Page Loader
சென்னை மெட்ரோ கட்டம் II மாநில அரசின் திட்டம், நிதி வழங்கியும் பயன்படுத்தவில்லை; நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
சென்னை மெட்ரோ கட்டம் II மாநில அரசின் திட்டம் என நிர்மலா சீதாராமன் விளக்கம்

சென்னை மெட்ரோ கட்டம் II மாநில அரசின் திட்டம், நிதி வழங்கியும் பயன்படுத்தவில்லை; நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 13, 2024
12:23 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத் திட்டம் மாநில அரசின் திட்டம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை (செப்டம்பர் 12) தெரிவித்தார். இந்த திட்டத்தை மாநில அரசு ஒரு மாநிலத் துறை திட்டமாகவே முன்மொழிந்துள்ளது எனக் கூறிய அமைச்சர், மொத்த செலவில் 10 சதவீதத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் கூறினார். திட்டத்திற்கான மொத்த செலவான ரூ.63,246 கோடியில், மாநில அரசு ரூ.22,228 கோடியையும், பொது முதலீட்டு வாரியம் மூலம் ரூ.7,425 கோடி மத்திய அரசிடமிருந்தும் பெறப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு பல மற்றும் இருதரப்பு வெளி மேம்பாட்டு முகமைகள் மூலம் கூடுதலாக ரூ.33,593 கோடி பெறப்பட்டுள்ளது என்றார்.

மத்திய அரசு

மத்திய அரசை குறைகூற முடியாது என நிர்மலா சீதாராமன் திட்டவட்டம் 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டம், 54 கிமீ தூரத்தை கடந்து, மத்திய துறை திட்டமாக தொடங்கப்பட்டது. செலவில் 60% வெளிநாட்டு கடன்களால் ஈடுசெய்யப்பட்டது. 118 கிமீ வரையிலான நீட்டிப்பிற்கான இரண்டாம் கட்டத் திட்டம் மாநில அரசின் கோரிக்கையின்படி 2018 மற்றும் 2023க்கு இடையில் ரூ.21,560 கோடி கடன் பெறப்பட்டதாக அமைச்சர் விளக்கினார். மத்திய அரசு போதிய நிதி வழங்கவில்லை என்று மாநில அரசு குற்றம் சாட்டியதற்கு அதிருப்தி தெரிவித்த அவர், தேவையான கடனை மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளதாகவும், அந்த நிதியில் வெறும் 27 சதவீதத்தை (ரூ.5880 கோடி) மட்டுமே மாநில அரசு பயன்படுத்தியதாகக் கூறினார்.