NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அந்தமானில் இருக்கும் 21 தீவுகளுக்கு பெயர் சூட்டினார் பிரதமர் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    அந்தமானில் இருக்கும் 21 தீவுகளுக்கு பெயர் சூட்டினார் பிரதமர் மோடி
    நாட்டின் நிஜ வாழ்க்கை ஹீரோக்களுக்கு மரியாதை அளிப்பதே எங்களது முதல் கடமை: பிரதமர் அலுவலகம்

    அந்தமானில் இருக்கும் 21 தீவுகளுக்கு பெயர் சூட்டினார் பிரதமர் மோடி

    எழுதியவர் Sindhuja SM
    Jan 23, 2023
    08:48 pm

    செய்தி முன்னோட்டம்

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை நினைவுகூரும் பராக்ரம் திவாஸ் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஜன 23) அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் 21 பெரிய பெயரிடப்படாத தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயரை சூட்டினார்.

    அந்த யூனியன் பிரதேசத்தில் நடந்த இந்த விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பல மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    முன்மொழியப்பட்ட நேதாஜி நினைவிடத்தின் மாதிரியையும் பிரதமர் மோடி மெய்நிகராக வெளியிட்டார்.

    பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயரிடப்பட்ட 21 தீவுகள் வடக்கு, மத்திய மற்றும் தெற்கு அந்தமான் மாவட்டங்களில் அமைந்துள்ளன என்று இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

    பிரதமர் மோடி

    நேதாஜிக்கு அர்ப்பணிக்கப்படவுள்ள நினைவுச்சின்னம்

    இந்த 21 தீவுகளில் மிக பெரிய தீவிற்கு முதல் பரம் வீர் சக்ரா விருது பெற்ற மேஜர் சோம்நாத் சர்மாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இவர் நவம்பர் 3, 1947இல் காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு எதிராக போரிட்டு வீரமரணம் அடைந்தவர ஆவார்.

    மேலும், நேதாஜிக்கு அர்ப்பணிக்கப்படவுள்ள நினைவுச்சின்னத்தின் மாதிரியையும் இந்த விழாவில் பிரதமர் திறந்து வைத்தார்.

    இது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவில்(முன்னர் ராஸ் தீவு என்று அழைக்கப்பட்டது) கட்டப்படும். இந்த தீவின் பெயர் 2018 இல் மாற்றப்பட்டது.

    இந்த நினைவிடத்தில் அருங்காட்சியகம், லேசர் மற்றும் ஒலி காட்சி, கேபிள் கார் ரோப்வே, வரலாற்று கட்டிடங்கள் வழியாக வழிகாட்டப்பட்ட பாரம்பரிய பாதை, குழந்தைகள் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் ரெட்ரோ-லவுஞ்ச் ஆகியவை இருக்கும் என்று கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மோடி
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    மோடி

    PM கேர்ஸ் நலத்திட்டம் ஆரம்பித்து 2 ஆண்டுகளில் 13,000 கோடி வசூல்! இந்தியா
    நரிக்குறவர், குருவிக்காரர் சாதிகள் பழங்குடியினர் பட்டியலில் சேரப்போகிறதா? ஸ்டாலின்
    பிரதமர் மோடி பிறந்த ஊருக்கு உலகப் பாரம்பரிய நகரம் என்ற தகுதி! இந்தியா
    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! பிரதமர் மோடி

    இந்தியா

    பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவண படத்திற்கு கடும் எதிர்ப்பு இங்கிலாந்து
    மஹாராஷ்டிராவில் புதிய 'பைக் ஆம்புலன்ஸ்' அறிமுகம் இந்தியா
    7 அல்டிமேட் மாடல்களை அறிமுகப்படுத்தும் Harley Davidson! குஷியில் பைக் பிரியர்கள்; ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    நினைவு சின்னமாகிறதா ராமர் பாலம்: மத்திய அரசு பரிசீலனை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025