NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரை மாவட்டம், பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரருக்கு புதிய கார் பரிசாக வழங்கப்பட்டது
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுரை மாவட்டம், பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரருக்கு புதிய கார் பரிசாக வழங்கப்பட்டது
    பாலமேடு ஜல்லிக்கட்டில் 23 காளைகளை அடக்கி வெற்றிப்பெற்றவருக்கு நிஸான் கார் பரிசளிக்கப்பட்டது

    மதுரை மாவட்டம், பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரருக்கு புதிய கார் பரிசாக வழங்கப்பட்டது

    எழுதியவர் Nivetha P
    Jan 17, 2023
    07:40 pm

    செய்தி முன்னோட்டம்

    பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வரும் நிலையில், மதுரை மாவட்ட பாலமேட்டில் நேற்று கோலாகலமாக ஜல்லிக்கட்டு போட்டி அரங்கேறியது.

    தமிழக வணிகவரித்துறை அமைச்சர், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தனர்.

    ஒன்பது சுற்றுகள் கொண்டு நடத்தப்பட்ட இந்த போட்டியில் 877 காளைகள் களம் கண்டது, 345 மாடுபிடி வீரர்கள் களமிறங்கி காளைகளை பிடிக்க முயன்றனர்.

    இதில் 31 பேர் காயமடைந்த நிலையில், பாலமேட்டை சேர்ந்த அரவிந்த் ராஜ் என்பவரது மார்பு பகுதியில் காளை முட்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பரிசு

    முதல் இடத்தை பெற்ற மாடுபிடி வீரருக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள நிஸான் கார் பரிசு

    இதனையடுத்து, சின்னப்பட்டி கிராமத்தை சேர்ந்த தமிழரசன் 23 காளைகளை பிடித்து சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பாக வழங்கப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள நிஸான் காரை பரிசாக பெற்றார்.

    அடுத்து, பாலமேட்டை சேர்ந்த மணி என்பவர் 19 காளைகள் பிடித்து இரண்டாம் இடத்தை பெற்றார்.

    இவருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

    மதுரை மாவட்ட ரங்கராஜபுரம் கருப்பசாமி கோயில் காளை முதல் இடத்தை பிடித்தது.

    இந்த காளையின் உரிமையாளருக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

    மானூத்தை சேர்ந்த மணி என்பவரது காளை இரண்டாவது இடத்தை பிடித்த நிலையில், அவருக்கு ஒரு பசு கன்றுக்குட்டியுடன் பரிசாக அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதுரை
    பொங்கல் திருநாள்

    சமீபத்திய

    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025

    மதுரை

    கடந்த ஆண்டில் ரூ.11 கோடி மதிப்புள்ள 1400 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 1981 வழக்குகள் பதிவு இந்தியா
    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமையும் - மத்திய அரசு உறுதி இந்தியா
    மதுரையில் பரபரப்பு - ஆட்சியர் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 29,000 சேலைகள் மற்றும் 19,000 வேட்டிகள் கருகின பொங்கல் பரிசு
    அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்தியா

    பொங்கல் திருநாள்

    பொங்கல் சிறப்பு ரயில்களின் பட்டியல் இதோ! பொங்கல்
    பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம் பொங்கல் பரிசு
    சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை துவக்கம் - சில நிமிடங்களில் விற்றுப்போன பயணச்சீட்டுக்கள் ரயில்கள்
    2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்-பொதுமக்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்க தமிழக அரசு முடிவு பொங்கல் பரிசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025