Page Loader
நிதிஷ் குமாரின் அலுவலகத்திற்கு 'அல்-கொய்தா'விடமிருந்து வெடிகுண்டு மிரட்டல்
அடையாளம் காண முடியாத கணக்கிலிருந்து முதல்வர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் வந்தது

நிதிஷ் குமாரின் அலுவலகத்திற்கு 'அல்-கொய்தா'விடமிருந்து வெடிகுண்டு மிரட்டல்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 04, 2024
12:05 pm

செய்தி முன்னோட்டம்

பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் அலுவலகத்தின் கட்டிடத்தை வெடி வைத்து தகர்க்கப்போவதாக மின்னஞ்சல் வந்ததையடுத்து, பீகார் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, ஜூலை 16 அன்று அல்-கொய்தாவுடன் தொடர்புடையதாகக் கூறி அடையாளம் காண முடியாத கணக்கிலிருந்து முதல்வர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் வந்தது. பீகாரின் சிறப்புக் காவல்துறையினரால் கூட அதைத் தடுக்க முடியாது என்று கூறி, CMO வளாகம் "குண்டு வைத்து தகர்க்கப்படும்" என்று அந்த மின்னஞ்சலில் மிரட்டல் விடுத்துள்ளார்.

வழக்கு

வழக்கு பதிவு செய்யப்பட்டது 

"இது பழைய வழக்கு... விசாரணைக்குப் பிறகு ஆகஸ்ட் 2-ம் தேதி எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளோம்" என்று பாட்னா மூத்த காவல் கண்காணிப்பாளர் ராஜீவ் மிஸ்ரா பிடிஐயிடம் தெரிவித்தார். மர்ம நபர்களுக்கு எதிராக பாரதிய நியாய சன்ஹிதா, 2023 இன் பிரிவுகள் 351 (4) மற்றும் (3) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66 (எஃப்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.