NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கருப்பு சட்டைக்கு தடை - ஆளுநர் வருகை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கருப்பு சட்டைக்கு தடை - ஆளுநர் வருகை 
    சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கருப்பு சட்டைக்கு தடை - ஆளுநர் வருகை

    சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கருப்பு சட்டைக்கு தடை - ஆளுநர் வருகை 

    எழுதியவர் Nivetha P
    Jun 27, 2023
    11:40 am

    செய்தி முன்னோட்டம்

    சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் 21ம் பட்டமளிப்பு விழா நாளை(ஜூன்.,28)நடைப்பெறவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கலந்துக்கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கவுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதனிடையே, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள ஆளுநரை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இணையதளம் மூலம் திராவிட விடுதலை கழகம், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இதன் காரணமாக தற்போது சேலம் மாநகர காவல்துறை பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தரவுள்ள அனைவரும் கருப்பு நிற ஆடைகளை அணியாமல் வருவதனை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

    ஆர்ப்பாட்டம் 

    பெரியார் கைத்தடியால் அடித்து விரட்டிய சனாதனத்தினை ஆளுநர் அணிந்து வரக்கூடாது

    இதனையடுத்து மாநகர காவல்துறை அறிவுறுத்தல்படி, கருப்பு நிற ஆடைகளுக்கு தடை விதித்து பல்கலைக்கழக பதிவாளரான தங்கவேல் அவர்கள் சுற்றறிக்கையினை அனுப்பியுள்ளார்.

    இதனை தொடர்ந்து இந்த விழாவிற்கு வருவோர் கைப்பேசிகளை எடுத்து வருவதனையும் தவிர்க்க வேண்டும் என்றும் பெரியார் பல்கலைக்கழக இணைவில் உள்ள கல்லூரிகள் மற்றும் அனைத்து துறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது என்று தெரிகிறது.

    இந்நிலையில் இந்த கருப்பு சட்டைக்கு தடை விதித்துள்ள விவகாரத்திற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அதன்படி, "ஆளுநர் வருகை காரணமாக பல்கலைக்கழக மாணவர்கள் கருப்பு நிற ஆடை அணியக்கூடாது என்று சேலம் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அப்பொழுது, பெரியார் கைத்தடியால் அடித்து விரட்டிய சனாதனத்தினை ஆளுநர் அணிந்து வரக்கூடாது என்றும் காவல்துறை அறிவுறுத்தவேண்டும்" என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆர்.என்.ரவி
    சேலம்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஆர்.என்.ரவி

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம் சிதம்பரம் கோவில்
    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சு - கனிமொழி ஆவேசம் தமிழ்நாடு
    திமுக கூட்டணி கட்சிகள் ஏப்ரல் 12ம் தேதி ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஆளுநர் மாளிகை

    சேலம்

    சேலத்தில் சக மாணவியை கர்ப்பமாக்கிய 10ம் வகுப்பு மாணவன் - அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளி மாணவர்கள்
    பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: இறந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்  இந்தியா
    சேலம் காவிரி ஆற்றி 4 மாணவர்கள் மூழ்கி பலி! சோக சம்பவம்  தமிழ்நாடு
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  அரசு மருத்துவமனை

    காவல்துறை

    கோவையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி - 2 பேர் கைது  கோவை
    உடல் பருமனான காவலர்களுக்கு மூன்று மாத கெடு: அசாம் காவல்துறை அதிரடி  இந்தியா
    கள்ளச்சாராய விவகாரம் - முக்கிய குற்றவாளி கைது  அரசு மருத்துவமனை
    மிசோரத்தில் ரூ.25.20 லட்சம் மதிப்புள்ள போலி இந்திய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்!  இந்தியா

    காவல்துறை

    கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை  மு.க ஸ்டாலின்
    கரூர்: செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய பெண்! காவல்துறை
    சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி  காவல்துறை
    சயனைடு கலந்த மது குடித்து 2 பேர் பலி - டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025