NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பன்னுன் படுகொலை சதி: நிகில் குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பன்னுன் படுகொலை சதி: நிகில் குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

    பன்னுன் படுகொலை சதி: நிகில் குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

    எழுதியவர் Srinath r
    Jan 04, 2024
    05:22 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவில் கொலை சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு செக் குடியரசு நாட்டில் சிறையில் உள்ள நிகில் குப்தா, சட்ட உதவி மற்றும் தூதரக அணுகல் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் சஞ்சீவ் கண்ணா இந்த வழக்கில் நீதிமன்றத்தால் எதுவும் செய்ய முடியாது எனக் கூறி, இதில் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து இந்திய அரசு முடிவு செய்யும் என கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    2nd card

    வெளிநாட்டு நீதிமன்றத்தின் அதிகார வரம்பை மதிக்கவும்: உச்சநீதிமன்ற அமர்வு

    நிகில் குப்தா சார்பில் அவருக்கு வேண்டியவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வெளிநாட்டு நீதிமன்றத்தின் இறையாண்மை, அதிகார வரம்பு மற்றும் அந்த நாட்டின் சட்டத்தை இந்த நீதிமன்றம் மதிக்க வேண்டும் என தெரிவித்து,

    இந்த விஷயத்திற்குள் தலையிட நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

    "வியன்னா ஒப்பந்தத்தின் படி தூதராக அணுகலை பெற உங்களுக்கு அனுமதி உண்டு. அதை நீங்கள் பெற்றுவிட்டீர்கள்" என நீதிபதிகள் கூறியதாக, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது.

    முன்னதாக டிசம்பர் 15ஆம் தேதி இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், குப்தா குடும்பத்தினரை செக் குடியரசு நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    3rd card

    நிகில் குப்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் என்ன இருந்தது?

    நிகில் குப்தா செக் குடியரசு நாட்டிற்கு வணிக ரீதியான பயணம் மேற்கொண்டிருந்த போது, கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி ப்ராக் விமான நிலையத்தில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டதாகவும்,

    அவர் கைதில் முறையான வாரண்ட் பிறப்பிக்கப்படவில்லை எனவும், கைதில் முறைகேடுகள் நடந்ததாகவும் அவரின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மேலும், குப்தா தனிமை சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், உணவாக மாட்டுக்கறி மற்றும் பன்றி இறைச்சி வழங்கப்படுவதால், இது அவரின் மத நம்பிக்கைக்கு எதிராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    குப்தாவிற்கு தூதராக அணுகல் வழங்கப்படவில்லை எனவும், சட்ட ரீதியான மேல் நடவடிக்கைகளை எடுக்க அவரின் குடும்பத்துடன் பேசுவதற்கும் அனுமதிக்கப்படவில்லை எனவும் அந்த மனு குற்றம் சாட்டியது.

    4th card

    நிகில் குப்தா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் என்ன?

    டெல்லியை பூர்வீகமாக கொண்டு அமெரிக்காவில் வசிக்கும் நிகில் குப்தா என்பவர், நியூயார்க்கில் அமெரிக்க-கனடா குடியுரிமை பெற்ற காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய அடியாளை $1 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு பணியமர்த்த முயன்றதாக அந்நாடு குற்றம் சாட்டியது.

    மேலும், இந்திய அதிகாரி ஒருவருடன் குப்தா தொடர்பில் இருந்ததாகவும், அந்த அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரிலேயே பன்னுனை கொல்லும் முயற்சியில் குப்தா இறங்கியதாக, அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை கூறியது.

    குப்தா பணியமர்த்த முயன்ற நபர், ரகசிய பெடரல் ஏஜென்ட்டான காரணத்தால் இந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று செக் குடியரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் பன்னுனை கைது செய்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    அமெரிக்கா
    மத்திய அரசு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    உச்ச நீதிமன்றம்

    நாடு முழுவதும் பட்டாசுகளுக்கு தடை: எந்த வகை பட்டாசுகளுக்கும் அனுமதி இல்லையா? தீபாவளி
    மோசமடையும் காற்று மாசு: பிற மாநில டாக்ஸிகள் டெல்லிக்குள் நுழைய தடை  டெல்லி
    நவம்பர் 20-21 தேதிகளில் டெல்லியில் செயற்கை மழை: ஐஐடி திட்டம்  டெல்லி
    குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட ஆயுட்கால தடை- விரிவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு உயர்நீதிமன்றம்

    அமெரிக்கா

    ஸ்டார்பக்ஸூக்கு எதிராக எழும் முழக்கங்கள்; ஊழியர்களுக்கு சிஇஓ கடிதம் வணிகம்
    "இந்தியாவோ, அமெரிக்காவோ இல்லை. பாகிஸ்தானின் நிலைமைக்கு நாம் தான் காரணம்"- நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான்
    சட்டபூர்வ நடவடிக்கைக்கு உறுதி: பன்னூன் படுகொலை சதி குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் மோடி பிரதமர் மோடி
    பார்டு AI-யில் தேர்தல் குறித்த தகவல்களைக் குறைக்கத் திட்டமிடும் கூகுள் கூகுள்

    மத்திய அரசு

    தேசிய மருத்துவ ஆணையத்தின் லோகோவில் இந்தியாவின் பெயர் 'பாரத்' என மாற்றம் இந்தியா
    முதல் தவணை தங்கக் கடன் பத்திரங்களுக்கான மீட்பு விலையை அறிவித்த ரிசர்வ் வங்கி  முதலீடு
    உத்தரகாண்ட் சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்து ஏற்பட்டதன் பின்னணி: இந்த நெருக்கடியை எப்படி தவிர்த்திருக்கலாம்? உத்தரகாண்ட்
    மணிப்பூரின் பழமையான ஆயுதக் குழுவான UNLF, அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மணிப்பூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025