NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / FASTag மூலம் ஒரே நாளில் ரூ.200 கோடி வசூலைப் பதிவு செய்தது NHAI
    அடுத்த செய்திக் கட்டுரை
    FASTag மூலம் ஒரே நாளில் ரூ.200 கோடி வசூலைப் பதிவு செய்தது NHAI
    பாஸ்டேக் மூலம் ஒரே நாளில் 200 கோடி ரூபாய் வசூல்

    FASTag மூலம் ஒரே நாளில் ரூ.200 கோடி வசூலைப் பதிவு செய்தது NHAI

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 03, 2023
    03:57 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த மாதம் பாஸ்டேக் (FASTag) மூலம் அதிக அளவிலான வருவாயைப் பதிவு செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI).

    மேலும், கடந்த மாதம் ஏப்ரல் 29-ம் தேதி ஒரே நாளில் பாஸ்டேக் மூலம் 1.16 கோடி பரிவத்தனைகளின் மூலம், ரூ.193.15 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது NHAI.

    பாஸ்டேக் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து அதன் மூலம் ஒரே நாளில் நடைபெற்ற அதிகபட்ச பரிவர்த்தையும், ஒரே நாளில் வசூலிக்கப்பட்ட அதிகபட்ச தொகையும் இது தான்.

    2021, பிப்ரவரி 15-ம் தேதி இந்தியாவில் பாஸ்டேக் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது நாட்டின் 1,228 டோல் பிளாஸாக்களில் பாஸ்டேக் கட்டண முறையைப் பயன்படுத்தும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

    இந்தியா

    பாஸ்டேக் மற்றும் GNSS: 

    பாஸ்டேக் என்பது Radio Frequency Identification முறையில் இயங்கும் ஒரு டிஜிட்டல் டோல் கட்டண முறையாகும்.

    இந்த முறையைப் பயன்படுத்துவதன் மூலம், பயனர்கள் டோல் பிளாஸாக்களில் நீண்ட நேரம் வரிசையில் நிற்கத் தேவையில்லை. வாகனத்தில் ஒட்டப்பட்டிருக்கும் பாஸ்டேக் ஸ்டிக்கர்களை ஸ்கேன் செய்து நமது பாஸ்டேக் கணக்கில் இருந்து டோலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுவிடும்.

    மேலும், சில வணிக நிறுவனங்களில் கார் பார்க்கிங் கட்டணங்களைக் கூட பாஸ்டேகைப் பயன்படுத்தி செலுத்த முடியும்.

    பாஸ்டேகைத் தொடர்ந்து தற்போது GNSS அடிப்படையிலான டோல் கட்டண முறையை அமல்படுத்த திட்டமிட்டு வருகிறது மத்திய அரசு.

    இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் ஸ்கேனர்கள் பொருத்தப்பட்டு நாம் அந்த நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் தூரத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்து வகையில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    இந்தியாவில் ஒரே நாளில் 4,282 கொரோனா பாதிப்பு: 14 பேர் உயிரிழப்பு  கொரோனா
    100 ஆண்டுகள் நிறைவு: சென்னையின் முதல் உழைப்பாளர் தினக் கொண்டாட்டம் சென்னை
    இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போட்டி இல்லாமல் இல்லை: வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியுறவுத்துறை
    விவாகரத்து செய்வதற்கு இனி 6 மாத கட்டாயக் காத்திருப்பு கிடையாது: உச்ச நீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025