NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அதானி-ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கையை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அதானி-ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கையை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
    இந்த பொதுநல மனு, பிப்ரவரி 10ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது

    அதானி-ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கையை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 09, 2023
    06:25 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கையை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் ஒரு குழுவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

    இந்த மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞர் விஷால் திவாரி, இன்று(பிப் 9) தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன் இந்த அவசரப் பட்டியல் மனுவைக் குறிப்பிட்டார்.

    நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அந்த அமர்வில், இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட தனி மனு பிப்ரவரி 10ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது என்பதை திவாரி தெரிவித்தார்.

    அதன்பின், தனி மனுவுடன் தனது மனுவையும் வெள்ளிக்கிழமை விசாரிக்க வேண்டும் என்று அவர் நீதிபதிகளிடம் வலியுறுத்தினார்.

    அதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

    இந்தியா

    கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை மேற்பார்வையிட ஒரு சிறப்புக் குழு

    திவாரி தனது பொது நல மனுவில்(PIL), பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ரூ.500 கோடிக்கு மேலான கடன்களின் சாங்க்ஷன் கொள்கையை மேற்பார்வையிட ஒரு சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்று கோரி இருக்கிறார்.

    அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அண்மையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

    இந்த அறிக்கையில், அதிக கடன் வைத்திருக்கும் நிறுவனம் என்றும் வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க "வரி ஏமாற்று புகலிடங்களை" பயன்படுத்தும் நிறுவனம் என்றும் அதானி குழுமத்தை விமர்சித்திருந்தது.

    மேலும், பங்குகளை கையாளுதல், கணக்கியல் மோசடி போன்ற குற்றச்சாட்டுகளும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனால், அதானி குழும பங்குகள் வெகுவாக கடந்த வாரத்தில் இருந்து சரிவடைய தொடங்கியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    இந்தியா

    ராணா அய்யூப் வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    இது அதானியின் பிரச்சனை, இந்தியாவுக்கு இல்லை - மார்க் மோபியஸ் நம்பிக்கை! தொழில்நுட்பம்
    துருக்கி நிலநடுக்கம்: உதவி செய்ய இந்தியா எடுத்த நடவடிக்கைகள் உலகம்
    தமிழ்நாடு, நெல்லையப்பர் கோயிலில் பர்தா அணிந்த பெண் வருகை - இந்து முன்னணி வலியுறுத்தல் தமிழ்நாடு

    உச்ச நீதிமன்றம்

    பிபிசி ஆவணப்பட தடை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் நரேந்திர மோடி
    ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு தேர்தல் ஆணையம்
    டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு டெல்லி
    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகும் விக்டோரியா கவுரி-நியமனத்திற்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025