NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை ஐஐடி'யில் மேலுமொரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை
    சென்னை ஐஐடி'யில் மேலுமொரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    சென்னை ஐஐடி'யில் மேலுமொரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை

    எழுதியவர் Nivetha P
    Apr 21, 2023
    07:52 pm
    சென்னை ஐஐடி'யில் மேலுமொரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை
    சென்னை ஐஐடி'யில் மேலுமொரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை

    சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி கல்வி மையத்தில் 2ம் ஆண்டு பிடெக் படிப்பினை படித்து வந்தவர் கேதார் சுரேஷ். இவர் விடுதியில் தங்கி தனது படிப்பினை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று(ஏப்ரல்.,21) அவர் அறையில் தூக்குப்போட்டு கொண்டு இறந்துள்ளார். இந்த தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கோட்டூர்புரம் காவல்துறையினர் விடுதி அறைக்கு சென்று மாணவரின் உடலினை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவரின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது குறித்து தற்போது கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையினை துவங்கியுள்ளார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    2/2

    சென்னை ஐஐடி'யில் தொடரும் தற்கொலைகள் 

    இதே போல் அண்மையில் சென்னை ஐஐடி'யில் படித்து வந்த மேற்கு வங்காள மாநிலத்தினை சேர்ந்த பி.எச்.டி. மாணவர் சச்சின் குமார் ஜெயின்(வயது 32) என்பவர் வேளச்சேரியில் உள்ள தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. மேலும் அதற்கு முன்னர் இதே ஐஐடி'யில் பயின்ற மாணவர்கள் பிப்ரவரி மாதம் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஸ்டீபன் சன்னி என்பவரும், மார்ச் மாதம் ஆந்திராவை சேர்ந்த பி.டெக் மாணவர் வைபு புஷ்பக ஸ்ரீ சாய்(வயது 20) என்பவரும் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சென்னை
    காவல்துறை
    காவல்துறை

    சென்னை

    சென்னை ஆருத்ரா விவகாரம் - மேலும் 2 பேர் கைது  தமிழ்நாடு
    '40 வயதில் யூத் ஐகான் விருது': மத்திய அமைச்சர் கையால் விருது பெற்ற தனுஷ் தனுஷ்
    நகர வாரியாக பெட்ரோல் மற்றும் டீசலின் இன்றைய விலை என்ன?  இந்தியா
    சென்னையில் வி.பி.சிங்கிற்கு சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு  மு.க ஸ்டாலின்

    காவல்துறை

    கோவை கார் குண்டுவெடிப்பு - குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்த என்.ஐ.ஏ. கோவை
    நாமக்கல் மாவட்டம் விஷ ஊசிப்போட்டு 300 பேர் கொலை?-அரசு மருத்துவமனையில் விசாரணை  அரசு மருத்துவமனை
    காதலி தூக்குபோட்டு உயிரிழந்ததை வீடியோ காலில் பார்த்து ரசித்த காதலன்  தமிழ்நாடு
    இந்தியாவிலேயே சென்னை மாநகரம் தான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் - மு.க.ஸ்டாலின்  இந்தியா

    காவல்துறை

    சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிட விவகாரம் - விளக்கமளிக்க மாநகராட்சி நோட்டீஸ்  சென்னை
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது பதிவான வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் திருநெல்வேலி
    திருப்பூரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.81 லட்சம் மோசடி - வங்கி மேலாளர் உள்பட 3 பேர் கைது  திருப்பூர்
    சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்புப்பணியில் தீயணைப்புத்துறை சென்னை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023