NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பில்கிஸ் பானோ கூட்டு பலாத்கார வழக்கின் 11 குற்றவாளிகள் 2 வாரங்களில் சரணடைய உத்தரவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பில்கிஸ் பானோ கூட்டு பலாத்கார வழக்கின் 11 குற்றவாளிகள் 2 வாரங்களில் சரணடைய உத்தரவு 

    பில்கிஸ் பானோ கூட்டு பலாத்கார வழக்கின் 11 குற்றவாளிகள் 2 வாரங்களில் சரணடைய உத்தரவு 

    எழுதியவர் Sindhuja SM
    Jan 08, 2024
    02:48 pm

    செய்தி முன்னோட்டம்

    2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானோ என்பவரை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் 7 பேர் கொலை செய்யப்பட்டனர்.

    2002 குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பிறகு வெடித்த கலவரத்தில் இருந்து தப்பிச் செல்லும் போது பில்கிஸ் பானோ பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது அவர் 21 வயது கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அந்த கலவரத்தின் போது கொல்லப்பட்ட ஏழு குடும்ப உறுப்பினர்களில் அவரது மூன்று வயது மகளும் ஒருவர் ஆவார்.

    இந்த வழக்கின் 11 குற்றாவளிகளுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், கடந்த 2019இல் ராதிஷ்யம் பகவான்தாஸ் ஷா என்ற குற்றவாளி தனக்கு முன்கூட்டியே விடுதலை அளிக்க வேண்டும் என்று குஜராத் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

    வ்க்ஜ்ஜன்

    பலாத்கார குற்றவாளிகளை விடுவித்த குஜராத் அரசு 

    அதை குஜராத் நீதிமன்றம் நிராகரித்தவுடன், அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

    அப்போது அவரது ரிட் மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இது குறித்து குஜராத் அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    அதனையடுத்து, வழக்கற்றுப் போன சட்டத்தின் அடிப்படையில் குற்றவாளிகளை 2022 சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு விடுதலை செய்தது.

    ஆளும் பாஜகவுடன் தொடர்புடையவர்கள் அடங்கிய குழுவிடம் ஆலோசனை நடத்திய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    அப்போது, அந்த குற்றவாளிகளை "ஒழுக்கம் மிக்க பிராமணர்கள்" என்று கூறிய அந்த பாஜக குழு, அவர்களுக்கு பெரும் வரவேற்பை அளித்தது.

    குற்றவாளிகளுக்கு வீர வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், பாஜக எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களுடன் அவர்கள் பல முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    ட்ஜ்வ்ன் லம்

     குற்றவாளிகள் 2 வாரங்களுக்குள் சரணடைய உத்தரவு 

    இந்நிலையில், குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக பில்கிஸ் பானோ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், குற்றவாளிகளை விடுவிக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளது.

    மேலும், குற்றவாளிகளில் ஒருவர் மோசடி வழிகளில் உண்மைக்கு புறம்பான பொய்யான ஆதரங்களை சமர்ப்பித்திருக்கிறார் என்று இன்று தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 2022 மே மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்தனர்.

    "குற்றவாளிகளின் மனுவை பரிசீலிக்க குஜராத் அரசுக்கு இந்த நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இது ஒரு ஏமாற்று வேலை..." என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    மேலும், விடுவிக்கப்பட்ட குற்றவாளிகள் 2 வாரங்களுக்குள் சரணடைய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    குஜராத்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    உச்ச நீதிமன்றம்

    ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு: மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க உத்தரவு  தமிழக அரசு
    நீதிபதிகளுக்கான நெறிமுறைக் குறியீட்டு விதிகளை வெளியிட்டது அமெரிக்க உச்ச நீதிமன்றம்  அமெரிக்கா
    சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் மரணம்: 3 கோடி மக்களின் 25,000 கோடி ரூபாயின் நிலைமை என்ன? இந்தியா
    நிமிஷா பிரியாவின் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை ஏமன் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது கொலை

    குஜராத்

    'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும் இந்தியா
    தீவிரமடைந்த 'பிபர்ஜாய்' புயல்: குஜராத், மும்பைக்கு கடும் எச்சரிக்கை  இந்தியா
    பிபர்ஜாய் புயல்: குஜராத்தில் 8,000 பேர் வெளியேற்றப்பட்டனர் இந்தியா
    பிபர்ஜாய் புயலால் பாதிப்பு: வெள்ள எச்சரிக்கைக்கு மத்தியில் மின்சார தடை, ரயில்கள் ரத்து  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025