NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உணவு பாதுகாப்பு துறையின் புதிய நடைமுறை-ஆண்டுதோறும் உரிமத்தை புதுப்பிக்கணும்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உணவு பாதுகாப்பு துறையின் புதிய நடைமுறை-ஆண்டுதோறும் உரிமத்தை புதுப்பிக்கணும்
    உணவு பாதுகாப்பு துறையின் புதிய நடைமுறை-ஆண்டுதோறும் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்

    உணவு பாதுகாப்பு துறையின் புதிய நடைமுறை-ஆண்டுதோறும் உரிமத்தை புதுப்பிக்கணும்

    எழுதியவர் Nivetha P
    Feb 10, 2023
    11:21 am

    செய்தி முன்னோட்டம்

    மத்திய அரசின் உணவு பாதுகாப்பு துரையின் கீழ், ஐந்தாண்டுகள் வரை 'உரிமம்' வழங்கிய நிலையில் தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    உணவு தானியம், மாவினை அரைப்பது போன்ற எந்தவகையில் உணவு தயார் செய்பவர்களும், உணவு பொருளை வாங்கி பேக்கிங் செய்து விற்பவர்களும் இனி ஆண்டுதோறும் 'உரிமத்தை' புதுப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆண்டுக்கு 12 லட்சம் மேல் வருமானம் ஈடுபவர்கள் நிச்சயம் தக்க உரிமத்தை எடுக்க வேண்டும்.

    அதற்கு குறைவான வருமானம் இருந்தால் ஆண்டுக்கு ரூ.100 செலுத்தி பதிவு சான்றிதழை பெற முடியும்.

    முன்னதாக, உரிமம் பெற ஆண்டுக்கு ரூ.2000 வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ.10,000 வரை செலுத்தி பெற்று கொள்ளலாம் என்ற விதிமுறை தற்போது மாற்றப்பட்டுள்ளது.

    உயர்நீதிமன்ற மதுரை கிளை

    தக்க உரிமம் இல்லாமல் வியாபாரம் செய்தால் 6 மாத சிறை, ரூ.1 லட்சம் அபராதம்

    அதன்படி, 2023ம்ஆண்டின் புதிய நடைமுறைப்படி, இனி ஆண்டுதோறும் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஜனவரி 11ம்தேதிக்கு முன்னர் ஐந்தாண்டுகளுக்கான உரிமத்தை பெற்றிருந்தால், புதுசாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

    3 முதல் 5ஆண்டுகளுக்கு எடுக்கப்பட்ட உரிமம் காலாவதியாகும் பட்சத்தில், புதுசாக விண்ணப்பித்துக்கொள்ளலாம் என உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

    தொடர்ந்து, பதிவுசான்றிதழ் அல்லது உரிமம் இல்லாமல் வியாபாரம் செய்தால் 6மாத சிறை, 1லட்சம் அபராதம் விதிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையும் அறிவித்துள்ளது.

    இதனைதொடர்ந்து பேக்கிங் செய்யும் லேபிளில் தயாரிக்குமிடம், முகவரி, தொலைபேசி எண், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி உள்ளிட்ட 16வகையான தகவல்கள் இருக்க வேண்டும்.

    அப்படி இல்லையெனில் ரூ.2லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    இந்தியா

    சமீபத்திய

    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ

    மத்திய அரசு

    நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல் கோவிட் தடுப்பூசி
    பொருளாதார ஆய்வறிக்கை: 2023-24 நிதியாண்டில் ஜிடிபி 6.5 சதவீத வளர்ச்சி பதிவாகும் பட்ஜெட் 2023
    மத்திய பட்ஜெட் 2023-24: சிறப்பம்சங்கள் நிர்மலா சீதாராமன்
    பட்ஜெட் 2023-24: நிதியமைச்சரின் சீரியஸான பட்ஜெட் உரையின் ஊடே நடைபெற்ற, சில சுவாரஸ்ய தருணங்கள் பட்ஜெட் 2023

    இந்தியா

    ஊழியர்கள் பணிநீக்கம் செய்யும் பட்டியலில் இணைந்தது இன்ஃபோசிஸ் ஆட்குறைப்பு
    வைரல் - 8 மணி நேரம் ஸ்கூட்டர் பயணம் 50 வயதுடைய பெண் தோழிகள் வைரல் செய்தி
    அமெரிக்காவின் பழமைவாய்ந்த சட்டப்பத்திரிக்கை தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நியமனம் அமெரிக்கா
    பகவத் கீதை அடிப்படையில் கீதா GPT-யை உருவாக்கிய கூகுள் ஊழியர்! சாட்ஜிபிடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025