NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரதமரின் ஆவணப்படம்: தடைக்கு எதிரான மனுக்களை அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரதமரின் ஆவணப்படம்: தடைக்கு எதிரான மனுக்களை அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
    சமூக ஊடகங்களில் இருந்து ஆவணப்பட இணைப்புகளை அகற்ற ஐடி விதிகளின் கீழ் அவசரகால அதிகாரங்களை மத்திய அரசு ஏன் பயன்படுத்தியது: மனுதாரர்கள்

    பிரதமரின் ஆவணப்படம்: தடைக்கு எதிரான மனுக்களை அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 30, 2023
    06:23 pm

    செய்தி முன்னோட்டம்

    2002 குஜராத் கலவரத்தைப் ஆய்வு செய்யும் "இந்தியா: தி மோடி கொஸ்டின்" என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி பற்றிய சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் இங்கிலாந்தில் வெளியானது.

    இதற்கு தடை விதித்த இந்திய அரசு, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட இதன் இணைப்புகள் அனைத்தையும் நீக்க வைத்ததாக கூறப்படுகிறது.

    மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று(ஜன 30) ஒப்புக்கொண்டது.

    இந்த மனுக்களின் விசாரணை பிப்ரவரி 6ஆம் தேதி நடக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

    மத்திய அரசின் இந்த தடை உத்தரவு "தவறானது" மற்றும் "அரசியலமைப்பிற்கு விரோதமானது" என்பதால் இது உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று ஒரு மனுவில் கூறப்பட்டிருக்கிறது.

    உச்சநீதிமன்றம்

    பிப்ரவரி 6ஆம் தேதி விசாரணைக்கு வரும் மனுக்கள்

    தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, வழக்கறிஞர் எம்.எல்.சர்மா மற்றும் மூத்த வழக்கறிஞர் சி.யு.சிங் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை இன்று(ஜன 30) பரிசீலனை செய்தது.

    மனுதாரர்கள் தங்களின் தனி மனுக்களை சீக்கிரம் விசாரிக்க வேண்டும் என்று கோரி இருந்தனர்.

    இதனையடுத்து, பிபிசி ஆவணப்படம் மீதான தடைக்கு எதிரான மனுக்களை பிப்ரவரி 6ஆம் தேதி விசாரிக்க அமர்வு ஒப்புக்கொண்டது.

    ஒரு மனு சர்மாவால் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மற்றொன்று மூத்த பத்திரிகையாளர் என் ராம், ஆர்வலர்-வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மோடி
    நரேந்திர மோடி
    இந்தியா
    இங்கிலாந்து

    சமீபத்திய

    அமெரிக்கா ஜனாதிபதிக்கு இணையாக சம்பளம் பெறும் போப் ஆண்டவரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? போப் லியோ XIV
    'கிரியேட்டிவ் பெயர்கள்... யதார்த்தத்தை மாற்றாது': அருணாச்சலப் பிரதேச இடங்களுக்கு சீனா பெயர் மாற்றுவது குறித்து இந்தியா அருணாச்சல பிரதேசம்
    தவறுதலாக எல்லை தாண்டிச் சென்ற BSF வீரரை மீதும் இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான் இந்திய ராணுவம்
    பதிலடி நடவடிக்கையாக, இந்திய தூதரை 'நம்பிக்கையில்லாதவர்' என்று பாகிஸ்தான் அறிவிப்பு; நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேரம் கெடு பாகிஸ்தான்

    மோடி

    PM கேர்ஸ் நலத்திட்டம் ஆரம்பித்து 2 ஆண்டுகளில் 13,000 கோடி வசூல்! இந்தியா
    நரிக்குறவர், குருவிக்காரர் சாதிகள் பழங்குடியினர் பட்டியலில் சேரப்போகிறதா? ஸ்டாலின்
    பிரதமர் மோடி பிறந்த ஊருக்கு உலகப் பாரம்பரிய நகரம் என்ற தகுதி! இந்தியா
    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! பிரதமர் மோடி

    நரேந்திர மோடி

    சமஸ்கிருதம்-தமிழ்: பழமையான மொழிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்ன செய்திருக்கிறது? இந்தியா
    தேசிய ஸ்டார்ட்அப் தினம்: ஸ்டார்ட்அப் துறையில் புதிய முயற்சிகள் ஊக்குவிப்பு இந்தியா
    பிரதமர் மோடியின் பிபிசி ஆவணப்படத்தால் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் 4 பேர் கைது இந்தியா
    பிரதமர் மோடி மற்றும் எகிப்திய ஜனாதிபதியின் டெல்லி சந்திப்பு: முக்கிய முடிவுகளை எடுத்த இரு நாடுகள் குடியரசு தினம்

    இந்தியா

    ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் - காஷ்மீரில் 30ம் தேதி பிரமாண்ட நிறைவு விழா இந்தியா
    டெல்லி வரை அதிர வைத்த நேபாள நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8ஆக பதிவு இந்தியா
    பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 11 குழந்தைகளுக்கு ராஷ்ட்ரீய பால் புரஸ்கர் விருது மோடி
    வைரல் வீடியோ: 'மனி ஹெய்ஸ்ட்' கதாபாத்திரமாக மெட்ரோவில் வலம் வந்த நபர் வைரல் செய்தி

    இங்கிலாந்து

    2022ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய சம்பவங்கள்! உலகம்
    கர்ப்பமானதால் பணியை விட்டு நீக்கப்பட்ட பெண் - இங்கிலாந்தில் அரங்கேறிய சம்பவம் உலக செய்திகள்
    இங்கிலாந்து அரச குடும்ப சர்ச்சை: இளவரசர் ஹாரி தாக்கப்பட்டாரா?! உலகம்
    மனிதர்களின் உயிர் உங்களுக்கு பகடைக்காயா?! இளவரசர் ஹாரியை விமர்சிக்கும் தாலிபான்! உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025