NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சந்தேஷ்காலி பெண்களைச் சந்தித்தார் பிரதமர் மோடி: மம்தா பானர்ஜி அரசுக்கு கடும் கண்டனம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சந்தேஷ்காலி பெண்களைச் சந்தித்தார் பிரதமர் மோடி: மம்தா பானர்ஜி அரசுக்கு கடும் கண்டனம் 

    சந்தேஷ்காலி பெண்களைச் சந்தித்தார் பிரதமர் மோடி: மம்தா பானர்ஜி அரசுக்கு கடும் கண்டனம் 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 06, 2024
    03:50 pm

    செய்தி முன்னோட்டம்

    மேற்கு வங்க பெண்கள் கோபமடைந்துள்ளனர், சந்தேஷ்காலியில் தொடங்கிய புயல் அந்த கிராமத்தில் மட்டும் இருக்காமல் மேற்கு வங்கத்தின் ஒவ்வொரு மூலையையும் சென்றடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று கூறியுள்ளார்.

    மேற்கு வங்கத்தில் மிகவும் பெரிதாக பேசப்பட்டு வரும் சந்தேஷ்காலி பிரச்சனை குறித்து பேசிய பிரதமர் மோடி, மேற்கு வங்க அரசாங்கம் ஒரு "குற்றவாளியை" காப்பாற்ற தனது முழு பலத்தையும் பயன்படுத்துகிறது என்று தெரிவித்தார்.

    அவர் இங்கு குற்றவாளி என்று குறிப்பிடுவது முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகானை தான்.

    மேற்கு வங்காளத்தின் சந்தேஷ்காலியில் மிரட்டி பணம் பறித்தல், நில அபகரிப்பு மற்றும் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஷேக் ஷாஜகான் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    மேற்கு வங்கம் 

     சந்தேஷ்காலி கிராமத்தை சேர்ந்த பெண்களைச் சந்தித்த பிரதமர் மோடி 

    ஆனால், ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க மேற்கு வங்க அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது.

    இந்நிலையில், இன்று மேற்கு வங்கம் சென்றிருந்த பிரதமர் மோடி, சந்தேஷ்காலி கிராமத்தை சேர்ந்த பெண்களைச் சந்தித்து பேசினார்.

    12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு(UTs) 10 நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று கொல்கத்தாவில் ரூ.15,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

    ஐந்து நாட்களுக்குள் அவர் மேற்கு வங்கத்திற்குச் செல்வது இது இரண்டாவது முறையாகும்.

    கொல்கத்தாவில் இருக்கும் முதல் நீருக்கடியில் உள்ள மெட்ரோவையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

    அதன் பின், சந்தேஷ்காலி கிராமத்திற்கு சென்ற அவர், மேற்கு வங்க அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மேற்கு வங்காளம்
    பிரதமர் மோடி
    திரிணாமுல் காங்கிரஸ்

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    மேற்கு வங்காளம்

    ஒடிசா ரயில் விபத்து: 3 மேற்கு வங்க சகோதரர்கள் பலி! ரயில்கள்
    ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியதால் மம்தா பானர்ஜி காயம் மம்தா பானர்ஜி
    ஹைதராபாத் அருகில் விரைவு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து;  ஹைதராபாத்
    மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலால் வன்முறை: 9 பேர் பலி திரிணாமுல் காங்கிரஸ்

    பிரதமர் மோடி

    "பகவான் ராமர் இனி ஒரு கூடாரத்தில் வாழ வேண்டிய அவசியமில்லை": அயோத்தி கோவில் விழாவிற்கு பிறகு பிரதமர் மோடி பூரிப்பு  அயோத்தி
    மறைந்த பீகார் மாநில முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது பீகார்
    'பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்': மாலத்தீவு அதிபருக்கு எதிர்கட்சி தலைவர் வலியுறுத்தல் மாலத்தீவு
    'பாஜக தலைவர் எல்கே அத்வானிக்கு பாரத ரத்னா விருது': பிரதமர் மோடி   பாஜக

    திரிணாமுல் காங்கிரஸ்

    எம்பி பதவியை ராஜினாமா செய்தார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் லூயிசின்ஹோ ஃபலேரோ இந்தியா
    ராம நவமி வன்முறை குறித்து NIA விசாரிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு இந்தியா
    மேற்கு வங்கத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு தடை விதித்தார் மம்தா பானர்ஜி இந்தியா
    மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும்: பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025