NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பரவும் புதிய வகை கொரோனா - கேரளாவில் ஒரே நாளில் 3 பேர் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பரவும் புதிய வகை கொரோனா - கேரளாவில் ஒரே நாளில் 3 பேர் பலி 
    பரவும் புதிய வகை கொரோனா - கேரளாவில் ஒரே நாளில் 3 பேர் பலி

    பரவும் புதிய வகை கொரோனா - கேரளாவில் ஒரே நாளில் 3 பேர் பலி 

    எழுதியவர் Nivetha P
    Dec 20, 2023
    01:34 pm

    செய்தி முன்னோட்டம்

    நாடு முழுவதும் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் இதன் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது.

    அதிலும் கேரளா மாநிலத்தில் இந்த புதிய வகை கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது.

    அதன்படி அங்கு கடந்த நவம்பரில் 479 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிப்படைந்த நிலையில், இம்மாத துவக்கத்தின் 8 நாட்களிலேயே 825 பேர் கொரோனாவால் பாதிப்படைந்தது உறுதி செய்யப்பட்டது.

    மேலும் ஓர் உயிரிழப்பும் ஏற்பட்டிருந்தது.

    இந்தியளவில் கொரோனாவால் பாதிப்படைவோரில் 90% கேரளாவை சேர்ந்தோர் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

    இதனையடுத்து இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் அம்மாநில அரசு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

    கொரோனா 

    மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா தலைமையில் இன்று ஆலோசனை 

    இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி, கேரளாவில் நேற்று(டிச.,19)ஒரேநாளில் மட்டும் 292 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல் நேற்று ஒரேநாளில் சிகிச்சை பலனின்றி கொரோனா தொற்று பாதிப்பால் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    இதனிடையே அம்மாநில சுகாதாரத் துறை மற்றும் குடும்பநல அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் இதுவரை 2,041 பேர் கொரோனாவால் பாதிப்படைந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் நேற்று மட்டும் கொரோனா 341 பேருக்கு உறுதிச்செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே, நாடு முழுவதும் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா தொற்று விவகாரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா தலைமையில் இன்று(டிச.,20)இணை-அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    கேரளா மாநில அறிக்கை 

    As per the Ministry of Health and Family Welfare, Kerala reported 292 new active cases of COVID-19 and 3 deaths yesterday. The total number of active cases in the state is 2041. pic.twitter.com/uwoG6Fx0Fj

    — ANI (@ANI) December 20, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொரோனா
    தொற்று
    வைரஸ்
    சுகாதாரத் துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கொரோனா

    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் இந்தியா
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் இந்தியா
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் இந்தியா
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் இந்தியா

    தொற்று

    பகலில் தூங்கினால் என்ன ஆகும் தெரியுமா? உடல் நலம்
    சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த தாய்-மகள் இருவருக்கு கொரோனா தொற்று கொரோனா
    உருமாறிய கொரோனா - மேற்குவங்க மாநிலத்தில் 4 பேருக்கு தொற்று உறுதி கொரோனா
    கேரளாவில் 19 பள்ளி சிறார்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு வைரஸ்

    வைரஸ்

    'மெட்ராஸ் - ஐ' பருவகாலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடதாவை உடல் நலம்
    கர்நாடகாவில் பரவும் ஜிகா வைரஸ் - 5 வயது சிறுமிக்கு தொற்று உறுதி இந்தியா
    மகாராஷ்டிராவில் தட்டம்மை நோய் பரவலைக் கட்டுப்படுத்த போதுமான அளவு தடுப்பூசிகள் வேண்டும் - எம்.பி. வேண்டுகோள் இந்தியா
    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்

    சுகாதாரத் துறை

    இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: ஒரே நாளில் 1590 பாதிப்புகள் இந்தியா
    வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ICMR அதிரடி நடவடிக்கை கொரோனா
    கொரோனா அதிகரிப்பு - தினசரி பரிசோதனை எண்ணிக்கையை 11,000ஆக உயர்த்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல் தமிழ்நாடு
    7 நாட்களில் 3 மடங்கு அதிகரித்த கொரோனா: மத்திய சுகாதார அமைச்சர் இன்று ஆலோசனை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025