தமிழக இளைஞர்களே அலெர்ட்: ரூ.5,000 ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்புப் பயிற்சி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசின் தாட்கோ (TAHDCO) மற்றும் அப்பல்லோ மெட்ஸ்கில்ஸ் (Apollo Medskills) நிறுவனம் இணைந்து, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நர்சிங் பட்டதாரிகளுக்கு மருத்துவமனை நிர்வாகப் பயிற்சியை வழங்க உள்ளன. இது குறித்த விரிவான தகவல்களைச் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ளார்.
பயிற்சி
பயிற்சியின் சிறப்பம்சங்கள் மற்றும் ஊக்கத்தொகை
இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். பயிற்சியானது இரண்டு நிலைகளில் நடைபெறும். அதன்படி முதல் 2 வாரங்கள் இணைய வழி கற்றல் முறையில் (Online Learning) மேற்கொள்ளப்படும். அடுத்த 4 வாரங்கள் அப்பல்லோ மருத்துவமனைகள் அல்லது அதன் தொடர்புடைய மருத்துவமனைகளில் நேரடி வேலைவாய்ப்புப் பயிற்சி (OJT) வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு அப்பல்லோ மற்றும் அதன் முன்னணி மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.
விண்ணப்பம்
தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை
கல்வித் தகுதி: 2022, 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் பி.எஸ்சி (B.Sc Nursing) அல்லது எம்.எஸ்சி (M.Sc Nursing) முடித்தவர்கள் அல்லது தற்போது கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருபவர்கள். வயது வரம்பு: 20 முதல் 25 வயது வரை. தேர்வு முறை: அப்பல்லோ மெட்ஸ்கில்ஸ் நடத்தும் இணைய வழி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். விண்ணப்பிக்கும் இணையதளம்: விருப்பமுள்ளவர்கள் http://www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இந்தப் பயிற்சிக்கான முழுச் செலவையும் தாட்கோ நிறுவனமே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள நர்சிங் பட்டதாரிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பைப் பெறலாம்.