NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆதார் கார்டுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் அனைத்தும் செயலிழந்துவிடும் - மத்திய அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆதார் கார்டுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் அனைத்தும் செயலிழந்துவிடும் - மத்திய அரசு
    ஆதார் கார்டுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் அனைத்தும் செயலிழந்துவிடும் - மத்திய அரசு

    ஆதார் கார்டுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் அனைத்தும் செயலிழந்துவிடும் - மத்திய அரசு

    எழுதியவர் Nivetha P
    Feb 26, 2023
    11:30 am

    செய்தி முன்னோட்டம்

    ஆதார் கார்டுடன் பான் கார்டினை ஒன்றிணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறிவருகிறது.

    முன்னதாக இந்த நடவடிக்கையை பூர்த்தி செய்ய மத்திய அரசு வழங்கியிருந்த கால அவகாசம் கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியோடு நிறைவடைந்தது.

    அதன் பின்னர் சில நிபந்தனைகளோடு காலக்கெடுவானது இந்த வருடம் மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, கடந்த முறை இணைப்பினை செய்ய தவறியவர்கள் இம்முறை அதற்கான அபராதத்தை செலுத்திய பின்னர், ஆதார் கார்டுடன் பான் கார்டினை இணைத்து கொள்ளலாம்.

    அப்படியில்லாமல் இம்முறையும் இணைக்க தவறினால் ஏப்ரல் 1ம் தேதி முதல் பான் கார்டினை நீங்கள் எதற்காகவும் பயன்படுத்த இயலாது என்ற நிபந்தனையும் எச்சரிக்கையும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய வருமான வரித்துறை

    அபராதம் செலுத்தி ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைத்தல்

    இது குறித்து இந்திய வருமான வரித்துறை தனது ட்விட்டர் பக்கத்தில், வருமான வரி சட்டம் 1961ன் படி, அனைத்து பான் அட்டை வாடிக்கையாளர்களும் இந்தாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் அட்டையுடன் இணைந்திருக்க வேண்டும்.

    அப்படியில்லையெனில் 2023ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் ஆதாருடன் இணைக்காத பான் கார்டுகள் அனைத்தும் செயலற்றதாக மாறிவிடும்.

    இது கட்டாயமானது, இன்றே செய்யவும் என்று பதிவு செய்துள்ளார்.

    2022ம் ஆண்டு மார்ச் மாத இறுதியின் கெடுவை தவறவிட்டு அதே வருடம் ஜூன் 30ம் தேதிக்குள் இணைத்தவர்களிடம் ரூ.500 அபராதம் பெறப்பட்டது.

    அதன்பின் இணைத்தவர்களுக்கு ரூ.1000 அபராதமாக வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    பான் கார்டு

    சமீபத்திய

    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025
    'மீண்டும் ஒரு தாக்குதல் நடந்தால், இந்தியா உறுதியான பதிலடி கொடுக்கும்': மோடி ஆபரேஷன் சிந்தூர்
    இந்தக் காரணங்களுக்காக தான் அமெரிக்கா இந்தியர்களுக்கு மாணவர் விசாக்களை மறுக்கிறதாம்! அமெரிக்கா

    மத்திய அரசு

    நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல் கோவிட் தடுப்பூசி
    பொருளாதார ஆய்வறிக்கை: 2023-24 நிதியாண்டில் ஜிடிபி 6.5 சதவீத வளர்ச்சி பதிவாகும் பட்ஜெட் 2023
    மத்திய பட்ஜெட் 2023-24: சிறப்பம்சங்கள் நிர்மலா சீதாராமன்
    பட்ஜெட் 2023-24: நிதியமைச்சரின் சீரியஸான பட்ஜெட் உரையின் ஊடே நடைபெற்ற, சில சுவாரஸ்ய தருணங்கள் பட்ஜெட் 2023

    பான் கார்டு

    யூனியன் பட்ஜெட்; பான் கார்ட்டை இனி பொது அடையாள அட்டையாக பயன்படுத்தலாம்! பட்ஜெட் 2023
    ஆதார்-பான் கார்டு இணைப்புக்கு மார்ச் 31 கெடு! இணைப்பது எப்படி? ஆதார் புதுப்பிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025