NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரூ.2,000 நோட்டுக்கள் வைத்திருப்போர் வங்கியில் டெபாசிட் செய்ய பான் எண் கட்டாயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரூ.2,000 நோட்டுக்கள் வைத்திருப்போர் வங்கியில் டெபாசிட் செய்ய பான் எண் கட்டாயம்
    ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரூ.2,000 நோட்டுக்கள் வைத்திருப்போர் வங்கியில் டெபாசிட் செய்ய பான் எண் கட்டாயம்

    ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரூ.2,000 நோட்டுக்கள் வைத்திருப்போர் வங்கியில் டெபாசிட் செய்ய பான் எண் கட்டாயம்

    எழுதியவர் Nivetha P
    May 23, 2023
    11:31 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா முழுவதும் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெறப்போவதாக கடந்த 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.

    மேலும் ரூ.2,000 நோட்டுகளை வைத்துள்ளவர்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கிகளில் அந்த நோட்டுகளை கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று(மே.,23) முதல் வங்கிகளில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2,000 நோட்டுக்களை கொடுத்து மாற்றி கொள்ளலாம் அல்லது வங்கி கணக்கில் தங்கள் பணத்தினை வரவு வைத்து கொள்ளலாம்.

    இந்நிலையில் இந்த ரூ.2,000 நோட்டுக்கள் திரும்ப பெறுவதற்கான அறிவிப்பு வெளியான பின்னர் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அவர்கள் முதன்முறையாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

    அதில் அவர், 2016ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையினை ஈடுச்செய்யவே ரூ.2,000நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

    இதனை திரும்பப்பெறுவதால் பொருளாதார பாதிப்புகள் மிகக்குறைவு தான் என்று கூறியுள்ளார்.

    கவர்னர் 

    பொதுமக்கள் சிரமம் இல்லாமல் வங்கிகளில் நோட்டுகளை மாற்ற ஏற்பாடு 

    தொடர்ந்து பேசிய அவர், ரூ.2,000 நோட்டுகளை மாற்றுகையில் பொதுமக்கள் சந்திக்கும் சிரமங்களை குறைக்க வங்கிகள் போதுமான அளவில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

    மேலும் அவர், ரூ.50,000 அல்லது அதற்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டுமானால், 'பான்' எண் வருமானவரி தேவைக்காக குறிப்பிடுவது வழக்கம்.

    இந்த முறையானது ரூ.2,000நோட்டுகளை ரூ.50,000க்கு மேல் டெபாசிட் செய்வோருக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து, செப்டம்பர் மாத இறுதிவரை ரூ.2,000 நோட்டுக்கள் எவ்வளவு வரும் என்பதை பொறுத்தே அடுத்து என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

    சுற்றுலாப்பயணமாக வெளிநாடுச்சென்றவர்களுக்கும், பணி விசா கொண்டு வெளிநாடு சென்ற இந்தியர்களுக்கும் ரூ.2,000நோட்டுகளை மாற்றுவதற்கு ஏதுவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ரிசர்வ்வங்கி கவர்னர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரிசர்வ் வங்கி
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    ரிசர்வ் வங்கி

    அதானி பங்குகள் வீழ்ச்சி; வங்கித் துறை நிலையாக தான் உள்ளது: RBI இந்தியா
    அதானி குழும பிரச்சனை: செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் இந்தியா
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன? தொழில்நுட்பம்
    ரூபாய் நோட்டில் கிறுக்கப்பட்டிருந்தால் அது செல்லாது என்று கூறப்படுவது உண்மையா இந்தியா

    இந்தியா

    பயங்கரவாத சதி அம்பலம்: 12,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்!  பாகிஸ்தான்
    2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்? இந்தியாவை காட்டி பேரம் பேசும் ஐசிசி! ஒலிம்பிக்
    இந்தியாவில் உள்ளவர்கள் கிரீன் கார்டைப் பெறுவதற்கு ஏன் இவ்வளவு தாமதமாகிறது !  அமெரிக்கா
    மீண்டும் இந்தியாவில் வெளியிடப்படுகிறதா 'BGMI' மொபைல் கேம்? கேம்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025