NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜிப்மர் மருத்துவமனை பெண் ஊழியர் கொலை வழக்கில் புதிய திருப்பம் - க்ரைம் ஸ்டோரி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜிப்மர் மருத்துவமனை பெண் ஊழியர் கொலை வழக்கில் புதிய திருப்பம் - க்ரைம் ஸ்டோரி 
    ஜிப்மர் மருத்துவமனை பெண் ஊழியர் கொலை வழக்கில் புதிய திருப்பம் - க்ரைம் ஸ்டோரி

    ஜிப்மர் மருத்துவமனை பெண் ஊழியர் கொலை வழக்கில் புதிய திருப்பம் - க்ரைம் ஸ்டோரி 

    எழுதியவர் Nivetha P
    Oct 08, 2023
    02:16 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்த வார Newsbytes.,ன் க்ரைம் ஸ்டோரி: புதுச்சேரி மாநிலம் வில்லியனூரை அடுத்த அரியூர்பேட்டை பகுதியில் மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகம், இவரது மனைவி கோவிந்தம்மாள்(40).

    கோவிந்தம்மாள் ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 3ம் தேதி அரியூரில் நடந்து சென்று சென்ற இவரை மர்மநபர்கள் சிலர் இரும்பு ராடால் தலையில் அடித்து படுகொலை செய்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    அதன்படி, கள்ளக்காதல் விவகாரமாக இருக்கக்கூடும் என்று சந்தேகித்த காவல்துறை அப்பகுதியில் இருந்த வாலிபர் ஒருவரை விசாரணை செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

    விசாரணை 

    மோப்ப நாய் கொண்டு ஆய்வு 

    தொடர்ந்து, மோப்ப நாய் கொண்டு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தியதில் கோவிந்தம்மாளை தாக்கிய இரும்புக்கம்பி கண்டறியப்பட்டது.

    அந்த கம்பி எங்கு தயாரிக்கப்பட்டது என்று காவல்துறையினர் ஆய்வு செய்ததில் திருபுவனையில் உள்ள பிரபல இரும்பு கம்பெனியில் தயாரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

    அதனையடுத்து அந்த நிறுவனத்தில் பணிபுரிவோர் குறித்து மேற்கொண்ட விசாரணையில் கோவிந்தம்மாளின் பக்கத்துவீட்டில் வசிக்கும் பஞ்சமூர்த்தி(33) அங்கு பணிபுரிகிறார் என்று தெரியவந்துள்ளது.

    இதனால் அவரை கைது செய்த காவல்துறை விசாரணை செய்துள்ளனர்.

    சாபம் 

    கொலை செய்ததை ஒப்புக்கொண்ட குற்றவாளி 

    காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் கோவிந்தம்மாளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

    இதனை தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறை அவரிடம் விரிவான விசாரணை நடத்தியுள்ளார்கள்.

    அப்போது, பஞ்சமூர்த்திக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில் அவரது மனைவி கர்ப்பமாக உள்ளார்.

    சில தினங்களுக்கு முன்னர் கோவிந்தம்மாள் மீன் கழுவிய நீரை பஞ்சமூர்த்தி வீட்டின் வாசலில் ஊற்றியுள்ளார்.

    வாக்குவாதம் 

    மனைவிக்கு சாபம் விட்டதால் ஆத்திரம் 

    இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் வந்துள்ளது.

    அப்போது உன் மனைவியின் கர்ப்பம் கலைந்துவிடும் என்று கோவிந்தம்மாள் சாபம் விட்டதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக அவர்மீது ஆத்திரம் கொண்ட பஞ்சமூர்த்தி தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்து இரும்பு கம்பியினை எடுத்து வந்துள்ளார்.

    அந்த கம்பியினை அவர் வீட்டுக்கு செல்லும் வழியில் மறைத்து வைத்துள்ளார்.

    அதன் பின்னர் சம்பவ தினத்தன்று கோவிந்தம்மாள் பணியினை முடித்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்துள்ளார்.

    அப்போது பஞ்சமூர்த்தி தான் மறைத்து வைத்திருந்த இரும்புக்கம்பியினை எடுத்து கோவிந்தம்மாளின் தோள்பட்டையில் அடித்துள்ளார்.

    கூச்சல் 

    சரமாரியாக தாக்கி கொலை செய்த இளைஞர் சிறையில் அடைப்பு 

    அப்போது வலியில் கோவிந்தம்மாள் கூச்சலிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

    இதனால் பஞ்சமூர்த்தி கோவிந்தம்மாளை மீண்டும் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

    இதில் கோவிந்தம்மாள் நிலை குலைந்து தடுமாறி கீழே விழுந்தவுடன் அவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய பஞ்சமூர்த்தி, கொலை செய்ய பயன்படுத்திய இரும்பு கம்பியினை அங்கிருந்த மரத்தின் மேல் மறைத்து வைத்துவிட்டு ஒன்றும் அறியாதது போல் இரவு பணிக்கு சென்றுள்ளார்.

    மறுநாள் காலையில் வீடு திரும்பிய அவர், நடந்த கொலைக்கும் அவருக்கும் சம்மந்தம் ஏதும் இல்லாதது போல் இயல்பாக இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

    தற்போது பஞ்சமூர்த்தியின் வாக்குமூலத்தினை பெற்ற காவல்துறை அவரை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    க்ரைம் ஸ்டோரி
    கைது
    சிறை
    கர்ப்பம்

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    க்ரைம் ஸ்டோரி

    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 1 - க்ரைம் ஸ்டோரி கைது
    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 2 - க்ரைம் ஸ்டோரி காவல்துறை
    நர்ஸ் வேடமிட்டு விஷ ஊசிப்போட்டு மனைவியை கொலை செய்ய முயற்சித்த முன்னாள் காதலி - க்ரைம் ஸ்டோரி  கேரளா
    மாணவிகளை மசாஜ் செய்ய வற்புறுத்தி அத்துமீறிய தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது-க்ரைம் ஸ்டோரி  கைது

    கைது

    கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின மக்கள் - போலீஸ் பாதுகாப்புடன் சென்று வழிபாடு  திருவண்ணாமலை
    செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் - உச்சநீதிமன்றம் அதிரடி உச்ச நீதிமன்றம்
    செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12ம் தேதி வரை காவலில் வைத்து அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி செந்தில் பாலாஜி
    அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியை கைது செய்யவில்லை: அமலாக்கத்துறை அறிக்கை செந்தில் பாலாஜி

    சிறை

    புழல் சிறையில் செந்தில் பாலாஜி; வைரலாகும் அவரின் சாப்பாடு மெனு  செந்தில் பாலாஜி
    முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு  காவல்துறை
    பாரதியாரின் 103வது நினைவுநாள் - கடலூர் மத்திய சிறையிலுள்ள சிலைக்கு போலீசார் மரியாதை கடலூர்
    இன்று வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு - ஓர் அலசல்  தமிழ்நாடு

    கர்ப்பம்

    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை - தவறான சிகிச்சை காரணமாக பெண் குழந்தையின் கை முறிவு  செங்கல்பட்டு
    பட்டுக்கோட்டையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய், சேய் இருவரும் பலி  குழந்தைகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025