NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குழந்தை திருமணத்தை முறியடிக்கும் முயற்சி: அசாமில் 1800க்கும் மேற்பட்டோர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    குழந்தை திருமணத்தை முறியடிக்கும் முயற்சி: அசாமில் 1800க்கும் மேற்பட்டோர் கைது
    அடுத்த 6-7 நாட்களில் 18 வயதுக்குட்பட்ட பெண்களை திருமணம் செய்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் ஆண்கள் கைது செய்யப்படுவார்கள்: அசாம் முதல்வர்

    குழந்தை திருமணத்தை முறியடிக்கும் முயற்சி: அசாமில் 1800க்கும் மேற்பட்டோர் கைது

    எழுதியவர் Sindhuja SM
    Feb 03, 2023
    02:35 pm

    செய்தி முன்னோட்டம்

    அசாமில் குழந்தைத் திருமணத்தை முறியடிக்கும் முயற்சியாக இதுவரை 1,800க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று(பிப் 03) தெரிவித்தார்.

    "சகிப்புத்தன்மை அறவே இல்லாத உணர்வோடு செயல்பட வேண்டும்" என்று அசாம் காவல்துறையை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.

    "குழந்தை திருமணத் தடைச் சட்டத்தின் விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக மாநிலம் முழுவதும் தற்போது கைது நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 1800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான மன்னிக்க முடியாத மற்றும் கொடூரமான குற்றங்களுக்கு சகிப்புத்தன்மை அறவே இல்லாத உணர்வோடு செயல்பட வேண்டும் என்று அசாம் காவல்துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்." என்று அவர் ஒரு ட்விட்டரில் கூறியுள்ளார்.

    அசாம்

    அசாம் மாநிலமும் குழந்தை திருமணங்களும்

    2019 மற்றும் 2020க்கு இடையில் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-5 (NFHS-5) மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வின் படி, அசாம் மாநிலத்தில் 20-24 வயதுக்குட்பட்ட 31.8 சதவீதம் பெண்கள், 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டவர்கள் ஆவர். இது தேசிய விகிதமான 23.3 சதவீதத்தை விட அதிகமானதாகும்.

    NFHS-5, கணக்கெடுப்பின் போது, 15-19 வயதுக்குட்பட்ட பெண்களில் 11.7 சதவீதம் பேர் ஏற்கனவே தாய்மார்கள் ஆகி இருந்தனர் அல்லது கர்ப்பமாக இருந்தனர். இது தேசிய எண்ணிக்கையான 6.8 சதவீதத்தை விட அதிகமானதாகும்.

    14 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு திருமணம் செய்து வைக்கும் குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்திருந்தார்.

    இன்றிலிருந்து இந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    இந்தியா

    மகனுக்கு 'இந்தியா' என பெயர்சூட்டிய பாகிஸ்தான் தம்பதி - வினோத காரணம் பாகிஸ்தான்
    அதானி குழுமத்தில் செய்த முதலீட்டில் இழப்பு ஏதும் இல்லை: LIC பங்குச் சந்தை
    ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள் உத்தரகாண்ட்
    2023ஆம் நிதியாண்டில் 6.1 சதவீதம் இந்தியா பொருளாதாரம் வீழ்ச்சியடையும்! ஐஎம்எஃப் கணிப்பு; வணிக செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025