NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அதானி குழும பிரச்சனை: எதிர்க்கட்சிகளின் பேரணியை தடுத்து நிறுத்தியது காவல்துறை
    அதானி குழும பிரச்சனை: எதிர்க்கட்சிகளின் பேரணியை தடுத்து நிறுத்தியது காவல்துறை
    இந்தியா

    அதானி குழும பிரச்சனை: எதிர்க்கட்சிகளின் பேரணியை தடுத்து நிறுத்தியது காவல்துறை

    எழுதியவர் Sindhuja SM
    March 15, 2023 | 01:41 pm 1 நிமிட வாசிப்பு
    அதானி குழும பிரச்சனை: எதிர்க்கட்சிகளின் பேரணியை தடுத்து நிறுத்தியது காவல்துறை
    திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்த பேரணியில் கலந்துகொள்ள போவதில்லை

    அதானி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி 18 எதிர்க்கட்சி தலைவர்கள் நடத்திய பேரணி இன்று(மார் 15) பிற்பகல் நாடாளுமன்றத்தில் இருந்து தொடங்கியவுடன் டெல்லி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதானி-ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வலியுறுத்தி டெல்லியில் உள்ள அமலாக்க இயக்குனரகத்தின் (ED) அலுவலகத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பேரணியாக செல்ல முயன்றனர். எதிர்க்கட்சி தலைவர்களின் பேரணியை தடுக்க பெரும் படையை நிறுத்திய போலீஸார், அவர்களை விஜய் சவுக் பக்கம் போகவிடாமல் தடுப்புகளை வைத்து தடுத்தனர். மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்த பேரணியில் கலந்துகொள்ள போவதில்லை என்று கூறப்படுகிறது.

    நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் காங்கிரஸ்

    அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அண்மையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையில், அதிக கடன் வைத்திருக்கும் நிறுவனம் என்றும் வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க "வரி ஏமாற்று புகலிடங்களை" பயன்படுத்தும் நிறுவனம் என்றும் அதானி குழுமத்தை விமர்சித்திருந்தது. மேலும், பங்குகளை கையாளுதல், கணக்கியல் மோசடி போன்ற குற்றச்சாட்டுகளும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், அதானி நிறுவன பங்குகள் பெரும் வீழ்ச்சியை கண்டது. இதனையடுத்து, பங்குச் சரிவால் எழும் சிக்கல்களை ஆராய 6 பேர் கொண்ட நிபுணர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நிபுணர் குழு போதாதது என்றும் நாடாளுமன்ற கூட்டுக் குழு (JPC) மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    காங்கிரஸ்
    நாடாளுமன்றம்

    இந்தியா

    வீட்டு அலமாரிக்குள் கண்டெடுக்கப்பட்ட மும்பை பெண்ணின் உடல் மும்பை
    'சமோசா' விற்று, நாளொன்றுக்கு ரூ.12 லட்சம் வரை சம்பாதிக்கும் பெங்களூரு தம்பதி வைரல் செய்தி
    புதுச்சேரியில் மார்ச் 16 முதல் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல் புதுச்சேரி
    எரிக் கார்செட்டியை இந்தியாவிற்கான அடுத்த அமெரிக்க தூதராக நியமிக்குமா அமெரிக்கா உலகம்

    காங்கிரஸ்

    பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடக்கம்: 16 எதிர்க்கட்சிகள் சந்திப்பு மோடி
    மின்வெட்டால் தான் மக்கள் தொகை அதிகரித்தது: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு இந்தியா
    'பொட்டு ஏன் வைக்கவில்லை': மகளிர் தினத்தன்று பெண்ணிடம் கத்திய பாஜக எம்பி இந்தியா
    ஈரோட்டில் வெற்றி பெற்றதையடுத்து தமிழக முதல்வரை சந்தித்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழ்நாடு

    நாடாளுமன்றம்

    குரங்கு கடியால் இறந்தவர்கள் பற்றிய பதிவுகள் இல்லை: மத்திய அரசு இந்தியா
    தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜே.என்.யூ. பல்கலைக்கழக விவகாரம் - விசாரணை குழு அமைப்பு டெல்லி
    மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா: பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் உண்ணாவிரதப் போராட்டம் இந்தியா
    தமிழ் பழமொழி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்த நிதியமைச்சர் டெல்லி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023