NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'ட்விட்டரின் முன்னாள் CEO ஜாக் டோர்சி கூறுவது அப்பட்டமான பொய்': மத்திய அரசு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'ட்விட்டரின் முன்னாள் CEO ஜாக் டோர்சி கூறுவது அப்பட்டமான பொய்': மத்திய அரசு 
    நேற்று யூடியூப் சேனலான பிரேக்கிங் பாயிண்ட்ஸ் நடத்திய ஒரு நேர்காணலில் ட்விட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சி கலந்து கொண்டார்.

    'ட்விட்டரின் முன்னாள் CEO ஜாக் டோர்சி கூறுவது அப்பட்டமான பொய்': மத்திய அரசு 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 13, 2023
    12:07 pm

    செய்தி முன்னோட்டம்

    அரசாங்கத்தை விமர்சிக்கும் கணக்குகளை முடக்க கோரி இந்திய அரசாங்கங்கம் ட்விட்டரை மிரட்டியதாக ட்விட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சி கூறி இருந்த குற்றச்சாட்டை இந்திய அரசாங்கம் இன்று(ஜூன் 13) கடுமையாக மறுத்துள்ளது.

    இதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "ஜாக் டோர்சி கூறுவது அப்பட்டமான பொய். ட்விட்டரின் வரலாற்றில் சந்தேகத்திற்குரிய ஒரு காலகட்டத்தை மறைப்பதற்கான முயற்சி இது" என்று ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

    நேற்று யூடியூப் சேனலான பிரேக்கிங் பாயிண்ட்ஸ் நடத்திய ஒரு நேர்காணலில் ட்விட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சி கலந்து கொண்டார்.

    அப்போது, ஜாக் டோர்ஸிடம் வெளிநாட்டு அரசாங்கங்களிலிருந்து ஏதேனும் அழுத்தத்தை எதிர்கொண்டீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது.

    detaisl

    தவறான தகவல்களை அகற்ற வேண்டிய கட்டாயம் இந்திய அறைக்கு ஏற்பட்டது 

    அதற்கு பதிலளித்த டோர்ஸி, இந்திய அரசாங்கம் ட்விட்டரை மிரட்டியது என்று கூறினார்.

    இந்நிலையில், இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அமைச்சர் ராஜீவ்-சந்திரசேகர், "டோர்சி ட்விட்டரை நடத்திக்கொண்டிருந்த போது இந்திய சட்டத்தின் இறையாண்மையை ஏற்பதில் ட்விட்டருக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்தியாவின் சட்டங்கள் ட்விட்டருக்கு பொருந்தாது என்பது போல் நடந்து கொண்டனர். இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட நாடாகும். இந்தியாவில் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் இந்தியாவின் சட்டத்தை பின்பற்றுவது அவசியம். 2021 ஜனவரியில் நடந்த போராட்டங்களின் போது, ​​நிறைய தவறான தகவல்களும், இனப்படுகொலை பற்றிய செய்திகளும் கூட வெளியாகின. அவை அனைத்தும் நிச்சயமாக போலியானவை. தவறான தகவல்களை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் அப்போது அரசாங்கம் இருந்தது. அப்படி செய்யவில்லை என்றால் பிரச்சனை மேலும் வலுவடைந்திருக்கும்" என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மத்திய அரசு
    ட்விட்டர்

    சமீபத்திய

    அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகம் முழுவதும் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம்
    ஈபிஎப்ஓ 3.0 முதல் செபி விதி மாற்றம் வரை; ஜூன் மாதம் அமலாகும் மாற்றங்கள் வருங்கால வைப்பு நிதி
    அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; முககவசம் அணியுமாறு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல் கொரோனா
    துணைத் தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை

    இந்தியா

    இந்தியாவில் ஒரே நாளில் 199 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி  கொரோனா
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் அவித்த காதலன்: மும்பையின் கொடூர கொலை வழக்கு  கொலை
    கனடாவில் நடந்த இந்திரா காந்தியின் படுகொலை கொண்டாட்டம்: இந்திய தலைவர்கள் கடும் எதிர்ப்பு  எஸ்.ஜெய்சங்கர்
    பிரதமர் மோடியைச் சந்திக்கவிருக்கிறார் OpenAI நிறுவனர் சாம் ஆல்ட்மேன் செயற்கை நுண்ணறிவு

    மத்திய அரசு

    இருமல் மருந்து பரிசோதனைகள் ஜூன் 1 முதல் அரசு ஆய்வகங்களில் தொடங்குகிறது  இந்தியா
    யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த சென்னை மாணவி ஜீஜீ பேட்டி  தமிழ்நாடு
    மத்திய அரசு Vs எதிர்க்கட்சிகள்: மம்தா பானர்ஜி-அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு இந்தியா
    புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவினை புறக்கணிக்கும் திமுக, விசிக  திமுக

    ட்விட்டர்

    மைக்ரோசாஃப்டின் அறிவிப்பு.. வழக்கு தொடர்வதாக எச்சரித்த எலான் மஸ்க்.. என்ன பிரச்சினை?  மைக்ரோசாஃப்ட்
    நீல நிற செக் மார்க்.. இன்றே கடைசி நாள்.. ட்விட்டர் நிறுவனம் அறிவிப்பு!  எலான் மஸ்க்
    மாத சந்தா செலுத்தாததால், ட்விட்டரில் ப்ளூ டிக்-ஐ இழந்த கோலிவுட் பிரபலங்கள் கோலிவுட்
    கட்டணம் செலுத்தாதவர்களின் கணக்கில் நீல நிற செக் மார்க்கை நீக்கியது ட்விட்டர்!  சமூக வலைத்தளம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025