NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆதார் கார்டுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் அனைத்தும் செயலிழந்துவிடும் - மத்திய அரசு
    இந்தியா

    ஆதார் கார்டுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் அனைத்தும் செயலிழந்துவிடும் - மத்திய அரசு

    ஆதார் கார்டுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் அனைத்தும் செயலிழந்துவிடும் - மத்திய அரசு
    எழுதியவர் Nivetha P
    Feb 26, 2023, 11:30 am 0 நிமிட வாசிப்பு
    ஆதார் கார்டுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் அனைத்தும் செயலிழந்துவிடும் - மத்திய அரசு
    ஆதார் கார்டுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் அனைத்தும் செயலிழந்துவிடும் - மத்திய அரசு

    ஆதார் கார்டுடன் பான் கார்டினை ஒன்றிணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறிவருகிறது. முன்னதாக இந்த நடவடிக்கையை பூர்த்தி செய்ய மத்திய அரசு வழங்கியிருந்த கால அவகாசம் கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியோடு நிறைவடைந்தது. அதன் பின்னர் சில நிபந்தனைகளோடு காலக்கெடுவானது இந்த வருடம் மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த முறை இணைப்பினை செய்ய தவறியவர்கள் இம்முறை அதற்கான அபராதத்தை செலுத்திய பின்னர், ஆதார் கார்டுடன் பான் கார்டினை இணைத்து கொள்ளலாம். அப்படியில்லாமல் இம்முறையும் இணைக்க தவறினால் ஏப்ரல் 1ம் தேதி முதல் பான் கார்டினை நீங்கள் எதற்காகவும் பயன்படுத்த இயலாது என்ற நிபந்தனையும் எச்சரிக்கையும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அபராதம் செலுத்தி ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைத்தல்

    இது குறித்து இந்திய வருமான வரித்துறை தனது ட்விட்டர் பக்கத்தில், வருமான வரி சட்டம் 1961ன் படி, அனைத்து பான் அட்டை வாடிக்கையாளர்களும் இந்தாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் அட்டையுடன் இணைந்திருக்க வேண்டும். அப்படியில்லையெனில் 2023ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் ஆதாருடன் இணைக்காத பான் கார்டுகள் அனைத்தும் செயலற்றதாக மாறிவிடும். இது கட்டாயமானது, இன்றே செய்யவும் என்று பதிவு செய்துள்ளார். 2022ம் ஆண்டு மார்ச் மாத இறுதியின் கெடுவை தவறவிட்டு அதே வருடம் ஜூன் 30ம் தேதிக்குள் இணைத்தவர்களிடம் ரூ.500 அபராதம் பெறப்பட்டது. அதன்பின் இணைத்தவர்களுக்கு ரூ.1000 அபராதமாக வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    பான் கார்டு
    மத்திய அரசு

    பான் கார்டு

    ஆதார்-பான் கார்டு இணைப்புக்கு மார்ச் 31 கெடு! இணைப்பது எப்படி? ஆதார் புதுப்பிப்பு
    யூனியன் பட்ஜெட்; பான் கார்ட்டை இனி பொது அடையாள அட்டையாக பயன்படுத்தலாம்! இந்தியா
    பான் எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் என்ன நடக்கும்? எச்சரிக்கை தொழில்நுட்பம்
    மார்ச் 31 கடைசி நாள் - SMS மூலம் பான் மற்றும் ஆதாரை இணைப்பது எப்படி? ஆதார் புதுப்பிப்பு

    மத்திய அரசு

    ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி - ஆர்ப்பாட்டம் செய்யும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    உணவு பாதுகாப்பு துறையின் புதிய நடைமுறை-ஆண்டுதோறும் உரிமத்தை புதுப்பிக்கணும் இந்தியா
    தமிழகத்தில் மழையால் சேதமடைந்த நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு மு.க ஸ்டாலின்
    சென்னையில் பேனா நினைவு சின்னம்-மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு மாநில அரசு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023