NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இன்றைய நாடளுமன்ற நிகழ்வுகள்: நீட் முறைகேடு குறித்த விவாதத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகிறது
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்றைய நாடளுமன்ற நிகழ்வுகள்: நீட் முறைகேடு குறித்த விவாதத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகிறது

    இன்றைய நாடளுமன்ற நிகழ்வுகள்: நீட் முறைகேடு குறித்த விவாதத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகிறது

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 28, 2024
    09:01 am

    செய்தி முன்னோட்டம்

    இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நீட்-யுஜி தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.

    காரசாரமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் இந்த விவாதத்தை சமாளிக்க மத்திய அரசும் தயாராக உள்ளது என்று செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.

    முன்னதாக 18ஆம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை துவங்கியது.

    அப்போது, மக்களவையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்கள் பதவியேற்பின் போதே, ​​எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் நீட் விவகாரம் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.

    தொடர்ந்து நேற்று இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது எதிர்க்கட்சிகள் நீட் விவகாரத்தை எழுப்பலாம் என வட்டாரங்கள் தெரிவித்தன.

    நீட் விவாதம்

    நீட் விவாதம்

    இந்த நிலையில் எதிர்கட்சில் இந்த இன்று விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு வேளை எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினால், அதனை எதிர்கொள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலையிடலாம்.

    "நீட் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் அரசாங்கம் பதிலளிக்கும், ஏனெனில் பிரச்சினையை சரிசெய்ய ஆளும் ஆட்சியால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன," என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

    முன்னதாக, காங்கிரஸ் தலைவர் மலிகார்ஜுன் கார்கேவின் இல்லத்தில் நடைபெற்ற இந்திய அணித் தலைவர்கள் கூட்டத்தில், நீட் விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    உண்மையில், இரு அவைகளிலும் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுக்கும் என்று ஒருமித்த கருத்து இருந்தது.

    எதிர்க்கட்சிகள்

    விவாதிக்க தயாராகும் எதிர்க்கட்சிகள் 

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சரத் பவார், சுப்ரியா சூலே, திமுக தலைவர் கனிமொழி, சிவசேனா (யுபிடி) தலைவர்கள் சஞ்சய் ராவத், பிரியங்கா சதுர்வேதி, அரவிந்த் சாவந்த், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் சஞ்சய் சிங், சந்தீப் பதக் மற்றும் பலர் இந்த விவகாரத்தில் கேள்வி எழுப்பக்கூடும்.

    முன்னதாக ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜுன் கார்கே, மூன்று நாட்களுக்குள், முறையான ஒருங்கிணைப்பு இருப்பதை உறுதிசெய்யும் முயற்சியில், தளத் தலைவர்களுடன் இரண்டு சந்திப்புகளை நடத்தினார்.

    இதைத்தொடர்ந்து நேற்று நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதியின் உரையை கார்கே விமர்சித்து, நீட் மற்றும் பிற அழுத்தமான பிரச்சினைகளில் முறைகேடுகள் குறித்த தீர்மானம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று கூறினார். "

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாடாளுமன்றம்
    நீட் தேர்வு

    சமீபத்திய

    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக

    நாடாளுமன்றம்

    நாடாளுமன்றத்தில் அத்துமீறல் - பாதுகாப்பு பணி சி.ஐ.எஸ்.எப். வசம் ஒப்படைப்பு  மக்களவை
    தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதா மக்களவையில் நிறைவேற்றம் இந்தியா
    நாடாளுமன்றத்தில் மேலும் 3 எம்பிக்கள் இடைநீக்கம், மொத்த எண்ணிக்கை 146 ஆக உயர்வு நாடாளுமன்ற அத்துமீறல்
    எம்பிக்கள் இடை நீக்கத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்: எம்பி ராகுல் காந்தி பங்கேற்கிறார் ராகுல் காந்தி

    நீட் தேர்வு

    நாடு முழுவதும் நீட் தேர்வு மே 07 இல் நடக்கிறது! முன் ஏற்பாடுகள் தீவிரம்  இந்தியா
    தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் நீட் தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை  சென்னை
    நீட் தேர்வு: மாநிலத்தில் 2ஆம் இடத்தை பிடித்த கட்டிடத் தொழிலாளியின் மகள் தமிழ்நாடு
    நீலகிரி: நீட் தேர்வை வென்ற முதல் பழங்குடியின மாணவி  நீலகிரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025