NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "கவலை தேவையில்லை": கேரளாவில் பரவி வரும் JN.1 வகை தொற்று குறித்து சுகாதார அமைச்சர் பேச்சு
    அடுத்த செய்திக் கட்டுரை

    "கவலை தேவையில்லை": கேரளாவில் பரவி வரும் JN.1 வகை தொற்று குறித்து சுகாதார அமைச்சர் பேச்சு

    எழுதியவர் Srinath r
    Dec 17, 2023
    06:35 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளாவில் தற்போது கண்டறியப்பட்டுள்ள வேகமாக பறக்கக்கூடிய JN.1 வகை கொரோனா குறித்து கவலைப்பட தேவையில்லை என மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

    இந்தியா SARS-CoV-2 ஜீனோமிக்ஸ் கூட்டமைப்பு (INSACOG), தனது வழக்கமான கண்காணிப்பின் போது JN.1 வகை கொரோனா தொற்றை கண்டறிந்துள்ளதாக நேற்று அறிவித்தது.

    இது குறித்து பத்திரிக்கையாளர்கள் இடம் பேசிய அமைச்சர் வீணா ஜார்ஜ், இந்த வகை கொரோனா தொற்று சில மாதங்களுக்கு முன்னர், சிங்கப்பூர் விமான நிலையத்தில் இந்திய பயணிகளிடம் கண்டறியப்பட்டதாக தெரிவித்தார்.

    இருப்பினும் மக்கள் எச்சரிக்கையுடனும், இணை நோய் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

    2nd card

    கொரோனாவிலிருந்து மீண்ட 79 வயது பெண்

    "எந்த கவலையும் தேவையில்லை. இது ஒரு துணை வகை. இது இங்கே கண்டுபிடிக்கப்படுவதற்கு மாதங்களுக்கு முன்பு, சிங்கப்பூர் விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்ட ஒரு சில இந்தியர்களிடம் இந்த வகை தொற்று கண்டறியப்பட்டது.

    மரபணு வரிசைமுறை மூலம் கேரளா இந்த வகையை அடையாளம் கண்டுள்ளது. கவலைப்படத் தேவையில்லை. நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது," என அவர் கூறினார்.

    இந்த வகை தொற்று இந்தியாவின் வேறு சில பகுதிகளிலும் கண்டறியப்பட்டதை சுட்டிக்காட்டிய அமைச்சர், மாநிலத்தில் வலுவான சுகாதார கட்டமைப்பு இருப்பதாக தெரிவித்தார்.

    இம்மாதம் 8ம் தேதி திருவனந்தபுரத்தில் 79 வயது பெண்ணிடம் இந்த வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

    தற்போது கொரோனாவிலிருந்து மீண்டுள்ளவர், இன்புளுயன்சா போன்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    புதிய வகை கொரோனா குறித்து கவலைப்பட தேவையில்லை

    Kerala Health Minister Veena George says, "No need of any worry. That is a sub-variant (COVID-19 sub-strain JN.1). Now it is detected. Two or three months back it was detected in Indians when they were tested at Singapore airport. It is existing in other parts of India. Kerala… pic.twitter.com/u7iiQoxaBJ

    — ANI (@ANI) December 17, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொரோனா
    கோவிட்
    கோவிட் 19
    கேரளா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    கொரோனா

    12 நாடுகளில் புதிய வகை கொரோனா பரவல்: JN.1 கொரோனா குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை இந்தியா
    சென்னை ஐஐடி மாணவர்களின் குறைதீர்ப்பாளராக ஜி.திலகவதி நியமனம்  ஐஐடி
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் இந்தியா
    காதி கிராமோதயா சங்கத்திற்கு ரூ.95 கோடி நிலுவை வைத்துள்ள மாநில அரசு இந்தியா

    கோவிட்

     இந்தியாவில் ஒரே நாளில் 405 கொரோனா பாதிப்பு: 4 பேர் உயிரிழப்பு இந்தியா
    அடுத்த தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்: WHO தலைவர் உலகம்
    இந்தியாவில் ஒரே நாளில் 552 கொரோனா பாதிப்பு: 6 பேர் உயிரிழப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 535 கொரோனா பாதிப்பு: 5 பேர் உயிரிழப்பு இந்தியா

    கோவிட் 19

    சீனாவின் புதிய கொரோனா அலை: வாரந்தோறும் 65 மில்லியன் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு சீனா
    இந்தியாவில் ஒரே நாளில் 490 கொரோனா பாதிப்பு: 2 பேர் உயிரிழப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 310 கொரோனா பாதிப்பு: 2 பேர் உயிரிழப்பு இந்தியா
    சீனாவில் அதிகரிக்கும் கொரோனா: இந்தியா கவலைப்படத் தேவையில்லை  இந்தியா

    கேரளா

    கோவை மதுக்கரையில் ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் கோவை
    கேரளா குண்டு வெடிப்பு சம்பவம் - குற்றவாளியை அடையாளம் காண நடத்தப்பட்ட அணிவகுப்பு குண்டுவெடிப்பு
    தவறான நோக்கத்துடன் தகவல் தேடுபவர்களை கண்டறிய கூகுள், யூடியூப் நிறுவனங்களின் உதவியை நாடிய சைபர் கிரைம் கூகுள்
    'ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்': உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025