Page Loader
ஜார்க்கண்ட் தேர்தல் 2024: 43 இடங்களுக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு; 638 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்
43 இடங்களுக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு

ஜார்க்கண்ட் தேர்தல் 2024: 43 இடங்களுக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு; 638 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 13, 2024
09:11 am

செய்தி முன்னோட்டம்

ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கே துவங்கியது. வாக்குப்பதிவு சுமூகமாக நடப்பதை உறுதி செய்ய, சுமார் 200 நிறுவனங்களுக்கு மேல் பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதோடு தேர்தல் ஆணையம் மாநிலத்தில் உள்ள சுமார் 1.37 கோடி மக்கள் வாக்களிக்க, 1,152 இடங்களில் வாகு சாவடிகளை, அனைத்து மகளிர் வாக்குச் சாவடிகளும் அமைத்துள்ளது. ஜார்க்கண்டில் 81 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டப் பேரவைக்கு, 43 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. 43 தொகுதிகளில் 17 பொது இடங்களும், 20 பழங்குடியினருக்கான இடங்களும், ஆறு பட்டியல் சாதியினருக்கான இடங்களும் அடங்கும். மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு நவம்பர் 20ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வாழ்த்து

முதல்முறை வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மக்களை "முழு உற்சாகத்துடன்" வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். "இன்று ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் முதல் சுற்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த ஜனநாயக திருவிழாவில் அனைத்து வாக்காளர்களும் முழு ஆர்வத்துடன் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இத்தருணத்தில், முதன்முறையாக வாக்களிக்கப் போகும் எனது அனைத்து இளம் நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! நினைவில் கொள்ளுங்கள் - முதலில் வாக்களியுங்கள், பின்னர் புத்துணர்ச்சி! "என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post