NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "சம்பளம் வேண்டாம்": ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    "சம்பளம் வேண்டாம்": ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் 

    "சம்பளம் வேண்டாம்": ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 03, 2024
    10:37 am

    செய்தி முன்னோட்டம்

    ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண், ஆந்திர மாநிலத்தின் ஆபத்தான நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு, தனது சம்பளத்தையும் தனது அலுவலகத்திற்கான சிறப்பு நிதிகளையும் ஏற்க மறுத்துவிட்டார்.

    ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் தனது சம்பளத்தை வாங்க போவதில்லை என முடிவு செய்துள்ளார்.

    கொல்லப்ரோலுவில் நடந்த நிகழ்ச்சியில் திங்கள்கிழமை பேசும் போது அவர் இதனை தெரிவித்தார்.

    பிதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட கொல்லப்ரோலு நகரில் பவன் கல்யாண் திங்கள்கிழமை காலை பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கினார்.

    அப்போது, பஞ்சாயத்து ராஜ் துறைக்கு வழங்கப்பட்ட நிதியை முந்தைய அரசு தவறாக ஒதுக்கியதாக பவன் விமர்சித்தார்.

    "ருஷிகொண்டா அரண்மனைக்கு கோடிக்கணக்கில் செலவழிப்பதற்கு பதிலாக, அந்த நிதியை கிராமங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தியிருக்கலாம்," என்றும் அவர் கூறினார்.

    ஆந்திரா 

    'துறை கடனில் இருக்கும் போது சம்பளம் வாங்குவது சரியல்ல': பவன் 

    தளபாடங்களை பழுதுபார்க்குமாறு தனது முகாம் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் தன்னிடம் கேட்டதாகவும், ஆனால் அதற்கு தான் மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

    "எனது சம்பளக் கையெழுத்துக்காகச் செயலக அதிகாரிகள் என்னிடம் வந்தபோது, ​​என்னால் கையெழுத்திட முடியவில்லை. ஆரம்பத்தில் சம்பளம் வாங்கி வேலை செய்யத் திட்டமிட்டேன். இருப்பினும், பஞ்சாயத்து ராஜ்க்கு இப்போது நிதி இல்லை, அது கடுமையான கடனில் உள்ளது," என்று பவன் கூறியுள்ளார்.

    "ஒவ்வொரு துறையின் நிலைமையும் அப்படித்தான் இருக்கிறது. இந்த பிரச்சினைகள் அனைத்தும் சரி செய்யப்பட வேண்டும். துறை கடனில் இருக்கும் போது சம்பளம் வாங்குவது சரியல்ல என்று உணர்ந்தேன். அதனால், நான் சம்பளத்தை வாங்க மறுத்துவிட்டேன். நான் எனது தாய்நாட்டிற்காக பாடுபடுவேன் என்று அவர்களிடம் கூறினேன்" என்று அவர் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆந்திரா

    சமீபத்திய

    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா

    ஆந்திரா

    திறன் மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன் உயர்நீதிமன்றம்
    பள்ளி குழந்தைகளோடு சென்ற ஆட்டோ, லாரி மீது மோதி விபத்து; வைரலாகும் வீடியோ காவல்துறை
    திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல் காரணமாக புது மணப்பெண் உயிரிழப்பு திருமணம்
    நாகர்ஜுன சாகர் அணை திறப்பு விவகாரம் : ஆந்திரா-தெலுங்கானா இடையே கடும் மோதல் தெலுங்கானா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025