NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தனது பதவியில் இருந்து விலகிய ஒன்பிளஸ் இந்தியாவின் சிஇஓ.. ஏன்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    தனது பதவியில் இருந்து விலகிய ஒன்பிளஸ் இந்தியாவின் சிஇஓ.. ஏன்?
    பதவியில் இருந்த ஒன்பிளஸ் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி நவ்நீத் நாக்ரா

    தனது பதவியில் இருந்து விலகிய ஒன்பிளஸ் இந்தியாவின் சிஇஓ.. ஏன்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 01, 2023
    03:42 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த நவ்நீத் நாக்ரா, தன்னுடைய பதவியில் இருந்து விலகியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

    2020-ம் ஆண்டு பிப்ரவரியில் ஒன்பிளஸ் இந்தியாவின் துணைத் தலைவராகவும், தலைமை மூலோபாய அதிகாரியாகவும் (Chief Strategy Officer) பணியில் இணைந்தார்.

    அதன் பிறகு, 2021-ம் ஆண்டு, அவரை இந்தியாவில் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும், ஒன்பிளஸ் இந்தியா பகுதியின் தலைமையாகவும் அவரை நியமித்தது ஒன்பிளஸ் நிறுவனம்.

    ஒன்பிளஸ் நிறுவனத்துடன் இணைந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் பணியாற்றிய பிறகு தன்னுடைய தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகுவாதக தற்போது அறிவித்திருக்கிறார் நவ்நீத் நாக்ரா.

    ஒன்பிளஸ்

    நன்றி தெரிவித்த ஒன்பிளஸ் இந்தியா!

    தன்னுடைய குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடவும், தன்னுடைய லட்சியத்தை நோக்கி பயணிக்கவும் தன்னுடைய பதவியில் இருந்து விலகுவதாக, கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார் நவ்நீத்.

    நவ்நீத் நாக்ரா பதவியில் இருந்து விலகியது குறித்து ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ஒன்பிளஸ் இந்தியாவில் அவருடைய பங்களிப்புக்கு நன்றி தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

    கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் தங்களுடைய வணிகத்தை மேம்படுத்துவதில் நவ்நீத் நக்ரா முக்கியப் பங்காற்றியிருக்கிறார், என தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது ஒன்பிளஸ் இந்தியா.

    மேலும், இந்தியாவில் தங்களுடைய சேவையை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்போம், என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.

    ஆனால், ஒன்பிளஸ் இந்தியாவின் அடுத்த சிஇஓ யார் என்பது குறித்த தகவல்களை அந்நிறுவனம் பகிரவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    இந்தியா

    இந்தியாவில் ஸ்டார்ட்-அப்பை பதிவு செய்வதற்கான வழிமுறை என்ன? ஸ்டார்ட்அப்
    தமிழகத்தில் முதல் முறையாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்த மத்திய அரசு ஒப்புதல்! தமிழகம்
    மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA உயர்நீதிமன்றம்
    காயம் காரணமாக FBK போட்டியிலிருந்து விலகினார் நீரஜ் சோப்ரா! இந்திய அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025