NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரை மாவட்டம், பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரருக்கு புதிய கார் பரிசாக வழங்கப்பட்டது
    இந்தியா

    மதுரை மாவட்டம், பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரருக்கு புதிய கார் பரிசாக வழங்கப்பட்டது

    மதுரை மாவட்டம், பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரருக்கு புதிய கார் பரிசாக வழங்கப்பட்டது
    எழுதியவர் Nivetha P
    Jan 17, 2023, 07:40 pm 0 நிமிட வாசிப்பு
    மதுரை மாவட்டம், பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரருக்கு புதிய கார் பரிசாக வழங்கப்பட்டது
    பாலமேடு ஜல்லிக்கட்டில் 23 காளைகளை அடக்கி வெற்றிப்பெற்றவருக்கு நிஸான் கார் பரிசளிக்கப்பட்டது

    பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வரும் நிலையில், மதுரை மாவட்ட பாலமேட்டில் நேற்று கோலாகலமாக ஜல்லிக்கட்டு போட்டி அரங்கேறியது. தமிழக வணிகவரித்துறை அமைச்சர், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தனர். ஒன்பது சுற்றுகள் கொண்டு நடத்தப்பட்ட இந்த போட்டியில் 877 காளைகள் களம் கண்டது, 345 மாடுபிடி வீரர்கள் களமிறங்கி காளைகளை பிடிக்க முயன்றனர். இதில் 31 பேர் காயமடைந்த நிலையில், பாலமேட்டை சேர்ந்த அரவிந்த் ராஜ் என்பவரது மார்பு பகுதியில் காளை முட்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    முதல் இடத்தை பெற்ற மாடுபிடி வீரருக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள நிஸான் கார் பரிசு

    இதனையடுத்து, சின்னப்பட்டி கிராமத்தை சேர்ந்த தமிழரசன் 23 காளைகளை பிடித்து சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பாக வழங்கப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள நிஸான் காரை பரிசாக பெற்றார். அடுத்து, பாலமேட்டை சேர்ந்த மணி என்பவர் 19 காளைகள் பிடித்து இரண்டாம் இடத்தை பெற்றார். இவருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. மதுரை மாவட்ட ரங்கராஜபுரம் கருப்பசாமி கோயில் காளை முதல் இடத்தை பிடித்தது. இந்த காளையின் உரிமையாளருக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. மானூத்தை சேர்ந்த மணி என்பவரது காளை இரண்டாவது இடத்தை பிடித்த நிலையில், அவருக்கு ஒரு பசு கன்றுக்குட்டியுடன் பரிசாக அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    பொங்கல் திருநாள்
    மதுரை

    சமீபத்திய

    கர்நாடகாவில் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தினை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    ஐபிஎல் 2023 : ஐடென் மார்க்ரம் தலைமையில் அதிரடி காட்டுமா சன்ரைசர்ஸ் ஹைதராபாத்? ஐபிஎல் 2023
    திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை திருச்சி
    அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் தமிழ்நாடு

    பொங்கல் திருநாள்

    திருக்குறள் மீதுள்ள ஆர்வம் - புதுவித கூகுள் டூடூலை வடிவமைத்த வாலிபர் கூகுள்
    களைகட்டும் காணும் பொங்கல் - சென்னையில் 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் சென்னை
    காணும் பொங்கல்: சுற்றுலா தளங்களில் குவியும் பொதுமக்கள் பொங்கல்
    பொங்கல் 2023 ஸ்பெஷல்: காணும் பொங்கல் பற்றி சில தகவல்கள் பொங்கல்

    மதுரை

    தமிழக பட்ஜெட்டில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கோவை
    மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை வரும் ஏப்ரல் 8ம் தேதி அடைப்பு கோவில் திருவிழாக்கள்
    அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட தமிழ் தம்பதி - தவிக்கும் குழந்தை அமெரிக்கா
    உசிலம்பட்டியில் 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்து கொலை மாவட்ட செய்திகள்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023