NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / எமிரேட்ஸ் விமானம் மீது திடீரென விழுந்த லேசர் ஒளி வெளிச்சம்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    எமிரேட்ஸ் விமானம் மீது திடீரென விழுந்த லேசர் ஒளி வெளிச்சம்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
    எமிரேட்ஸ் விமானம் மீது திடீரென விழுந்த லேசர் ஒளி வெளிச்சம்

    எமிரேட்ஸ் விமானம் மீது திடீரென விழுந்த லேசர் ஒளி வெளிச்சம்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    May 26, 2025
    11:33 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு பரபரப்பான தருணம் ஏற்பட்டது.

    துபாயிலிருந்து 326 பயணிகளுடன் சென்னை நோக்கி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது திடீரென பச்சை நிற லேசர் ஒளி தாக்கியதால் விமானம் தரையிறங்கும் தருணத்தில் பதற்றம் நிலவியது.

    விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை மீண்டும் உயரத்தில் பறக்கவைத்து, கட்டுப்பாட்டறையுடன் தொடர்பு கொண்டு நிலையை சீர்செய்தார்.

    பின்னர் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. 326 பயணிகளும் பத்திரமாக விமான நிலையத்தை எட்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விவரங்கள்

    விமானம் மீது பாய்ச்சப்பட்ட லேசர் ஒளி எங்கிருந்து வந்தது?

    விமானம் தரையிறங்கச் சற்று முன், பரங்கிமலை பகுதிக்குத் மேலாக பறந்தபோது, அப்பகுதியிலிருந்து ஒரு சக்தி வாய்ந்த பச்சை நிற லேசர் ஒளி விமானத்தின் மீது பாய்ந்தது.

    இந்த தாக்கம் சில நொடிகள் நீடித்ததாலும், விமானியின் பார்வை பாதிக்கப்பட்டதால், சிறிது நேரம் விமான ஓட்ட சிரமப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து, விமான பாதுகாப்பு பிரிவு (BCAS), சென்னை விமான நிலையம் மற்றும் காவல் துறையினர் இணைந்து விசாரணையைத் தொடங்கி, அந்த ஒளி பரங்கிமலை, நந்தம்பாக்கம், கிண்டி பகுதிகளிலிருந்து வந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சம்பவம்

    ஏற்கனவே இதே போன்றதொரு சம்பவம் நடைபெற்றுள்ளது என தகவல்

    விமானங்கள் மீது லேசர் ஒளி பாயும் சம்பவங்கள் இதற்கு முன்பும் நிகழ்ந்துள்ளன.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், இப்படிப்பட்ட ஒரு சம்பவத்தில் 3 கட்டிட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

    இந்திய விமான நிலைய ஆணையம் இதுபோன்ற செயல்கள் விமான போக்குவரத்துக்கு கடுமையான ஆபத்து ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது.

    பொது மக்களும் இதில் விழிப்புடன் செயல்பட்டு, தகவல் தெரிந்தவுடனே அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

    விசாரணை முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மேலதிக கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமானம்
    விமான நிலையம்
    சென்னை

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    விமானம்

    அலாஸ்காவில் 10 பேருடன் சென்ற அமெரிக்க விமானம் மாயம்; தேடுதல் பணிகள் தீவிரம் உலகம்
    அமெரிக்காவில் காணாமல் போன விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் சடலமாக கண்டெடுப்பு; அமெரிக்க கடலோர காவல்படை தகவல் அமெரிக்கா
    டெல்லி விமான நிலையத்தில் நேரத்திற்கு ஏற்ப கட்டணத்தை மாற்ற திட்டமா? விமான நிலையம்
    தலைப்பாகை இன்றி நாடுகடத்தப்பட்டனரா சீக்கிய இந்தியர்கள்? சாடும் சீக்கிய மத அமைப்பு இந்தியர்கள்

    விமான நிலையம்

    2027-க்குள் டெல்லி விமான நிலைத்தில் இந்தியாவின் முதல் விமான ரயில் அறிமுகம் டெல்லி
    துபாய் செல்லவேண்டிய விமானத்தில் திடீர் புகை: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு சென்னை
    சென்னை விமான நிலையத்தில் விமான அட்டவணையில் திடீர் மாற்றம்; என்ன காரணம்? சென்னை
    மும்பை-நியூயார்க் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; டெல்லிக்கு திருப்பி விடப்பட்ட விமானம்  ஏர் இந்தியா

    சென்னை

    காக்காத்தோப்பு பாலாஜி முதல் ஈரானிய கொள்ளையன் வரை: ஒரே வருடத்தில் 4 என்கவுண்டர்கள் நடத்திய சென்னை கமிஷனர் அருண் தமிழ்நாடு
    சென்னை நோக்கி வந்த விமானத்தின் டயர் செயலிழந்ததால் அவசர தரையிறக்கம் விமானம்
    சென்னையில் பிரபல VR மால்-இல் இனி பார்க்கிங் பிரீ: எப்போதிருந்து? தமிழ்நாடு
    வணிக சிலிண்டர் விலை குறைப்பு; சிலிண்டர் ஒன்றிற்கு ரூ.43.50 குறைந்தது எரிவாயு சிலிண்டர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025