழற்சி செய்யப்பட்ட PET பாட்டில்களால் ஆன சட்டை என்று கூறப்பட்டிருந்தது. தற்போது நடைபெற்று வரும் இந்திய எரிசக்தி வாரம்(6-8 பிப்ரவரி), ஆற்றல்-மாற்று சக்தியாக இந்தியாவின் வளரும் திறனை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியன் ஆயிலின் 'அன்பாட்டில்டு' முயற்சியின் கீழ், மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆன சீருடைகளை இந்திய எரிசக்தி வாரத்தில் பிரதமர் அறிமுகப்படுத்தினார்.

    மறுசுழற்சியை ஆதரிக்க வலியுறுத்தும் பிரதமர்

    பிளாஸ்டிக் பாட்டில்களை சீருடைகளாக மறுசுழற்சி செய்யும் முயற்சிகள் மிஷன் லைஃப் திட்டத்தை வலுப்படுத்தும் என்று பிரதமர் கூறி இருந்தார். மறுசுழற்சி செய்யப்பட்ட பாலியஸ்டர்(rPET) மற்றும் பருத்தியால் ஆன சீருடைகளை இந்தியன் ஆயில் ஏற்றுக்கொண்டது. இந்த சீருடைகள் சில்லறை வாடிக்கையாளர் உதவியாளர்கள் மற்றும் LPG விநியோக பணியாளர்களுக்காக உருவாக்கப்பட்டதாகும். இந்தியன் ஆயிலின் ஒவ்வொரு சீருடைகளும் சுமார் 28 பயன்படுத்திய PET பாட்டில்களை மறுசுழற்சி செய்ய உதவும். சமீபத்தில் அரசாங்கம் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தை Rs. 19,700 கோடி செலவில் தொடங்கியது. இது கார்பன் பயன்பாட்டை குறைத்து பொருளாதாரத்தை வளர செய்வதற்கும், எரிபொருள் இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் முன்மொழியப்பட்டது. காலநிலை மாற்றத்தை சமாளிக்கவும் மறுசுழற்சியை ஆதரிக்க வலியுறுத்தியும் பிரதமர் இந்த சட்டையை அணிந்திருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    நரேந்திர மோடி
    மோடி
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    ஐபிஎல் : ஆரஞ்சு கேப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பட்டியல் சென்னை சூப்பர் கிங்ஸ்
    திரிபுராவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் திரிபுரா
    ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாளில் 2% ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை - அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் 'மியூசிக் ஸ்கூல்'; பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு இளையராஜா

    இந்தியா

    இந்தியாவில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 2,151 கொரோனா பாதிப்பு கொரோனா
    உக்ரைனில் இருந்து திரும்பி இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு தனி தேர்வு உக்ரைன்
    18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து: அரசு அதிரடி நடவடிக்கை உஸ்பெகிஸ்தான்
    கடந்த 5 ஆண்டுகளில் IIT, IIM, NITஐ சேர்ந்த 61 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் நாடாளுமன்றம்

    நரேந்திர மோடி

    பிரதமரின் கண்களில் பயம் தெரிகிறது: செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி இந்தியா
    ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்றம் ராகுல் காந்தி
    இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: உயர் அதிகாரிகளுடன் பிரதமர் அவசர ஆலோசனை இந்தியா
    டெல்லியில் ஒட்டப்பட்டிருந்த ஆன்டி-மோடி போஸ்டர்கள்: 6 பேர் கைது, 100 வழக்குகள் பதிவு டெல்லி

    மோடி

    பாரத் 6ஜி சேவை இந்தியாவில் தொடக்கம் - எப்போது கிடைக்கும்? தொழில்நுட்பம்
    மகாத்மா காந்தியின் வாக்கியங்களை ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி ராகுல் காந்தி
    பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் உலக வங்கியின் 'அடுத்த தலைவர்' அஜய் பங்கா அமெரிக்கா
    இந்த வருடத்தில் 7வது முறையாக கர்நாடாகாவிற்கு வர இருக்கும் பிரதமர் மோடி இந்தியா

    பிரதமர் மோடி

    கர்நாடகாவில் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தினை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி இந்தியா
    பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 8ம் தேதி தமிழகம் வருகிறார் வந்தே பாரத்
    ஸ்ரீ நகரில் பிரதமர் அலுவலக உயரதிகாரி என கூறி இ இசட் பாதுகாப்போடு வந்தவர் கைது ஜம்மு காஷ்மீர்
    பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசா? - நோபல் குழுவின் துணை தலைவர் விருது விழா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023