NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு ஆன்லைன் மூலம் உரிமம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு ஆன்லைன் மூலம் உரிமம் 
    சென்னையில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு ஆன்லைன் மூலம் உரிமம்

    சென்னையில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு ஆன்லைன் மூலம் உரிமம் 

    எழுதியவர் Nivetha P
    Jun 09, 2023
    07:09 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலம், சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கு கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் முன்னதாக அறிவுறுத்தியிருந்தார்.

    அதற்கேற்ப நேற்று(ஜூன்.,8) சென்னை மேயர் பிரியா ஆன்லைன் மூலம் செல்ல பிராணிகளுக்கு உரிமம் வழங்கும் திட்டத்தினை ரிப்பன் கட்டிடத்தில் துவக்கி வைத்து உரிமங்களையும் வழங்கினார்.

    இந்த நிகழ்வில், துணை மேயர், மாநகராட்சி ஆணையர் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய மேயர் பிரியா, "செல்ல பிராணிகள் மற்றும் அதன் உரிமையாளர்களின் நலன் கருதியே இந்த ஆன்லைன் மூலம் உரிமம் பெறும் வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

    மேயர் பேச்சு 

    செல்லப்பிராணிகள் வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு நல்ல வாய்ப்பு 

    தொடர்ந்து பேசிய அவர், "இந்த உரிமம் பெறுவதன் மூலம் அனைத்து செல்ல பிராணிகளுக்கும் ஆண்டுதோறும் வெறிநாய்கடி தடுப்பூசி போடுவதனை உறுதி செய்ய முடியும்.

    அதே போல், நோய்வாய்ப்பட்ட மற்றும் வயதான செல்லப்பிராணிகளை தெருவில் விடும் அவலமும் தடுக்கப்படும்" என்று கூறினார்.

    மேலும், மண்டல வாரியாக நாய்கள், பூனைகள் ஆகியவற்றின் எண்ணிக்கையினை கணக்கீடு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பதனையும் அவர் தெரிவித்துள்ளார்.

    அதே போல் சென்னை மாநகராட்சி மக்கள் இந்த வாய்ப்பினை உபயோகப்படுத்தி கொண்டு மாநகராட்சி இணையதளம் மூலம் ரூ.50 கட்டணம் செலுத்தி தங்கள் செல்லப்பிராணிகளுக்கான உரிமத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு மேயர் பிரியா கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025
    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025

    சென்னை

    லைகா நிறுவனங்களில் அமலாக்கப்பிரிவினர் சோதனை லைகா
    சென்னை ஐஐடியில் திறக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த AI ஆராய்ச்சி மையம்! செயற்கை நுண்ணறிவு
    தி.நகரில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான பிரமாண்ட நடைமேடை இந்தியா
    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு  தமிழ்நாடு

    தமிழ்நாடு

    இன்று முதல் விவசாயிகளுக்கு பயோமெட்ரிக் முறையில் நெல்கொள்முதல்!  இந்தியா
    அவசர சட்ட விவகாரம்: மு.க.ஸ்டாலினை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா
    11 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  புதுச்சேரி
    சேலம் ஈரடுக்கு பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக ரூ.2.30 கோடி செலவில் எஸ்கலேட்டர்  சேலம்

    காவல்துறை

    கள்ளக்காதல் குறித்து கேள்விக்கேட்ட மனைவியை 9 துண்டுகளாக வெட்டிக்கொன்ற கணவர் - ஜார்கண்ட்டில் பயங்கரம்  இந்தியா
    குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல்  குஜராத்
    திகார் சிறையில் நடந்த கொலை: தமிழக போலீசார் 7 பேர் சஸ்பெண்ட் இந்தியா
    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாதுகாப்பினை மீறி பக்தர் எடுத்த வீடியோ பதிவு  திருப்பதி

    காவல்துறை

    பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி மீது பாய்ந்த கிரிமினல் வழக்குகள் பா ரஞ்சித்
    சென்னையில் போதை பொருள் விற்பனை செய்த 2 பேர் கைது  சென்னை
    உதவி இயக்குனர் மீது கிரிமினல் வழக்கு; கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பா.ரஞ்சித் பா ரஞ்சித்
    கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா பறிமுதல்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025