NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்-3 மாநிலங்கள் உள்பட 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ.அதிரடி சோதனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்-3 மாநிலங்கள் உள்பட 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ.அதிரடி சோதனை
    கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்-3 மாநிலங்கள் உள்பட 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ.அதிரடி சோதனை

    கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்-3 மாநிலங்கள் உள்பட 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ.அதிரடி சோதனை

    எழுதியவர் Nivetha P
    Feb 15, 2023
    11:24 am

    செய்தி முன்னோட்டம்

    கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு, கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதியன்று கார் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று நடந்தது.

    இதில் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினருக்கு சம்பந்தம் உள்ளதாக தெரியவந்த நிலையில் அந்த அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த ஜமேஷா முபின் என்பவர் அந்த சம்பவத்தில் உயிரிழந்தார்.

    இந்த வழக்கு முதலில் தமிழ்நாடு காவல்துறை விசாரணை நடத்திய நிலையில், சிபிசிஐடி'க்கு மாற்றப்பட்ட பின்னர் இறுதியாக என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

    இதனைதொடர்ந்து அந்த இயக்கத்திற்கு சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை செய்யப்பட்டு பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும், விசாரணையில் வெடிமருந்துகள், உபகரணங்களை ஆன்லைன் மூலம் வாங்கி இந்த தற்கொலை தாக்குதல் நடத்தி, மத வழிபாட்டுத்தளங்களை சேதப்படுத்தி பிரச்சனையை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதும் தெரியவந்தது.

    தீவிர தேடல்

    சென்னையில் மண்ணடி, கொடுங்கையூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை

    மேலும் இதில் தொடர்புடைய 11 பேரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தற்போது தீவிர தேடலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அதன்படி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 3 மாநிலங்களில் உள்ள 60க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று(பிப்.,15) சோதனை நடக்கிறது.

    தமிழகத்தில் சென்னையில் மண்ணடி, கொடுங்கையூர் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

    அதே போல் மயிலாடுதுறை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல இடங்களில் தீவிர சோதனை நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    சிவகார்த்திகேயனின் 'பராசக்தி'க்கு இன்னும் 40 நாள் ஷூட்டிங் தான் பாக்கி என இயக்குனர் சுதா கொங்கரா தகவல் சிவகார்த்திகேயன்
    ஜெர்மனி ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல், 18 பேர் காயம் ஜெர்மனி
    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்

    கோவை

    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! மாவட்ட செய்திகள்
    கோவையில் கூலித்தொழிலாளி வீட்டிற்கு ரூ.70 ஆயிரம் கரண்ட் பில் - அதிர்ச்சியடைந்த மின்கட்டண பயனாளர் இந்தியா
    சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம் தமிழ்நாடு
    உலகளவில் நேரம் தவறாத 20 விமான நிலையங்கள் பட்டியலில் 13வது இடத்தில் கோவை விமான நிலையம் விமான சேவைகள்

    தமிழ்நாடு

    தமிழகத்தில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரண தொகை ஏக்கருக்கு ரூ.35,000 கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் மு.க ஸ்டாலின்
    தமிழ்நாடு, நெல்லையப்பர் கோயிலில் பர்தா அணிந்த பெண் வருகை - இந்து முன்னணி வலியுறுத்தல் இந்தியா
    வேங்கைவயல் வழக்கில் முன்னேற்றம் இருக்கிறது: சிபிசிஐடி தகவல் வேங்கை வயல்
    தமிழகத்தில் சங்கராபுரம் கோயில் கோமாதாவிற்கு வளைகாப்பு நடத்திய கிராம மக்கள் மாவட்ட செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025