NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: பிரதமர் மோடி காட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: பிரதமர் மோடி காட்டம்
    தெலுங்கானா குடிமக்களின் கனவுகளை நிறைவேற்ற தனது அரசு உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்

    தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: பிரதமர் மோடி காட்டம்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 08, 2023
    02:07 pm

    செய்தி முன்னோட்டம்

    தெலுங்கானாவின் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி(BRS) கட்சி மற்றும் அதன் தலைவர் கே.சந்திரசேகர் ராவ் ஆகியோர், மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களைத் தடுப்பதாகவும், 'பரிவர்வாத்'(குடும்ப ஆட்சி) மற்றும் ஊழலில் ஈடுபடுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப்-8) கடுமையாக சாடினார்.

    ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தெலுங்கானா மக்களுக்கு பலன் அளிக்கும் பல்வேறு திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை செயல்படுத்துவதற்கு மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

    "மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைக்காதது வேதனை அளிக்கிறது. இது தெலுங்கானா மக்களின் கனவுகளை பாதித்துள்ளது." என்று பிரதமர் கூறி இருக்கிறார்.

    தெலுங்கானா மக்களுக்காகத் திட்டமிடப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகளில் எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என்று மாநில அரசிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

    இந்தியா

    செகந்திராபாத்-திருப்பதி வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

    மேலும், "குடும்ப ஆட்சியையும் ஊழலும் வேறு வேறு அல்ல. குடும்ப ஆட்சி இருக்கும் இடத்தில் ஊழல் வளரத் தொடங்குகிறது." என்று தெலுங்கானா அரசாங்கத்தை பிரதமர் சாடி இருக்கிறார்.

    தெலுங்கானா குடிமக்களின் கனவுகளை நிறைவேற்ற தனது அரசு உறுதிபூண்டுள்ளதாகவும், இந்த ஆண்டு பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

    செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து செகந்திராபாத்-திருப்பதி வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்த பிறகு பிரதமர் மோடி இது பற்றி பேசினார்.

    இந்த வந்தே பாரத் ரயில்கள் செகந்திராபாத் மற்றும் திருப்பதிக்கு இடையேயான பயண நேரத்தை கிட்டத்தட்ட மூன்றரை மணிநேரம் குறைக்கும்.

    இதனால் குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்திற்கு செல்லும் யாத்ரீகர்கள் பயனடைவார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நரேந்திர மோடி
    மோடி
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    நரேந்திர மோடி

    ஆசியாவின் மிக பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி மோடி
    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உதவி செய்ய தயார்: பிரதமர் மோடி இந்தியா
    நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அணிந்திருந்த வித்தியாசமான நீல சட்டை இந்தியா
    ஊழல் நிறைந்த காங்கிரஸ் ஆட்சி : ராகுல் காந்தியை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி மோடி

    மோடி

    பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை ஆய்வு: பொங்கி எழும் எதிர்க்கட்சியினர் இந்தியா
    பிபிசி அலுவலகங்களில் இரண்டாம் நாளாக தொடரும் வருமான வரி சோதனை இந்தியா
    பழங்குடியின பெருவிழாவை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி இந்தியா
    பிபிசி வருமான வரியை சரியாக கட்டவில்லை: வருமான வரித்துறை இந்தியா

    இந்தியா

    முன்னாள் காதலியின் திருமணத்திற்கு வெடிகுண்டை பரிசளித்த நபர் கைது காவல்துறை
    இந்தியாவின் 21 மாநில மக்களின் வாழ்வாதாரமாக திகழும் திருப்பூர் திருப்பூர்
    கர்நாடக பாஜகவின் புதிய நட்சத்திர பிரச்சாரகர்: யாரிந்த கிச்சா சுதீப் கர்நாடகா
    தொழில் முனைவோர் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம்: 40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! அரசு திட்டங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025