NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அதானி-ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கையை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
    இந்தியா

    அதானி-ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கையை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

    அதானி-ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கையை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
    எழுதியவர் Sindhuja SM
    Feb 09, 2023, 06:25 pm 1 நிமிட வாசிப்பு
    அதானி-ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கையை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
    இந்த பொதுநல மனு, பிப்ரவரி 10ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது

    ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கையை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் ஒரு குழுவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்த மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞர் விஷால் திவாரி, இன்று(பிப் 9) தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன் இந்த அவசரப் பட்டியல் மனுவைக் குறிப்பிட்டார். நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அந்த அமர்வில், இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட தனி மனு பிப்ரவரி 10ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது என்பதை திவாரி தெரிவித்தார். அதன்பின், தனி மனுவுடன் தனது மனுவையும் வெள்ளிக்கிழமை விசாரிக்க வேண்டும் என்று அவர் நீதிபதிகளிடம் வலியுறுத்தினார். அதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

    கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை மேற்பார்வையிட ஒரு சிறப்புக் குழு

    திவாரி தனது பொது நல மனுவில்(PIL), பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ரூ.500 கோடிக்கு மேலான கடன்களின் சாங்க்ஷன் கொள்கையை மேற்பார்வையிட ஒரு சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்று கோரி இருக்கிறார். அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அண்மையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையில், அதிக கடன் வைத்திருக்கும் நிறுவனம் என்றும் வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க "வரி ஏமாற்று புகலிடங்களை" பயன்படுத்தும் நிறுவனம் என்றும் அதானி குழுமத்தை விமர்சித்திருந்தது. மேலும், பங்குகளை கையாளுதல், கணக்கியல் மோசடி போன்ற குற்றச்சாட்டுகளும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், அதானி குழும பங்குகள் வெகுவாக கடந்த வாரத்தில் இருந்து சரிவடைய தொடங்கியது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா
    உச்ச நீதிமன்றம்

    இந்தியா

    இந்தியாவின் UPI சேவையால் அசந்து போன ஜப்பான் அமைச்சர் ஜப்பான்
    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு மணிப்பூர்
    மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் வீசினால் நாங்கள் தடுக்க மாட்டோம்: காவல்துறை  டெல்லி
    மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உதவிய LeT தலைவர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார்  மும்பை

    உச்ச நீதிமன்றம்

    புதிய நாடாளுமன்ற வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்  இந்தியா
    ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் ஆம் ஆத்மி
    உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற கே.வி.விஸ்வநாதன் உயர்ந்த கதை  டெல்லி
    ஜல்லிக்கட்டு வெற்றி விழாவினை கொண்டாடுவோம் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஜல்லிக்கட்டு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023