NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA
    அடுத்த செய்திக் கட்டுரை
    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA
    கேரளா முழுவதும் NIA சோதனை(படம்: இந்து தமிழ்)

    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA

    எழுதியவர் Sindhuja SM
    Dec 29, 2022
    06:12 pm

    செய்தி முன்னோட்டம்

    பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா(PFI) என்ற அமைப்பு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு 5 ஆண்டுகள் தடை செய்யப்பட்டது.

    அண்மையில், இந்த அமைப்பிற்கு சிலர் நிதியுதவி செய்து வருவதாக எழுந்த புகாரின் பேரில் கேரளாவின் பல இடங்களில் NIA சோதனை செய்து வருகிறது.

    சோதனையின் இரண்டாம் நாளான இன்று திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, மலப்புரம், எர்ணாகுளம், ஆலப்புழா, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் சோதனை நடைபெற்று கொண்டிருக்கிறது.

    நாடு முழுவதும் இந்த அமைப்பு பரவி இருந்தாலும், கேரளாவில் தான் இது முழு வீச்சில் செயல்படுவதாக கூறப்படுகிறது.

    சமீபத்தில், இதன் உறுப்பினர்கள் ரகசியமாக செயல்படுவதாகவும் நிதி திரட்டுவதாகவும் NIAவுக்கு ஒரு தகவல் கிடைத்தது.

    இந்த தகவலின் பேரில், கேரளா முழுவதும் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    தடை செய்யப்பட்ட அமைப்பு

    பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா(PFI) தடை:

    பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா(PFI) என்ற அமைப்பு 2006ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

    இந்த அமைப்பிற்கு 22 மாநிலங்களில் கிளைகள் இருந்தன.

    சமீபத்தில், இந்த அமைப்பு, இதனை சார்ந்த அமைப்புகள் மற்றும் இதன் முன்னணிகள், இந்திய நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றை சீர்குலைக்கும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக கண்டறியப்பட்டது.

    இதனையடுத்து, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்திற்கு( UAPA) கீழ் 5 ஆண்டுகள் இந்த அமைப்பை தடை செய்வதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

    இந்த அமைப்பு இன்னும் ரகசியமாக இயங்கி வருகிறதா என்பதைக் கண்டறிய இதன் உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்களின் வீடுகளில் NIA சோதனை செய்து வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மாநிலங்கள்

    சமீபத்திய

    'மாமன்' பட வெற்றிக்காக ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டதை அறிந்ததும் கோபப்பட்ட நடிகர் சூரி சூரி
    கிடுகிடுக்க வைக்கும் அமெரிக்கா-பாகிஸ்தான் நிறுவனங்களின் கிரிப்டோகரன்சி ஒப்பந்தம்; சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்-அசிம் முனீர் தொடர்பு அமெரிக்கா
    NDA கூட்டணியில் ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ். இருவரும் தொடர்கிறார்கள்: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நயினார் நாகேந்திரன்
    துருக்கி மற்றும் அஜர்பைஜானுடன் எந்த வணிக உறவும் கிடையாது; அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு முடிவு வர்த்தகம்

    இந்தியா

    தாஜ்மகாலுக்கு 1 கோடிக்கு மேல் வரி விதித்த மாநகராட்சி! வைரல் செய்தி
    திருச்சியில் இலங்கையை சேர்ந்த 9 பேர் கைது! இலங்கை
    கேரளா அர்ஜெண்டினா வெற்றி கொண்டாட்டத்தில் கலவரம்! கால்பந்து
    மருத்துவ படிப்புகள் தமிழில் இருக்க வேண்டும்-நிர்மலா சீதாராமன் பேச்சு நிர்மலா சீதாராமன்

    மாநிலங்கள்

    தீண்டாமை இன்னுமா கடைபிடிக்கப்படுகிறது? புதுக்கோட்டையில் அதிர்ச்சி! இந்தியா
    தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட 'மக்கள் ஐடி' - தமிழக அரசின் புது திட்டம் தமிழக அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025