NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஏழை பழங்குடியின இளைஞரின் மருத்துவ கனவு - கடந்து வந்த பாதை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஏழை பழங்குடியின இளைஞரின் மருத்துவ கனவு - கடந்து வந்த பாதை 
    ஏழை பழங்குடியின இளைஞரின் மருத்துவ கனவு - கடந்து வந்த பாதை

    ஏழை பழங்குடியின இளைஞரின் மருத்துவ கனவு - கடந்து வந்த பாதை 

    எழுதியவர் Nivetha P
    Aug 22, 2023
    05:44 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் மாவட்டத்தில் வசித்து வருபவர் கிரிஷ்ணச்சந்திர அடகா(33).

    விவசாய குடும்பத்தில் பிறந்த பழங்குடியினத்தினை சேர்ந்த இவரின் தந்தைக்கு வெறும் ஒரு ஏக்கர் நிலம் தான் உள்ளதாம்.

    அடகா'வுடன் சேர்த்து மொத்தம் 5 பிள்ளைகள் கொண்ட இந்த ஏழை குடும்பம் மிக வறுமையில் இருந்துள்ளது.

    இதற்கிடையே தனது 2006ம் ஆண்டில் 10ம் வகுப்பு தேர்வினை எழுதிய அடகா 58 சதவிகிதம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

    வாழ்க்கை பயணம் 

    தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் நிதியுதவி

    ஆனால் அதற்கு மேல் அடகாவின் பெற்றோரால் அவரை படிக்கவைக்க முடியவில்லை என்பதால் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் நிதி உதவி பெற்று இவர் தனது 12ம் வகுப்பினை படித்து முடித்துள்ளார்.

    இந்நிலையில், தனது வாழ்க்கை பயணம் குறித்து அடகா கூறுகையில், "என்னுடன் பிறந்த 3 சகோதரர்கள் தச்சர்களாக பணிபுரிந்தனர். மற்றொரு சகோதரர் மோட்டார் மெக்கானிக் ஆகிவிட்டார்" என்று கூறியுள்ளார்.

    படிப்பு 

    பாதியில் படிப்பினை கைவிட்ட அடகா 

    தொடர்ந்து அவர் பேசுகையில், "பிஎஸ்சி வேதியியல் பாடப்பிரிவில் படித்து கொண்டிருந்த நான், 2008ல் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டு விவசாயம் செய்ய துவங்கினேன். எவ்வளவு கடினமாக உழைத்தாலும் ஒரு நாளைக்கு ரூ.100க்கு மேல் சம்பாதிக்க முடியவில்லை" என்று வருத்தமாக கூறினார்.

    பின்னர் 2012ல் கேரளா சென்ற அவர், புலம்பெயர்ந்த தொழிலாளராக பணியாற்றியுள்ளார்.

    மேலும் பெரும்பாவூரில் செங்கல்சூளையிலும் வேலை செய்துள்ளார்.

    எனினும் சம்பாத்தியம் போதவில்லை என்பதால் கோட்டயத்தில் தீப்பெட்டி தொழிற்சாலையில் சேர்ந்து சிறிது காலம் பணிபுரிந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

    நீட் தேர்வு 

    நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அடகா 

    கடந்த 2014ம் ஆண்டு துப்பாடிக்கு திரும்பிய அவர் மீண்டும் விவசாய தொழிலினை கையில் எடுத்துள்ளார்.

    அதன்பின்னர் தொடர்ந்து விவசாய தொழினை செய்துவந்த இவர், கடந்த 2021ம் ஆண்டில் ஓர் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்துள்ளார்.

    மேலும் என்சிஇஆர்டி பாட புத்தகங்களையும் தீவிரமாக படித்த இவர், 2022ம் ஆண்டில் நீட் தேர்வு எழுதியுள்ளார்.

    நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையிலும் பண தட்டுப்பாடு காரணமாக அவர் அந்தாண்டு நடந்த கவுன்சிலிங் கூட்டத்திற்கு கூட செல்லவில்லையாம்.

    மருத்துவ கல்லூரி 

    அடகா மருத்துவ கனவு நிறைவேற உதவி செய்வதாக உறுதியளித்துள்ள குடும்பத்தினர் 

    அதனை தொடர்ந்து அவர் மீண்டும் இந்தாண்டு நடந்த நீட் தேர்வில் பங்கேற்று மாநில அளவில் 3,902ம் இடத்தினை பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

    இம்முறையும் தனக்கான வாய்ப்பினை தவறவிட கூடாது என்று எண்ணிய இவர் ஒரு நபரிடம் கடனாக ரூ.37,950 பெற்று ஷாகித் ரெண்டோ மாஜி என்னும் மருத்துவ கல்லூரியில் கட்டணத்தினை செலுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.

    அடகாவுக்கு கடன் கொடுத்த நபர் அந்த தொகைக்கு எவ்வித வட்டியும் வேண்டாம் என்று கூறியுள்ளார்.

    அதேபோல் அவரது குடும்பத்தினரும் அவரது மருத்துவ கனவு நிறைவேற உதவி செய்ய தயார் என்று கூறியுள்ளனர் என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒடிசா
    நிதித்துறை
    கேரளா
    நீட் தேர்வு

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    ஒடிசா

    ஒடிசா: விபத்து நடந்த தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த காதல் கவிதைகள் இந்தியா
    ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டது  இந்தியா
    ஒடிசா ரயில் விபத்து: 48 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட நபர் இந்தியா
    ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கரம் நீட்டிய பேடிஎம் நிறுவனர்! இந்தியா

    நிதித்துறை

    டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள்.. எச்சரிக்கும் விவிஃபை நிறுவன CEO!  கடன்

    கேரளா

    கேரள படகு விபத்து: 7 குழந்தைகள் உட்பட 22 பேர் பலி  இந்தியா
    திரைப்படமாக தயாராகும் 'அரிசி கொம்பன்' ஆண் யானையின் கதை - பர்ஸ்ட் லுக் போஸ்டர்  திரைப்பட துவக்கம்
    வெளிநாடுகளுக்கு சென்ற குடும்பங்கள் - ஆளில்லாமல் காலியாக கிடக்கும் விலையுர்ந்த பங்களாக்கள் இந்தியா
    ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியது - உயிர் தப்பித்த இளைஞர்!  இந்தியா

    நீட் தேர்வு

    நீட் நுழைவுத் தேர்வுக்கு தேதிகள் அறிவிப்பு! இந்தியா
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023
    நீட் தேர்வு விலக்கு குறித்து இன்னும் 2 தினங்களில் விளக்கம் - மா.சுப்ரமணியம் சென்னை
    அதிமுக ஆட்சிக்கால நீட் தொடர்பான 'ரிட்' மனு வாபஸ் - தமிழக அரசு அதிமுக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025