NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரளாவிற்கு நிபா வைரஸ் எச்சரிக்கை: 2 பேர் 'இயற்கைக்கு மாறான' முறையில் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேரளாவிற்கு நிபா வைரஸ் எச்சரிக்கை: 2 பேர் 'இயற்கைக்கு மாறான' முறையில் பலி 
    நிபா வைரஸ் தொற்று என்பது விலங்குகள் வழியாக மனிதர்களுக்கு பரவும் ஒரு ஜூனோடிக் நோயாகும்.

    கேரளாவிற்கு நிபா வைரஸ் எச்சரிக்கை: 2 பேர் 'இயற்கைக்கு மாறான' முறையில் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 12, 2023
    09:41 am

    செய்தி முன்னோட்டம்

    கேரளா: கோழிக்கோடு மாவட்டத்தில் "இயற்கைக்கு மாறான" முறையில் உயிரிழந்த இருவர் நிபா வைரஸ்(NiV) நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனையடுத்து, நேற்று இரவு கேரள சுகாதாரத் துறை கேரளாவுக்கு சுகாதார எச்சரிக்கை விடுத்தது.

    "இயற்கைக்கு மாறான" முறையில் உயிரிழந்தவர்களுள் ஒருவரின் உறவினர்களும் தீவிர சிகிச்சை பிரிவில்(ICU) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    உயிரிழந்த இருவருமே கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையில், நேற்று, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு உயர்மட்டக் கூட்டத்தை நடத்தி கோழிக்கோடு மாவட்டத்தின் நிலைமையை ஆய்வு செய்தார்.

    தென்னிந்தியாவில் முதல்முறையாக 2018இல் நிபா வைரஸ் தொற்றுநோய் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பதிவாகியது. அதன் பின்னர், 2021இல் மீண்டும் அதே மாவட்டங்களில் நிபா பெருந்தொற்று பதிவாகியது.

    ட்னஸ்வ்ஜ்க

    நிபா வைரஸ் தொற்று குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை

    நிபா வைரஸ் தொற்று என்பது விலங்குகள் வழியாக மனிதர்களுக்கு பரவும் ஒரு ஜூனோடிக் நோயாகும்.

    இந்த நோய் பழ வெளவால்களால் ஏற்படுகிறது.

    மேலும் இது அசுத்தமான உணவுகள் மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்ட மனிதர்கள் மூலமாகவோ பரவுகிறது .

    இந்த வைரஸ் பன்றிகள் போன்ற விலங்குகளுக்கும் கடுமையான நோயை ஏற்படுத்தக்கூடும்.

    சுவாச நோய், அபாயகரமான மூளையழற்சி, இருமல், தொண்டை வலி, தலைச்சுற்றல், தூக்கம், தசை வலி, சோர்வு, தலைவலி, மன குழப்பம் மற்றும் வலிப்புத்தாக்கங்கள் போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாகும்.

    இந்த வைரஸுக்கு உறுதியான சிகிச்சை எதுவும் இல்லை என்றாலும், தரையில் விழுந்த பழங்களை சாப்பிடுவதைத் தவிர்ப்பது, பன்றிகளுக்கு உணவளிப்பதைத் தவிர்ப்பது மற்றும் பழ வெளவால்களை விலக்கி வைப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    இந்தியா

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    கேரளா

    ஜூன் 4ஆம் தேதி கேரளாவில் பருவமழை தொடங்கும்: வானிலை ஆய்வு மையம் இந்தியா
    தென்னிந்திய அளவில் யானைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்  தமிழ்நாடு
    தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான கடையில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை தமிழ்நாடு
    அரிக்கொம்பன் யானை தாக்கி சிகிச்சைப்பெற்ற நபர் உயிரிழப்பு  தமிழ்நாடு

    இந்தியா

    ரஷ்யா-உக்ரைன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டு மத்திய அரசு
    அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியினை நீக்கிய மத்திய அமைச்சகம் பிரதமர் மோடி
    ஜி20 மாநாடு - டெல்லி வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜோ பைடன்
    பிரதமர் மோடி-அதிபர் ஜோ பைடன்: இரு தரப்பு பேச்சு வார்த்தையில் என்ன விவாதிக்கப்பட்டது? ஜி20 மாநாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025