NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / லக்பீர் சிங் சந்துவைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 15 லட்சம் பரிசுத்தொகை
    இந்தியா

    லக்பீர் சிங் சந்துவைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 15 லட்சம் பரிசுத்தொகை

    லக்பீர் சிங் சந்துவைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 15 லட்சம் பரிசுத்தொகை
    எழுதியவர் Sindhuja SM
    Feb 16, 2023, 04:20 pm 1 நிமிட வாசிப்பு
    லக்பீர் சிங் சந்துவைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 15 லட்சம் பரிசுத்தொகை
    கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி NIA இவர் மீது வழக்குப் பதிவு செய்தது.

    பஞ்சாபில் தீவிரவாதம் தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வரும் கனடாவைச் சேர்ந்த லக்பீர் சிங் சந்து (எ) லண்டாவுவை கண்டுபிடிப்பவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு(NIA ) அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் டர்ன் தரான் மாவட்டத்தில் உள்ள ஹரிகே கிராமத்தில் வசித்து வந்த லாண்டா, தற்போது கனடாவின் ஆல்பர்ட்டாவில் உள்ள எட்மண்டனில் பதுங்கி உள்ளார். பஞ்சாபில் பல தீவிரவாத செயல்களிலும், பாகிஸ்தானில் இருந்து ஆயுத கடத்தல்களிலும் ஈடுபட்டிருந்த லாண்டாவைப் பற்றிய தகவல்களை யார் பகிர்ந்து கொண்டாலும் அவர்களுக்கு ரொக்க வெகுமதி வழங்கப்படும் என்றும் ​​தகவல் அளிப்பவரின் அடையாளங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் NIA தெரிவித்துள்ளது.

    காலிஸ்தானி பயங்கரவாத கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கை

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக லாண்டா மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 120பி, 121, 121 ஏ மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1967 (யுஏபிஏ) பிரிவு 17, 18, 18-பி மற்றும் 38 ஆகியவற்றின் கீழ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி NIA வழக்குப் பதிவு செய்தது. ஒரு மாதத்திற்கு முன், குடியரசு தினத்தையொட்டி, பஞ்சாபிலிருந்த லாண்டாவின் கூட்டாளிகள் என்று கூறப்படும் இருவரை டெல்லி போலீசார் கைது செய்தனர். இவர்களது பெயர், ராஜன் பாட்டி மற்றும் கன்வால்ஜீத் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது. காலிஸ்தானி பயங்கரவாத-குண்டர்களுக்கு எதிராக நடந்து வரும் நடவடிக்கைகளில், போலீசார் இவர்களைக் கைது செய்துள்ளனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா
    பஞ்சாப்
    கனடா

    இந்தியா

    இந்தியாவின் UPI சேவையால் அசந்து போன ஜப்பான் அமைச்சர் ஜப்பான்
    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு மணிப்பூர்
    மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் வீசினால் நாங்கள் தடுக்க மாட்டோம்: காவல்துறை  டெல்லி
    மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உதவிய LeT தலைவர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார்  மும்பை

    பஞ்சாப்

    மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் எதற்கு சம்மன் அனுப்பியது இந்தியா
    அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே 3வது முறையாக குண்டுவெடிப்பு இந்தியா
    அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு இந்தியா
    காலமான முன்னாள் பஞ்சாப் முதல்வரின் உடலுக்கு மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி  இந்தியா

    கனடா

    அதிகரித்து வரும் இந்து எதிர்ப்பு: கனடா எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்  உலக செய்திகள்
    கனடாவில் இந்திய எதிர்ப்பு கிராஃபிட்டிகளால் சேதப்படுத்தப்பட்ட இந்து கோவில் உலகம்
    மகாத்மா காந்தி சிலையை சிதைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் உலகம்
    'ஆன்டி இந்தியன்' எழுத்துக்களால் சிதைக்கப்பட்ட இந்து கோவில் உலகம்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023