NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அசாம்: குழந்தை திருமணம் செய்து கொண்ட 800 பேர் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அசாம்: குழந்தை திருமணம் செய்து கொண்ட 800 பேர் கைது 
    அசாம் மாநிலத்தில் 31.8 சதவீதம் பெண்கள் குழந்தை திருமணம் செய்து கொண்டவர்கள் ஆவர்.

    அசாம்: குழந்தை திருமணம் செய்து கொண்ட 800 பேர் கைது 

    எழுதியவர் Sindhuja SM
    Oct 03, 2023
    05:26 pm

    செய்தி முன்னோட்டம்

    அசாமில் குழந்தை திருமணங்களுக்கு எதிரான மாநிலம் தழுவிய இரண்டாம் கட்ட நடவடிக்கையில் 800க்கும் மேற்பட்டோர் இன்று(அக். 3) கைது செய்யப்பட்டதாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்பட்ட முதல்கட்ட நடவடிக்கையின் போது, ​​மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

    "குழந்தை திருமணத்திற்கு எதிரான சிறப்பு நடவடிக்கையில் 800க்கும் மேற்பட்ட குற்றம் சாட்டப்பட்ட நபர்களை அசாம் காவல்துறை கைது செய்துள்ளது" என்று முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா X தளத்தில்(ட்விட்டர்) தெரிவித்துள்ளார்.

    இந்த நடவடிக்கை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதால் சமூக அச்சுறுத்தல் தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

    சஜஸ்க்

    குழந்தை  திருமணம் செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அசாமில் மிகவும் அதிகம்

    கடந்த 5 ஆண்டுகளில் குழந்தைத் திருமணங்கள் தொடர்பான வழக்குகளில் மொத்தம் 3,907 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் 3,319 பேர் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின்(போக்சோ) கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர் என்றும் கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி, முதல்வர் சர்மா அசாம் சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    2019 மற்றும் 2020க்கு இடையில் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-5 (NFHS-5) மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் படி, அசாம் மாநிலத்தில் 20-24 வயதுக்குட்பட்ட 31.8 சதவீதம் பெண்கள், 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டவர்கள் ஆவர்.

    இது தேசிய விகிதமான 23.3 சதவீதத்தை விட அதிகமானதாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அசாம்
    இந்தியா
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    காஷ்மீரில் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர்; தொடரும் துப்பாக்கிச் சண்டை  ஜம்மு காஷ்மீர்
    மற்றொரு பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய அதிகாரியை 24 மணி நேரத்தில் வெளியேற உத்தரவிட்ட இந்தியா இந்தியா
    தமிழகம், புதுச்சேரியில் மே 27 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வானிலை ஆய்வு மையம்
    டிரம்ப் தான் காரணமா? இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்த கூற்று குறித்து முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விமர்சனம் அமெரிக்கா

    அசாம்

    குழந்தை திருமணத்தை முறியடிக்கும் முயற்சி: அசாமில் 1800க்கும் மேற்பட்டோர் கைது இந்தியா
    லியோனார்டோ டிகாப்ரியோவை காசிரங்காவுக்கு அழைத்த அசாம் முதல்வர் இந்தியா
    அசாம்: போக்ஸோ சட்டத்தின் கீழ் குழந்தை திருமண வழக்குகள் வருமா இந்தியா
    போர் விமானத்தில் பறந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இந்தியா

    இந்தியா

    ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: தடகளத்தில் மேலும் இரண்டு பதக்கங்களை வென்றது இந்தியா தடகள போட்டி
    சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி வணிகம்
    இந்தியாவுடன் தூதராக உறவுகளை நிறுத்தியது ஆப்கானிஸ்தான் ஆப்கானிஸ்தான்
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதிய வரலாறு படைத்த இந்திய கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக் ஆசிய விளையாட்டுப் போட்டி

    காவல்துறை

    மதுரை ரயில் தீ விபத்து - கேஸ் சிலிண்டர் வெடிப்பு குறித்து 2வது நாளாக தொடரும் விசாரணை  மதுரை
    மத்திய அமைச்சர் வீட்டில், இளைஞர் சுட்டுக்கொலை காவல்துறை
    அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன் நாம் தமிழர்
    ராஜஸ்தானில் பெண்ணை நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற கணவர் கைது - அதிர்ச்சி சம்பவம் ராஜஸ்தான்

    காவல்துறை

    பள்ளி பேருந்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் போக்சோவில் கைது டெல்லி
    திருவண்ணாமலை கிரிவலப்பாதை - குற்றப்பின்னணியுள்ள சாமியார்களை கண்டறியும் பணி திருவண்ணாமலை
    அயர்லாந்தில் இருந்து ரூ.9,000 கோடி பணம் வருவதாக கூறி தொழிலதிபர்களிடம் பணம் பறிப்பு - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    பல்லடம் கொலை சம்பவம்: CCTV -யில் சிக்கிய முக்கிய குற்றவாளி வெங்கடேஷ் கொலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025