NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குழந்தை திருமணத்தை முறியடிக்கும் முயற்சி: அசாமில் 1800க்கும் மேற்பட்டோர் கைது
    இந்தியா

    குழந்தை திருமணத்தை முறியடிக்கும் முயற்சி: அசாமில் 1800க்கும் மேற்பட்டோர் கைது

    குழந்தை திருமணத்தை முறியடிக்கும் முயற்சி: அசாமில் 1800க்கும் மேற்பட்டோர் கைது
    எழுதியவர் Sindhuja SM
    Feb 03, 2023, 02:35 pm 1 நிமிட வாசிப்பு
    குழந்தை திருமணத்தை முறியடிக்கும் முயற்சி: அசாமில் 1800க்கும் மேற்பட்டோர் கைது
    அடுத்த 6-7 நாட்களில் 18 வயதுக்குட்பட்ட பெண்களை திருமணம் செய்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் ஆண்கள் கைது செய்யப்படுவார்கள்: அசாம் முதல்வர்

    அசாமில் குழந்தைத் திருமணத்தை முறியடிக்கும் முயற்சியாக இதுவரை 1,800க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று(பிப் 03) தெரிவித்தார். "சகிப்புத்தன்மை அறவே இல்லாத உணர்வோடு செயல்பட வேண்டும்" என்று அசாம் காவல்துறையை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் முதல்வர் கூறியுள்ளார். "குழந்தை திருமணத் தடைச் சட்டத்தின் விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக மாநிலம் முழுவதும் தற்போது கைது நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 1800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான மன்னிக்க முடியாத மற்றும் கொடூரமான குற்றங்களுக்கு சகிப்புத்தன்மை அறவே இல்லாத உணர்வோடு செயல்பட வேண்டும் என்று அசாம் காவல்துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்." என்று அவர் ஒரு ட்விட்டரில் கூறியுள்ளார்.

    அசாம் மாநிலமும் குழந்தை திருமணங்களும்

    2019 மற்றும் 2020க்கு இடையில் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-5 (NFHS-5) மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் படி, அசாம் மாநிலத்தில் 20-24 வயதுக்குட்பட்ட 31.8 சதவீதம் பெண்கள், 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டவர்கள் ஆவர். இது தேசிய விகிதமான 23.3 சதவீதத்தை விட அதிகமானதாகும். NFHS-5, கணக்கெடுப்பின் போது, 15-19 வயதுக்குட்பட்ட பெண்களில் 11.7 சதவீதம் பேர் ஏற்கனவே தாய்மார்கள் ஆகி இருந்தனர் அல்லது கர்ப்பமாக இருந்தனர். இது தேசிய எண்ணிக்கையான 6.8 சதவீதத்தை விட அதிகமானதாகும். 14 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு திருமணம் செய்து வைக்கும் குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்திருந்தார். இன்றிலிருந்து இந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளன.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    அசாம்

    சமீபத்திய

    ஆஸ்கார் விருதுகள் 2023: இந்தியாவில் இந்த விழாவை எப்போது, ​​எங்கு பார்க்கலாம்? ஆஸ்கார் விருது
    ஆஸ்கார் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ள "நாட்டு கூத்து" பாடல்: ஒரு குட்டி பிளஷ்பேக் ஆஸ்கார் விருது
    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் நேர்ந்த 2 தற்கொலைகள் - சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு
    சுற்றுலா என்றால் வெளிநாடுகளுக்கு செல்வது மட்டுமல்ல - சித்தார்த் கண்டோத் சென்னை

    இந்தியா

    மகள்களுக்கு சொத்துரிமை இல்லாததால் மீண்டும் திருமணம் செய்து கொண்ட இஸ்லாமிய தம்பதியர் கேரளா
    சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 7,000 கிமீ சைக்கிளில் பயணம் செய்த இளைஞர் ராஜஸ்தான்
    ஐஐடி தலித் மாணவர் தற்கொலை: நியாயம் கோரும் மாணவர்கள் மும்பை
    10 லட்சம் ரிட்டன் தரும் எல்.ஐ.சி. சூப்பரான பாலிசி திட்டம்! சேமிப்பு திட்டங்கள்

    அசாம்

    அசாம்: போக்ஸோ சட்டத்தின் கீழ் குழந்தை திருமண வழக்குகள் வருமா இந்தியா
    லியோனார்டோ டிகாப்ரியோவை காசிரங்காவுக்கு அழைத்த அசாம் முதல்வர் இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023